வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?

sci-1276-frontதினம் அறிவியலில் பல விஷயங்களை கண்டுபிடிக்கின்றனர். அவற்றில் சில விஷயங்கள் ஏதோ வகையில் பொதுமக்கள் வரை நீட்சி பெறுகிறது. மருந்துகள், வாகனங்கள், செல்ஃபோன், இணையம், ஏகே47, காண்டம், சௌபாக்கியா வெட்கிரைண்டர் இப்படி. உலக மக்கள் அனைவரும் பங்கெடுத்து, சிந்தித்து, தங்களுக்கு எது தேவை என்று பரிந்துரைக்கவும் பல கண்டுபிடிப்புகளையும், கவலைகளையும் அறிவியல் காட்டிக்கொண்டே இருக்கிறது. அணுகுண்டு, ஸ்டெம் செல்கள், உலகளாவிய சூடேற்றம், குடிநீர் பற்றாக்குறை இப்படி.
தினமும் தொலைக்காட்சி, ரேடியோ, நாளிதழ் என்று (இணையம் விட்டு) நுகரும் பொதுமக்களின் பிரதிநிதியாகிய நமக்கு இப்படிப்பட்ட தற்கால அறிவியல் விஷயங்கள், கூற்றுகள், எவ்வளவு தெரிந்திருக்கவேண்டும்?
அதாவது, சாமான்ய மக்களான நமக்கு, அறிவியல் சிந்தையுடன் உலகை நோக்கவேண்டும் என்றால், எவ்வளவு (பொது) அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்? பதில் உண்டா?
அமெரிக்காவில் இந்தவருடம் (2009) பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய (வருடா வருடம் நடத்துகிறர்கள்) கருத்துக்கணிப்பில் இதற்கான பதிலை 12 அறிவியல் கேள்விகள் மூலம் கண்டுள்ளனர். கீழே அக்கேள்விகளின் தமிழாக்கத்தையும், பதில்களை சற்று மாற்றிப்போட்டும் கொடுத்துள்ளேன். படிக்க மொத்தம் ஐந்து நிமிடம் பிடிக்கும். பதிலளித்துதான் பாருங்களேன். அமெரிக்க பொதுமக்களை காட்டிலும் தமிழ்கூறும் இணைய-நல்லுலகில் நாம் அறிவியல் விஷயத்தில் எப்படி தேறுகிறோம் என்று தெரிய.
விடைகள், மற்றும் அமெரிக்க பொதுமக்கள் முடிவுகள், கட்டுரை இறுதியில்.
கேள்விகள்
1) மாரடைப்பு சாத்தியத்தை குறைக்க மெடிக்கல் கடையில் (பிரிஸ்கிருப்ஷன் இன்றி) கிடைக்கும் எந்த மருந்தை டாக்டர்கள் சிபாரிசு செய்கின்றனர்?
அ) ஆஸ்பிரின்
ஆ) கொர்டிஸோன்
இ) ஆண்டாசிடுகள்

2) வானியலாளார்களின் கூற்றுபடி, கீழே உள்ளவற்றுள் எதை இனி (சூரியனை சுற்றும்) கிரகம் என்று கருதத்தேவையில்லை?
அ) புளூட்டோ
ஆ) நெப்டியூன்
இ) சனி
ஈ) புதன்

3) கீழே உள்ளவற்றில் எதனால் சுனாமி வரலாம்?
அ) கடலின் அடியில் நிலநடுக்கம்
ஆ) சூடான கடல் ஓட்டம்
இ) ஓர் இடத்தில் குவியும் மீன் கூட்டம்
ஈ) உருகும் பனிக்கட்டியாறு

4) உலகளாவிய இட நிர்ணயிப்பு கருவி (கிளோபல் பொஸிஷனிங் சிஸ்டம், GPS) எதை சார்ந்து வேலைசெய்கிறது?
அ) செயற்கை கோள்கள்
ஆ) காந்தங்கள்
இ) பூமி
ஈ) சூரியன்

5) விஞ்ஞானிகள் உலகளாவிய சூடேற்றம் நடப்பதற்கு எந்த வாயு முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர்?
அ) கார்பன் டை ஆக்ஸைடு
ஆ) ஹைட்ரஜன்
இ) ஹீலியம்
ஈ) ரேடான்

6) ஸ்டெம் செல்கள் மற்ற செல்களை காட்டிலும் முக்கியமாக எவ்வகையில் வேறுபடுகிறது?
அ) அவை மற்ற வகையான செல்களாக வளர்மாற்றம் அடையக்கூடிய திறனுடையவை
ஆ) எலும்புகளில் (போன்-மேரோ ) மட்டும் காணப்படும்
இ) தாவரங்களில் மட்டும் காணப்படும்

7) விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் எதை கண்டுபிடித்தனர்?
அ) தண்ணீர்
ஆ) காந்தம்
இ) தாவரங்கள்
ஈ) பிளாட்டினம்
கீழே உள்ள வினாக்களுக்கு சரியா, தவறா என்று குறிப்பிடுங்கள்

8 ) நாம் வாழும் கண்டங்கள் (நிலப்பிரதேசங்கள்) பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது; தொடர்ந்து இவ்வாறு செய்துகொண்டே இருக்கும்
அ) சரி
ஆ) தவறு

9) லேஸர் கருவி ஒலியலைகளை குவிப்பது மூலம் வேலை செய்கிறது
அ) தவறு
ஆ) சரி
10) ஆண்ட்டிபயாட்டிக்ஸ் (மருந்துகள்) வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொன்றுவிடும்
அ) தவறு
ஆ) சரி

11) எலக்ட்ரான் என்பது அணுவைவிட சிறியது
அ)  சரி
ஆ)  தவறு

12) அனைத்து கதிரியக்கமும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது
அ) தவறு
ஆ) சரி

