திங்கள், 27 டிசம்பர், 2010

முஸ்லிம் சமூகத்தின் மத்திய நிலையம் என்ற வகையில் மஸ்ஜித்கள்

- மஸ்ஜித் எனும் சொல் ஸ{ஜுத் எனும் சொல்லில் இருந்து உருவாகியது.

- மஸ்ஜித்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை செயற்படுத்துவதற்கும், நிலை நிறுத்துவதற்குமான மத்திய நிலையமாகும்.

- மஸ்ஜித்களின் புனிதத்துவம்:
        1. மஸ்ஜித்கள் முஸ்லிம்களின் புனிதத் தலங்களாகும்.
      2. ஷிர்க்கைக் கொண்டோ, அழுக்குகளைக் கொண்டோ மஸ்ஜித்களை அசுத்தப்படுத்தாதிருத்தல்.
     3. மஸ்ஜித்கள் பக்தி பூர்வமானவையாகவும், எளிமையான தோற்றம் கொண்டவையாகவும் அமைய வேண்டும்.
  4.கபுறுகளுக்கு மேலால் மஸ்ஜிதகள் அமைக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளமை.
          மஸ்ஜித்களில் வியாபார நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளமை.


- மஸ்ஜித்களின் முக்கியத்துவம் பற்றிக் குர்ஆனும், சுன்னாவும்.

1. அல்-குர்ஆன் ( 9: 18 )
2. நகரங்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்துக்குரிய இடம் அதனுடைய மஸ்ஜித்களாகும்.  மிக வெறுப்புக்குரிய இடம் அதனுடைய அங்காடிகளாகும். (முஸ்லிம்)

- நபியவர்களது காலத்து மஸ்ஜித்கள் சமூகத்தின் மத்திய நியைங்களாக நின்று பணியாற்றிய விதம்.
        1. சமூக இணக்கப்பாடடிற்கும், தொடர்பாடலுக்குமுரிய இடம்.
        2. இஸ்லாமிய பிரசார கேந்திர நிலையம்.
        3. ஆன்மீகப் பயிற்சிப் பாசறை.
        4. அரச கரும பீடம்.
        5. சமூக கலாசார மத்திய நிலையம்.
        6. இஸ்லாமியக் கல்விக் கூடம்.
        7. பொருளாதார கேந்திர நிலையம்.
        8. இராணுவ மத்திய நிலையம்.
        9. நீதிமன்றம்

- குலபாஉர் ராஷிதூன்கள் காலத்தில் மஸ்ஜித்கள் மேற்குறித்த முறையில் பணியாற்றியதோடு பின்வரும் அடிப்படைகளிலும் செயல்பட்டன.
        1. கலீபாத் தெரிவும், பைஅத்தும் மஸ்ஜித்களில் இடம் பெற்றன.
        2. மஜ்லிஸ் அஷ்ஷ_ரா ஆலோசனை சபை மஸ்ஜித்களில் இயக்கப்பட்டது.
        3. நீதிமன்றங்களாக பயன்படுத்தப்பட்டன.
  4. பைதுல் மாலுக்குரிய செயற்பாடுகள் மஸ்ஜித்களில் மேற்பெகாள்ளப்பட்டன.
 
- குலபாஉர் ராஷிதூன்கள் ஆட்சிக்குப் பிற்பட்ட கால மஸ்ஜித்கள் வகித்த பங்கு.
1. தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் துறை நிலையங்களாக இயங்கியமை.
2. மஸ்ஜித்களை இணைத்த வகையில் நூல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இயங்கியமை.
 3. அறிவு ஆராய்ச்சி நிலைங்கள் மஸ்ஜிதை இணைத்து அமைக்கப்பட்டமை.

- மஸ்ஜித்களின் இன்றைய நிலையும், அதற்கான காரணங்களையும் ஆராய்தல்.
1. வெறுமனே சில இபாதத்களை மாத்திரம் மேற்கொள்ளும் இடமாக மாறியுள்ளமை.
2. தகுதியான நிர்வாகிகளை இமாம்களை மஸ்ஜித்கள் கொண்டிருக்காமை.
 3. மஸ்ஜித்களின் செயற்பாட்டிற்கான பொருத்தமான திட்டங்கள் இல்லாமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக