கவிதையும் இலக்கியமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதையும் இலக்கியமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜூலை, 2012

கவிக்கோவின் கவிதை


kavikko-abdul-rahman
தொடக்கம் உன் பெயரால்
தொடர்வதெல்லாம் உன் அருளால்
அடக்கம் நீ என் நெஞ்சில்
அடங்காத பேரொளியே
முதல்வா உன்னை என்
முதலாகக் கொண்டதால்
என் வாழ்க்கை வணிகத்தில்
இழப்பே இல்லை

வியாழன், 28 ஜூன், 2012

தாயும் சேயும் கருவறையில்...


அகத்தே நீ உதைக்க
புறத்தே காணாத பேரின்பம்
உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும்
எனை வென்று சிறை மீட்பேன்
என் கண்மணியே உன்னை

திங்கள், 14 மே, 2012

கொடுக்கிறேன்.....(கவிக்கோ அப்துல் ரஹ்மான்)


கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

புதன், 4 ஏப்ரல், 2012

நீரோடை (ஹைக்கூ)

அழுதவானம்
எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….
நீரோடை

புதன், 14 மார்ச், 2012

ஏகத்துவம்

ஏகவார்த்தை யுத்தம்!

ஒற்றைச் சொல் பதித்த
உயிர் மூச்சுச் சத்தம்!

சரியான மனங்களைக்
கொள்ளையிட்ட கொள்கை!

சரியான தனங்களைக்
கொல்லையிலிட்ட வெல்கை!

சத்தியம் சாத்தியமாகும்
நித்திய நிலை!

சித்தியடைய ஓரேகத்துவவாதிக்குச்
சத்திய வலை!

புதன், 8 பிப்ரவரி, 2012

பாதை மறிக்கப்பட்ட நதியே பீறியெழும்!!

பரந்து விரிந்த பூமியின் அகண்ட பெரும்பள்ளங்களை மேவிக்கிடக்கின்ற இந்நீலக்கடல்

சனி, 17 டிசம்பர், 2011

கல்லறை வாசகங்கள்


ஒரு கல்லூரிப் பட்டமளிப்பு விழாவின்போது வைரமுத்து உதிர்த்த வைர வரிகள் சிலதை இதோ உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


மகா அலக்ஸாண்டரின் கல்லறையில்:

"இந்த உலகம் முழுவதுமே போதாது
என்று சொன்னவனுக்கு
இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது."

வெள்ளி, 16 டிசம்பர், 2011

சிரிப்பு (கவிஞர் வைரமுத்து)


(எங்கே னண்பர்களே நீங்களும் ஒரு முறை சிரித்துத்தான் பாருங்களேன்!)

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

ஞாயிறு, 12 ஜூன், 2011

கேட்டுச் சுவைத்த கவிதை ஒன்று

"என்னை மணம் முடிக்கும் போதுதான்
வரதட்சணையாகக் கேட்டாய்
பொன்னையும், பொருளையும்;

இறக்கும் போதும் கேட்கின்றாயே
வரதட்சணையாக
என் பூவையும் பொட்டையும்."

சனி, 16 ஏப்ரல், 2011

பிரபாகரன் இருக்கிறானா இல்லையா?


கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

* * * * *

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அன்பின் பெறுமதி பூச்சியம்!

எழுதியதை நிறுத்திய சிறுவன் எழுதிய தாளை தன் தாயிடம் நீட்டினான். கைகளைத் துடைத்துவிட்டு தாளை வாங்கிக் கொண்ட தாய் தனது செல்லப் புத்திரன் எழுதியிருந்ததை ஆசையுடன் படித்தாள்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

தப்பில்ல தம்பி தப்பில்ல

இது புத்தளத்து சகோதரர் ஒருவரால் எழுதப்பட்ட கவிதை. பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்று. அண்மையில் திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலையில், பூஸரி ஆசிரியரால், வாசிக்கப்பட்டு, பலத்த வரவேற்பையும் பெற்றது.

கவிதையின் நோக்கம், தற்போதைய இளைஞர்களின் நிலை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதனை  இங்கே பிரசுரம் செய்கிறோம்.  

வெள்ளி, 7 ஜனவரி, 2011

வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஒரு மகிழ்ச்சிக் கவி

கவியுள்ளங்களின் தரிசனத்துக்காக,

வைரமுத்துவின் வீட்டுச் சமையல்.......