உங்களுக்கு அனைத்து விடையும் சரி என்றால், உங்களுக்கும் கீழே உள்ள என் மதிப்பு-படம் பொருந்தும். அமெரிக்க சாமான்ய மக்கள் எப்படி தேறி இருக்கிறார்கள் என்றும் படத்தில் இருக்கிறது.
sci-quiz-res
கட்டுரை எச்சம்: நீங்கள் நன்றாக தேறியிருந்தால், கேள்விகளை உங்கள் பெற்றோர், உறவினர், வீட்டு வேலைகளை செய்பவர், செல்ஃபோன் வைத்திருக்கும் தேங்காய் பறிப்பவர், சூடுவைக்காமல் மீட்டரும் போடாமல் உங்களை தினம் இட்டுகினு செல்லும் ஆட்டோ டிரைவர், பீச் சுண்டல் விற்கும் சிறுவன் இப்படி பலரிடம் கேட்டுப்பாருங்கள் (பிறகு, சரியான விடையையும், தேவையிருப்பின் சொல்லிவிடுங்கள்). தமிழ்மக்களின் பொது அறிவியல் நிலை பற்றி மனதில் ஒரு கணிப்பு நிகழும்.

எல்லா கேள்விகளுக்கும் விடை:  அ)

வேலை வாய்ப்புக்கள்

இலங்கை பொலீஸ் திணைக்களத்தில் 'பொலீஸ் பரிசோதகர் பதவி' மற்றும் 'பொலீஸ் கான்ஸ்டபிள் பதவி' என்பவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விபரங்கள் 30.04.2010 வர்த்தமானியில். இந்தப் பக்கத்தின் வலது கீழ் மூலையில் உள்ள " Government Gazzette in Tamil " என்ற இணைப்பை 'க்ளிக்' செய்யவும்.

புதன், 28 ஏப்ரல், 2010

நாம் எப்போது எழுச்சி பெறுவோம்?

ஒரு சமூகத்தின்  முன்னேற்றம், அபிவிருத்தி மற்றும் நாகரிக வளர்ச்சி போன்றவை அந்த சமுகத்தின் அறிவு, ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றிலேயே தங்கியிருக்கின்றன. இவை பற்றி எந்தக் கவனமும் செலுத்தப் படாமல் ஒரு சமூகம் இருக்குமென்றால், அந்தச் சமூகம் சீரழிவை நோக்கி மிக வேகமாக நடை பயிலுகிறது என்று அர்த்தம் கொள்ளலாம். கல்வியூட்டல், ஒழுக்கம் பேணல், வறுமை ஒழிப்பு என்பவற்றில் உயர்ந்து நின்ற சமுகங்கள் என்றுமே எழுச்சி பெற்று வாழ்ந்ததை நாம் வரலாறு நெடுகிலும் பல சந்தர்பங்களில் கண்டிருக்கிறோம்.

இலங்கையர், முஸ்லிம்கள் போன்ற சமூக அமைப்புக்குள் நாம் அடங்கி இருந்தாலும், கஹட்டோவிட்ட எனும் முஸ்லிம் கிராமத்தில் வாழும் ஒரு தனித்துவமான முஸ்லிம் சமுகம் என்ற வகையில், எம்மைச் சுற்றி வாழுகின்ற சகோதர சமூகங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, நாம் எவ்வளவு தூரம் எழுச்சி பெற்றிருக்கிறோம்? அவர்களை விட கல்வியால் நாம் எவ்வளவு தூரம் எழுச்சி பெற்றிருக்கிறோம்?! இதே போன்று ஒழுக்கம் மற்றும் பொருளாதார வளம் என்பவற்றில் நாம் எவ்வளவு எழுச்சி பெற்றிருக்கிறோம்?!! இவை பற்றி நாம் சிந்தித்தோமா? சிந்தித்தால்தானே வழி பிறக்கும்.

எமது கல்வித் துறையை நோக்கினால்................; எமக்கென்று தனித்துவமான பாடசாலைகள் இருக்கின்றன. ஒரு பாடசாலை நூற்றாண்டையும் கடந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், எம்மில் எத்தனை பேர் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, சட்டத்தரணிகளாக அல்லது ஏனைய உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள்? கீர்த்தி மிக்க எமது ஆசான்களை விட்டுப் பார்த்தால், மொத்தத்தில், புத்தி ஜீவிகள் என்று சொல்லக்கூடிய எத்தனை மனிதர்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்? அப்படி ஒரு மட்டத்தை அடைந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் கூட தமது உயர் கல்வியை ஊருக்கு வெளியே சென்று கற்று வந்தவர்களாகவே இருக்கிறார்கள். அந்தத் தெரிவுகள், முயற்சிகள் என்பன கூட, எமது ஊரின் அபிவிருத்தி பற்றிய சிந்தனை கொண்ட ஒரு குழுவால் வழி நடத்தப் பட்டதன்றி, தனித்தனியாக சுயமாக செயல்பட்டு பெறப்பட்டவையே.

தொடரும்...........

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

வர்த்தமானப் பத்திரிகை (Government Gazzette) இதே தளத்தில்!

எமது இளம் சந்ததியினரின் எதிர்கால நன்மை கருதி, அரச தொழில் வாய்ப்புகள் மற்றும் பாட நெறிகள்/ பரீட்சைகள் பற்றிய தகவல்கள் வெளியாகும் வர்த்தமானப் பத்திரிகை (Gazzette),  இன்றைய தினத்திலிருந்து இதே வெப் தளத்தினூடாக உங்களுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு வாரமும், வெள்ளிக் கிழமைகளில் வெளியாகும் வர்த்தமானப் பத்திரிகை, இன்ஷா அல்லாஹ், எமது தளத்திலும் அதே தினத்தில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறுதியாக வெளிவந்த வர்த்தமானப் பத்திரிகையை பெற்றுக் கொள்ள, இந்த தளத்தின் கீழேயுள்ள "Government Gazzette in Tamil" என்ற இணைப்பை "க்ளிக்" செய்யவும்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

Free PC filters move to fight porn

THE Federal Government has offered free pornography filters for home computers as it moves to shore up its political heartland with a pitch to families.

It will spend $116 million on PC-based filters for families and public libraries.

A mail and television campaign to promote the scheme is expected to begin next year before the federal election.

The cabinet this week finalised the package targeting offensive and pornographic material online after a push from Government MPs for mandatory filtering by internet service providers.

Communications Minister Helen Coonan withstood this push, emerging with a package which preserves the rights of adults to freely access internet content, but offering protection for children and teenagers.

The package won support yesterday from the backbencher who has led the strike against pornography, conservative Tasmanian senator Guy Barnett.

But it has not gone far enough to satisfy Family First senator Steve Fielding or Christian groups. The Government's back bench is also unlikely to give up on its campaign to establish ISP-based filtering.

The managing director of the Australian Christian Lobby, Jim Wallace, said last night the package was a "giant step" but did not go far enough.

"They have been very conservative about what could be achieved with internet service provider-based filtering," Mr Wallace said. "That's a bit of a shame."

Senator Barnett said Australia would adopt ISP filtering in time. The Government has allowed a trial of server-based filtering in Senator Barnett's home state of Tasmania.

Labor has already come out ahead of the Government in support of a "clean feed" scheme which filters inappropriate content at the server level.

The Opposition said yesterday the Government had not done enough to combat pornography.

"Instead of trying to look like it's doing something, the Government should tackle the problem directly — make ISPs responsible for filtering out extreme pornography, and protect Australian kids," said Labor's acting communications spokesman, Lindsay Tanner.

The Government's move against illicit material will extend to all public libraries, which will be given free filters.

Libraries will not be compelled to install them but the National Library of Australia, a Commonwealth facility, will be compelled to do so.

Families will be offered a choice of accredited filtering systems which will be accessible either by a CD mailed out to them, or by a direct download from a website the Government will develop over coming months.

Senator Coonan said the package was "not a one-size-fits-all" approach and did not attempt to dictate to every internet user "what they should and shouldn't see".

"It puts a safer internet experience within the grasp of every Australian family and it is a solution to the problem posed by internet pornography that is simple, safe, effective and free," she said.

ஒழுக்கச் சீர்கேட்டுக்குத் தீர்வு தேடும் முயற்சி

ஊரின் கல்வி முன்னேற்றம் சம்பந்தமாகவும் ஒழுக்கச் சீர்கேட்டுக்கு முடிவு கட்டுவது சம்பந்தமாகவும் கடந்த வாரம் MLSC யின் காரியாலயமான தாருஸ்ஸலாமில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. இது பற்றி இந்தத் தளத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

இந்தக் கலந்துரையாடலின் பின், கல்வி முன்னேற்றம் மற்றும் ஒழுக்க வாழ்வு ஆகிய இரண்டு நோக்கங்களுக்காகவும் பள்ளிவாசல்களின் நிருவாகிகளும் உள் வாங்கப்பட்ட ஒரு அதிகாரம் பொருந்திய குழு உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இதற்கான அடுத்த கூட்டம் 25.04.2010 ஞாயிற்றுக் கிழமை தாருஸ்ஸலாம் கட்டடத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்துக்கான அழைப்பு, பள்ளிவாசல் நிருவாகிகளுக்கு, ஜனாப் MAMM ஜிப்ரி, ஜனாப் MAM ஸில்மி மற்றும் ஜனாப் MFM பயாஸ் ஆகியோரின் ஒப்பத்துடன், ஊர்ப் பள்ளிவாசல்களுக்கு அனுப்பப் பட்டுள்ளன.

இந்தக் கூட்டம், குறித்த நோக்கத்தை அடைந்து கொள்ளும் சிறந்த ஒரு கூட்டமாக அமைய எமது பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கிளை கஹட்டோவிட்டவில்?!

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளையொன்றை எமது ஊரில் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக 'பளிச்' இற்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சர் அவர்கள் வழங்கி இருப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன. அரசாங்கக் கட்சி ஆதரவாளர்கள் சிலரே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

எமது ஊர் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிளவே இதற்குக் காரணம் என ஒரு சிலர் பேசிக் கொண்டார்கள். ஊரிலுள்ள கட்சி வேறுபாடுகளுக்கு மத்தியில், அதிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அதிகமாக உள்ள நிலையில், இது சாத்தியமா என வேறு சிலர் கேள்வி எழுப்பினர். குறித்த கிளை ஆரம்பிக்கப்பட்ட பின், அடுத்த வருடம் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட, தற்போதைய எமது பிரதேச சபை உறுப்பினரான ஜனாப் நாஸர் அவர்களை நிறுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளதாகவும் விபரமறிந்த மேலும் சிலர் கூறினர்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நாங்கு உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவகியிருப்பது குறிப்பிடத் தக்கது.

விரியும் விண்வெளி

 கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது. அத்துடன் முந்தைய பகுதிகளில் ஆய்வு செய்த குர்ஆனிய வசனங்களான,
'வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாகவும் அமைத்தோம்' (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 அல் அன்பியா - வசனம் 32)

'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..' (அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் - வசனம் 64),

'அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 15வது வசனம்)

'..வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா?..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 17வது வசனம்)

மேற்கண்ட வசனங்களை மெய்ப்பித்து நிற்கிறது.

ஏனைய கோள்களை, துணைக்கோள்களைப் போல பூகோளத்திலும் வாழ்க்கை வசதி அற்ற சூழ்நிலையும், அச்சூழ்நிலையை அளிப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் காற்று மண்டலக் கூரையும் இல்லாத நிலை நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக உயிரினம் தோன்றிய பூமியில் மட்டும் அந்த வசதியும், சூழ்நிலையும் ஏற்படுத்தப் பட்டிருப்பதிலிருந்தே பூமியில் உயிரினம் வாழவேண்டும் என்ற நாட்டமும், நோக்கமும் கொண்ட ஏதோ ஒரு சக்தி செயல் பட்டிருக்கிறது எனபதை உணரலாம். அதற்கு இதுவரை கூறப்பட்டவை அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களாகும்.

அறிவியல் அபிமானிகளே! இவற்றை மறுப்பதற்குரிய அறிவியல் ஆதாரங்கள் எவற்றையேனும் உங்களால் காட்ட முடியமா?.

மானிடக் கற்பனைகளையே கடை விரித்து வேதங்களாய் அறிமுகப் படுத்தப் பட்டதைக் காலங்காலமாய்க் கண்டு வந்ததால் இறை மறுப்பில் இறுகிப்போன உள்ளங்களே! உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா?. எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு - வினாவையும் எழுப்புகின்றனவா?. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை - பரிசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை - ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சிந்திக்கத் தெரிந்தவர்களே! விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அவைகளைச் சிந்தியுங்கள்.

நவீன அறிவியல் விண்ணகப் பருப்பொருட்களின் (Clestrial Bodies) சலனங்களை, வானசாஸ்திரத்தைப் (Astronomy) பற்றி என்ன கூறுகிறதோ அதை இம்மியும் பிசகாமல் 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறி நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள். பரிசுத்த குர்ஆன் பறை சாற்றுகிறது:

'நிச்சயமாக வானங்களும், பூமியும் (ஒன்றை விட்டு ஒன்று) விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான்: அவை இரண்டும் விலகுமாயின், அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது..'(அல்-குர்ஆன் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திர் 41வது வசனம்).

இந்த வசனத்தில் வானங்களும், பூமியும் விலகும் வாய்ப்பைக் கொண்டன என்றும், ஆனால் அவை விலகி விடாத ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவை விலகும் வாய்ப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்.

இந்த அற்புத வசனம் அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட வேண்டுமாயின் பூமியும், ஆகாயமும் விலகும் வாய்ப்பு இருக்கிறதா? என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள்?. விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா?. முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்ந்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம். நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா?.

விண்ணும், மண்ணும் விலகிப்போகும் வாய்ப்பைக் கொண்டன எனப் பறை சாற்றியதே பரிசுத்தக் குர்ஆன், அதை நிரூபிக்கக் கூடிய அறிவியல் சான்றுகள் எவை?. இதற்கு விடைகாணும் பொருட்டு இந்தப் பரிசுத்த குர்ஆனின் வசனத்திடம் மேலும் சற்று நெருங்கிச் செல்வோம்.

முதலாவதாக இவ்வசனம் விண்ணும், மண்ணும் விலகி விடாமல் தடுக்கப்படுகிறது எனக் கூறுவதிலிருந்து மண்ணானது (பூகோளம்) ஆகாயத்தில் பொருந்தியே இருக்கிறது. அவைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இல்லை எனக் கூறுகிறது. இதை வலியுறுத்தும் ஏனைய ஆதாரங்களுள் மேலும் ஒன்றைக் கவனியுங்கள்.

'ஆகாயத்தில் கிரகங்களுக்கான (கோள்களுக்கான) பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 16வது வசனம்).

இந்த வசனமும் கோள்களைச் சுற்றி ஏதேனும் இடைவெளி இருப்பதாகவோ, அப்படிப்பட்ட இடைவெளிகளில்தான் கோள்கள் இருப்பதாகவோ கூறவில்லை. மாறாகக் கோள்கள் இருப்பது ஆகாயத்தில்தான் எனக் கூறுகிறது. இதிலிருந்து பூகோளத்திற்கு மேல் போர்த்தப் பட்டுள்ள காற்று மண்டலமும் ஆகாயத்தைச் சார்ந்த பகுதியே என்பது தெளிவாகிறது.

இந்த இடத்தில் மற்றொரு ஐயமும் எழலாம். 'ஆகாயத்தை ஒரு கூரையாக ஆக்கினான்' என்று குர்ஆன் கூறிய (40:64) வசனம், காற்று மண்டலத்தை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறதே. ஆகவே கூரையாக ஆக்கப்பட்ட இப்பகுதியை இதற்கு மேலும் நாம் ஆகாயம் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்பதே அந்த ஐயமாக இருக்கும். இந்த ஐயத்திற்கும் பரிசுத்த குர்ஆன் பதிலளிக்கிறது.

'இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்?' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 22வது வசனம்).

இந்த வசனத்தில் மழையை அனுப்புவது ஆகாயத்திலிருந்தே எனக் கூறுகிறது குர்ஆன். மழை புறப்படும் இடம் ஆகாயம் எனக் குர்ஆன் கூறுவதால், மழை புறப்படும் இடமாகிய காற்று மண்டலம் ஆகாயத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதையும் பரிசுத்த குர்ஆனே விளக்குகிறது. எனவே ஆகாயம் என்ற சொல் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கியதே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

மேற்கண்ட வசனங்களிலிருந்து பூகோளத்தைப் பொருத்தவரை ஆகாயத்தின் கீழ் எல்லை எது எனத் தெரிந்து விட்டது. பூகோளம் (ஏனையக் கோள்களும்) இடைவெளியின்றி ஆகாயத்தில் பொருந்தியிருப்பதால், பூகோளத்தின் மேற்பரப்பிலிருந்து ஆகாயம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஆகாயத்தின் கீழெல்லையைக் கண்டு விட்டோம். சரி. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா?. நிச்சயமாக கூறுகிறது. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி அதற்குரிய ஆதாரங்களுடன் அருள்மறை குர்ஆன் கூறவே செய்கிறது.

'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் ஆகாயத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்தோம்.' (அருள்மறை குர்ஆன் 37 வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்)

'ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?. இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.' (அருள்மறை குர்ஆன் 71வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்).

மேற்கண்ட வசனங்களிலிருந்து இத்தலைப்புக்குத் தேவையான விபரங்களை மட்டும் பார்ப்போம். ஆகாயங்கள் மொத்தம் ஏழு எனவும், பூமிக்குரிய ஆகாயமே நட்சத்திரங்களின் அழகால் அலங்கரிக்கப் பட்டுள்ளது எனவும் எல்லா ஆகாயங்களிலும் நட்சத்திரங்கள் (சூரியன்), துணைக்கோள்கள் (சந்திரன்) உள்ளடங்கியுள்ளன எனவும் குர்ஆன் கூறுகிறது.

(குறிப்பு: இவ்வசனத்தில் காணப்படும் ஆகாயத்தின் எண்ணிக்கை ஏழு என்பதை மட்டுமே அறிவியல் இதுவரை புரிந்து கொள்ளாமல் இருக்கிறது. ஏனைய விஷயங்கள் யாவற்றையும் அறிவியல் உண்மை என நிரூபித்துவிட்டது. இன்ஷா அல்லாஹ் அவைகளை நாம் இனிவரும் அதற்குரிய தலைப்புகளில் விவாதிப்போம்.)

மேற்கண்ட வசனத்தில் ஆகாயங்கள் யாவும் நட்சத்திரங்களை உள்ளடக்கி இருக்கின்றன என கூறுவதிலிருந்து, ஆகாயத்தின் மேலெல்லையும் நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது எனக் காண்கிறோம்.

'நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது' என்று கூறினால் என்ன பொருள்?. பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா?. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா? என்ற வினா இப்போது எழுகிறது. இந்த வினாவுக்கும் பரிசுத்த குர்ஆனே விடையளிக்கிறது:

'ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 33 வது வசனம்)

மேற்படி வசனம் பிரபஞ்சம் முழுவதுமே ஆகாயமன்று. ஆகாயங்களுக்கும் நிச்சயமாக ஓர்; எல்லை இருக்கிறது. எனவே ஆகாயம் எனத் தனியான ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.

இதுவரை நாம் கண்ட விஷயங்களில் இருந்து பூமியின் மேற்பரப்பிலிருந்து துவங்கிக் கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய அகன்ற பெருவெளியாய்ப் பரவி, அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் உட்பட்டு தனிச் சிறப்புடன் விளங்குவதே ஆகாயம் (பேரண்டம்) எனக் கண்டோம்.

விண்ணகப் பருப்பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கி, நெடிதுயர்ந்து பரவிக் கிடக்கும் பேரண்டப் பெருவெளி. அதில் ஏனைய பருப்பொருட்களைப் போல் இடைவெளி ஏதுமின்றி பொருந்தி நிற்கும் பூகோளம். இந்த பூகோளம், அது பொருந்தி நிற்கும் பேரண்டப் பெருவெளியிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பைக் கொண்டதா?. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா?. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா?. இதுவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் கருப்பொருள்.

பரிசுத்த குர்ஆனின் பிரகடனத்தை, அதன் உண்மை நிலையை நமக்குக் கற்றுத்தர, அருள்மறை குர்ஆன் மேலும் கூறுகிறது:

'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான்: (அவை) யாவும் (அவைகளுக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் செல்கின்றன.' (அருள்மறை குர்ஆன் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியா - 33வது வசனம்).

அற்புதம்தான்! நவீன வான சாஸ்திரத்தின் திறவுகோலையும் நமக்களித்து, நாம் தேடிச் செல்லும் கருப்பொருளின் நுழைவாயிலுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஒப்பற்ற இறை வேதத்தின் மெய்யான இந்த பரிசுத்த வசனம்.

என்ன கூறுகிறது இந்த வசனம்? விண்ணில் காணப்படும் சூரியன், சந்திரன், உள்ளிட்ட பருப்பொருட்கள் யாவும் ஒரே இடத்தில் ஓய்ந்திருக்காமல் அவைகளுக்கென்றே இருக்கும் மண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் பயணம் செய்கின்றன எனக் கூறுகிறது.

அற்புதமல்லவா! இது புவி மையக் கோட்பாட்டை (Earth Centre Theory) தகர்த்தெறியவில்லையா?. (இது புவி மையக் கோட்பாட்டை Earth Centre Theory என்றால் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் பின்னர் விளக்குவோம்) எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே!. இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள்?. விண்ணகப் பருப்பொருட்களின் (Celestial Bodies) சலனத்தை மறுக்கிறீர்களா?. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை (Orbit) மறுக்கிறீர்களா?. இல்லை. இரண்டையுமே நீங்கள் ஒப்புக் கொண்டு இந்த வசனம் மெய்யான வசனமே என உங்களை அறிந்தோ - அறியாமலோ அதற்கு சாட்சியாக நிற்கிறீர்கள்.

பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க வந்த அறிவியல், இந்த விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?.

சந்திரன் மணிக்கு 3,600 கி.மீ. வேகத்தில் செல்கிறது. பூமியானது மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. சூரியன் மணிக்கு 9,00,000 கி.மீ. வேகத்தில் பாய்கிறது எனக் கூறுகிறது அறிவியல்.

சூரியன் மட்டும்தான் ஓடுகின்றதா? ஏனைய நட்சத்திரங்கள் ஓடவில்லையா?. ஏனில்லை?. அனைத்தும் ஓடுகின்றன. வானியல் அறிஞர்கள் நிறமாலை நோக்கிகளின் (Spectroscops) துணை கொண்டு விண்ணை ஆய்வு செய்யக் கற்றுக் கொண்ட பின் விண்ணில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை: யாவும் அவைகளுக்குரிய திசைகளிலும், திசை வேகத்திலும் (Orbital Velocity) சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறிப் பரிசுத்த குர்ஆன் மெய்யான இறைவேதமே என்பதற்கு தன்னையே சாட்சியாக அர்ப்பணித்து நிற்கிறது.

அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் - கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது (Milky Way Galaxy) என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?.

ஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ (இதுபற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் வேறு தலைப்பில் ஆய்வு செய்வோம்) நீங்கள் மறுக்கிறீர்களா?. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் (Telescope) பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா?.

அறிவார்ந்த நண்பர்களே! மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம்?. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது! விலகவே விலகாது! ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.

(இந்த இடத்தில் சகோதரர்கள் யாரும் அவசரப் பட வேண்டாம். இவை யாவும் ஒரு குறிப்பிட்ட தவணை (35:45) வரைதான் என்பதை வேறு தலைப்பில் நாம் விவாதிப்போம், இன்ஷா அல்லாஹ்)

விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா?. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன்?. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ - அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி?.

எப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (Light year) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும். ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

அருமை நண்பர்களே! அறிவியல் அபிமானிகளே! அடுத்த காரணத்தைக் காண்போம்.

வீதி ஒழுங்குகள் பேணப்பட வேண்டும்!

பாடசாலைகளுக்குச் சென்று வருவதற்கோ அல்லது பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்று வருவதற்கோ மாணவிகள் தனித்துச் செல்வதில்லை. அவர்கள் கூட்டமாகவே சென்று வருவார்கள். இது எமது ஊரில் மாத்திரமன்றி எல்லா இடங்களிலும் பொதுவாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

இது ஒன்றும் தவறான செயலல்ல. ஆனால், எமது ஊர் தங்கைகள் வீதிகளில் நடந்து செல்லும் விதம் பற்றி அந்நிய இனத்தவர் இருவர் பஸ்ஸில் கதைத்துக் கொண்ட விதம் கவலையளித்தது.

கூட்டமாகச் செல்லும் எமது தங்கைகள், ஒருவர் பின் ஒருவராகச் செல்லாமல், வீதிக்குக் குறுக்காக, தோள் பட்டைக்கு நேராக, வீதியின் அகலத்துக்கு வரிசையாகச் செல்வதாகவும் இதனால் வீதியில் செல்லும் ஏனைய மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் அது இடைஞ்சலாக இருப்பதாகவும் அவர்கள் அலுப்புடன் கதைத்துக் கொண்டனர். அத்துடன்,  குடைகளையும் விரித்துப் பிடித்துக் கொண்டு, கதையளந்த வண்ணம், அன்ன நடை பயிலும் இவர்கள், வீதியில் செல்லும் ஏனையவர்களைப் பற்றி சற்றேனும் சிந்திக்காமல் தமது போக்கிலேயே செல்வதாகவும் அவர்கள் கூறிக் கொண்டதுடன் ஊரிலுள்ளோர் இந்த விடயத்தில் ஏன்தான் கவனம் செலுத்தாமல் இருக்கின்றார்களோ என்று கேள்வியும் எழுப்பினர்.

எனவே, மாணவ மணிகளே, வீதியின் ஒழுங்குகளைப் பேணி, உங்களையும் எமது மண்ணையும் இவ்வாறான குற்றச்சாடுகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வோம்.

பெற்றோர்களே, பொறுப்பளர்களே, உங்கள் பொறுப்பிலுள்ள பிள்ளைகளுக்கு வீதியில் செல்லும் முறைகள் பற்றி அறிவூட்டுவதுடன், சொன்னபடி செயல்படுகிறார்களா என்பதையும் கவனித்து வாருங்கள்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

அனாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி?!

எமது ஊரில் அதிகரித்துச் செல்லும் அனாச்சாரங்கள் பற்றி பலரும் பல விதமாக கருத்துக்களை முன் வைத்த வண்ணமாக இருந்தனர். எல்லோரும் தாம் கண்ட, கேட்ட ஒழுக்கம் கெட்ட நடவடிக்கைகள் பற்றி தமக்குள் அல்லது தாம் அறிந்த சிலருக்குள் தத்தமது கவலைகளைத் தெரிவித்துக் கொண்டார்களே ஒழிய, தகுந்த நடவடிக்கை சம்பந்தமாக யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. 'என்ன நடவடிக்கை எடுக்கலாம்?' என்ற சிந்தனை அற்றுப் போயிருக்கலாம்; 'நடவடிக்கைக்கு இறங்கினால் நாம்தான் குட்டுப்பட வேண்டி வரும்' என்ற பயமாக இருக்கலாம் அல்லது 'ஊர் எக்கேடு கெட்டுப் போனாலென்ன, நாம் சரியாக இருந்துவிட்டுப் போனால் சரி' என்ற சுய நல எண்ணமாகக் கூட இருக்கலாம்.  எப்படியோ, நீண்ட காலமாகவே, பள்ளிகளோ, தஃவா இயக்கங்களோ அல்லது ஏனைய சமூக நலன் விரும்பும் அமைப்புக்களோ எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

இவ்வறான ஒரு சூழலில்தான் 'அனாச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தல்' சம்பந்தமான கலந்துரையாடலொன்று  MUSLIM LADIES STUDY CIRCLE  நிறுவன கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்துக்காக அழைக்கப் பட்டவர்களில் பெரும்பாலானோர் வருகை தந்திருந்ததானது இந்த முயற்சியில் உற்சாகத்தைக் கூட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. சுமார் முப்பத்தைந்து பேரளவில் வருகை தந்திருந்ததானது, 'அனாச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கு ஊரார் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதைக் காட்டுவதாகவே இருந்தது.  அங்கு கருத்துத் தெரிவித்த அனைவருமே, ஒழுக்கச் சீர்கேடுகளற்ற ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதன் அவசியம், அதற்கான நடவடிக்கைகள், மற்றும் அதிலுள்ள சவால்கள் பற்றி காத்திரமான கருத்துக்களை முன்வைத்ததிலிருந்து இதனை உணர்ந்து கொள்ளலாம்.

இதன் போது, பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களின் அங்கத்தவர்கள் மற்றும் புத்திஜீவிகளை உள்வாங்கிக் கொண்டதான அதிகாரம் பொருந்திய அமைப்பொன்று தெரிவு செய்யப்படவேண்டும் என்ற பலமான ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு அமைய, எதிர்வரும்  27ஆம் திகதி, பள்ளிவாசல் நிருவாகிகள், மற்றும் எமதூர் புத்திஜீவிகள் அடங்கிய ஒரு கலந்துரையாடலை நடாத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுளது.

இந்தக் கூட்டம் நடந்து மறு நாள், மஸ்ஜிதுன்னூர் பள்ளிவாசலிலும் ஒழுக்கச் சீர்கேட்டிலிருந்து சமூகத்தை நல்வழிப் படுத்துவது சம்பந்தமான ஒரு பயான் இடம் பெற்றுள்ளது.

இறைவனின் உதவியால், நல்லுள்ளம் கொண்டோரின் அங்கலாய்ப்புக்கு சிறந்த பதில் கிடைத்துள்ளது. எனவே, ஒழுக்கம் பேணும் உன்னதமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப, இந்த பொன்னான சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். இந்த நல்ல முயற்சிக்கு வித்திட்டவர்களுடன் நாமும் இணைந்து, ஜிஹாதின் நன்மையை அடைந்து கொள்ள முனைவோம்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ரபியுல் ஆகிரை 30 ஆக பூர்த்தி செய்ய தீர்மானம்

ஜமாதுல் அவ்வல் மாதத்தின் தலைப்பிறை, வியாழக்கிழமை மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப் பெறாமையினால், ரபியுல் ஆகிர் மாதத்தை, 30 ஆக பூர்த்தி செய்து, 16.04.2010 வெள்ளி மாலை (சனிக்கிழமை இரவு) ஜமாதுல் அவ்வல் மாதத்தை ஆரம்பிப்பதென, கொழும்பு பெரிய பள்ளிவாசலில், 15.04.2010 திங்கள் மாலை நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம், ஜமாதுல் ஆகிர் மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள், 15.05.2010 சனிக்கிழமை மாலை (ஞாயிறு இரவு) எனவும் முடிவு செய்யப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

சனி, 17 ஏப்ரல், 2010

ஊரில் நடைபெறும் ஒழுக்கச் சீர்கேடுகளை எவ்வாறு தடுக்கலாம்?

சமீப காலமாக எமது ஊரில் ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. மது அருந்துதல், ஏனைய போதைப் பொருட்களை உட்கொள்ளுதல், விபச்சாரம் போன்ற இன்னோரன்ன அனாச்சாரங்கள் இளைய தலைமுறையினர் மத்தியில் பரவலாக நடைபெறுவதாக ஊரில் பலரும் கதைத்துக் கொள்கிறார்கள். இந்த விடயம் சம்பந்தமாக எமது ஊரின் பிரதான வெப் தளங்கள் கூட செய்திகளை வெளியிட்டிருந்தன. ஒரு வாசகர், 'எழுதுவதை மட்டும் செய்யாமல் இதற்கு எதிராக ஏதாவது நடவடிக்கைகளில் இறங்கலாமே'  என்ற தொனியில் எழுதிய கருத்தும் வெளிவந்திருந்தது. 

இவ்வாறான ஒரு நிலையில், எமதூரின் ஒழுக்க விடயங்களில் அக்கறை கொண்ட சில அபிமானிகள், புத்தி ஜீவிகள் மற்றும் பள்ளிவாசல் / இயக்க அங்கத்தவர்கள் இணைந்த ஒரு  கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடலின் மூலம் அனாச்சாரங்களுக்கு எதிராக செயற்படும் ஒரு குழுவை உருவாக்கி, ஊராரின் பூரண ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளில் இறங்குவதே நோக்கம் என ஏற்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ள செய்தியும் 'பளிச்' இற்குக் கிடைத்துள்ளது.

இந்த நல்ல நோக்கம் நிறைவேற எமது வாழ்த்துக்கள்!

'நமைகள் ஏவப்பட்டு தீமைகள் தடுக்கப்படும் போதுதான் நாங்கள் ஒரு சிறந்த சமுதாயமாக முடியும்.' எனவே, இந்த முயற்சியாளர்களின் பாதங்களை அல்லாஹ்  உறுதியாக்கி வைப்பானாக. இயக்க பேதங்களின்றி, கட்சிபேதங்களின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்க நாம் எல்லோரும் ஒன்று படுவோம்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டுமென இலங்கை கோரிக்கை

‘மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமானால், கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறிவிட வேண்டும்’ என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. 1967 ஆம் ஆண்டில் இருந்த எல்லைகளுக்கு இஸ்ரேல் துருப்புக்கள் பின்வாங்கி, பலஸ்தீனத்துக்கு எதிரான தடைகளையும், சட்ட விரோத குடியேற்றத் திட்ட விஸ்தரிப்புகளையும், பிரிவினைச் சுவர் கட்டப்படுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை கோரியுள்ளது.

நியூயோர்க்கில், இலங்கையின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பலஸ்தீன பிரச்சினை பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவது அவசியம் என்று இலங்கை நம்புவதாக தெரிவித்தார். எனவே, விட்டுக் கொடுக்க முடியாத பலஸ்தீன உரிமைகள், இரு-நாட்டு தீர்வு ஆகிய இரண்டு அம்சங்கள் பற்றிய தீர்மானத்தை சகல தரப்பினரும் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென இலங்கை கோருவதாக அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தில் பொருளாதார தடைகள் தளர்த்தப்பட்டதை கவனத்தில் எடுத்துக் கொண்ட அதே வேளை, பலஸ்தீன மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பில் நாளாந்தம் படும் துன்பங்கள், அவலங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பலஸ்தீன அதிகார சபையும் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றும் அதே வேளை, இஸ்ரேலிய சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்த அதன் பிரதேசம் பயன்படுத்தப் படுவதில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஜயசேகர தெரிவித்தார். சட்ட விரோத ஆயுதங்கள் பிரதேசத்தினுள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; சிவிலியங்களின் பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் உறுதிப்படுத்த இரு தரப்பினரும் தம்மாலானதை செய்ய வேண்டும் என்றும் ஜயசேகர கேட்டுக் கொண்டர்.

ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன அதிகார சபையையும், பேச்சுவார்த்தைகளை தாமதமின்றி ஆரம்பிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் இலங்கை ஆதரிப்பதாக தெரிவித்த ஜயசேகர, நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள பலஸ்தீன மக்களின் ஒற்றுமை அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ற சூழலை இரு தரப்பினரும் ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த இலங்கை பிரதிநிதி, புதிய குடியேற்றத் திட்டங்களை ஆரம்பிப்பது பற்றிய அறிவித்தலால் இதுவரை ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது குறித்தும் கவலை தெரிவித்தார்.

வியாழன், 15 ஏப்ரல், 2010

வாகன விபத்தில் ஆசிரியை காயம்

எமது பாடசாலை(பத்ரியா)யில் நீண்ட காலமாக கற்பிக்கும் ஆசிரியையான ஜனாபா ரஈஸா அவர்கள் வாகன விபத்தொன்றில் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கடந்த 13 ஆம் திகதி தமது கணவருடன், கணவரின் குடும்பத்தாரை தரிசிக்க, தமது வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது இவரது சிறு குழந்தையும் காடயமடைந்துள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறின.

தலையில் காயம் பட்ட நிலையில் Bed Rest பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த நல்லாசிரியை இவ்வருட 4-A வகுப்புக்கு பொறுப்பாக இருப்பவராவார். இவர் தமது குடும்பத்தாருடன் அடுத்த வாரம் 'உம்ரா'வுக்காக மக்கா செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அன்னாரதும் காயமடைந்த ஏனையோரதும் சுகத்துக்காக 'பளிச்' பிரார்த்திக்கிறது. வல்ல நாயன் அவர்களுக்கு கூடிய கதியில் சுகத்தை நல்குவதுடன் அவர்களது குடும்பத்தாரின் துயரங்களையும் போக்குவானாக.. 

திங்கள், 12 ஏப்ரல், 2010

Poll: More Than Half of Austrians View Islam as a Threat

08 April 2010

The majority of Austrians say Islam is a "threat to the western world", a new survey says.

Pollsters IMAS found that 54 per cent of Austrians agreed with the statement "Islam poses a threat for the west and our familiar lifestyle".

IMAS officials said Wednesday that only 19 per cent disagreed, while 27 per cent were undecided.

The agency interviewed 1,000 Austrians older than 16 for its representative survey.

It found that Austrians older than 50, people with lower education and those living in the countryside feared Islam the most.

Another result of the research is that 72 per cent of Austrians believed Muslims would "not stick to the rules" when it comes to living in Austria. Only one in ten of the Austrians the agency spoke to said they disagreed with the allegation that Muslims were badly integrated in the country.

Seventy-one per cent said they were of the opinion that Islam "does not match western beliefs in democracy, freedom and tolerance". Only 11 per cent said they saw no friction between the religion and the mentioned values.

The poll was taken as Austrians prepare to vote on April 25 to elect a new president, a largely honorific but above all moral figurehead. Outgoing Social Democrat Heinz Fischer, who is almost certain to be re-elected, is standing against two candidates who are hostile to immigration: Barbara Rosenkranz, on the extreme right, who wants to restore border controls, and Rudolf Gehring, who heads the Christian party fervently opposed to the building of minarets.

IMAS said they did not find a strong relationship between political affiliation and people's doubts concerning Islam apart from the fact that a majority of those supporting the Greens rejected all Islam-critical statements the study confronted them with.

Among extreme right-wing voters, 78 percent said they see Islam as a threat. No figure was available for the Christian party. Among supporters of the Green ecologist party, only 16 percent of the population held that view, well below the average in the general population.

Around 500,000 Muslims live in Austria.


Sources:
"Majority say Islam is a 'threat'" Austrian Independent April 7, 2010

"More than half of Austrians ‘threatened’ by Islam" Daily Times April 8, 2010


ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

புதிய பாராளுமன்றில் முஸ்லிம் எம்.பிக்கள்

கடந்த 08.04.2010 இல் நடைபெற்ற, 14 ஆவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் போதியளவு முஸ்லிம்கள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப் படாமை ஒரு பெருங்குறையாகும். இம்முறைய தேர்தலில் சிங்களத் தேசியவதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலை தூக்கி இருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அத்து டன், 'ஒற்றுமை இல்லாத ஒரு சமூகத்துக்கு சிறந்த தலைமை எப்படி வரப்போகிறது?' என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. கூட்டாகச் சேர்ந்தால் மாத்திரமே ஒருவரையாவது பெற்றிருக்க முடியும் என்ற நிலையில் உள்ள எமது மாவட்டத்தில் கூட எத்தனையாகப் பிரிந்து நாம் வாக்களித்தோம்? இதன் மூலம் நாம் எதைப் பெற்றுக் கொண்டோம்? எமக்கென்று ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை எப்போது நாம் பெற்றுக்கொள்ளப் போகிறோம்? இனிமேலாவது சிந்திக்குமா நமது சமூகம்?

எவ்வாறாயினும், இது வரை தெரிய வந்துள்ள தகவல்களின் படி, பின்வருவோர், எமது பிரதிநிதிகளாக தெரிவாகி உள்ளனர் என்பது சற்றேனும் ஆறுதல் தரும் செய்தியாகும்.

1. A.H.M. பௌஸி,                                      கொழும்பு மாவட்டம்,
2. கபீர் ஹாசிம்,                                        கேகாலை மாவட்டம் 
3. A.L.M. அதாவுல்லா                               திகாமடுல்ல மாவட்டம்
4. H.M.M. ஹரீஸ்                                       திகாமடுல்ல மாவட்டம்
5. M.C.M. பைஸல்                                      திகாமடுல்ல மாவட்டம்
6. ரிஷாத் பதியுத்தீன்                               வன்னி மாவட்டம்
7. உனைஸ் பாரூக்                                  வன்னி மாவட்டம்
8. நூர்தீன் மஷூர்                                      வன்னி மாவட்டம்
9. M.L.A.M. ஹிஸ்புல்லா                         மட்டக்களப்பு மாவட்டம்
10. ..சீர் சேகு தாவூத்                                 மட்டக்களப்பு மாவட்டம்
11.ரவூப் ஹகீம்                                          கண்டி மாவட்டம்
12.அப்துல் காதர்                                        கண்டி மாவட்டம்

வியாழன், 8 ஏப்ரல், 2010

ஜி. சி.ஈ. (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு.

கடந்த வருடம் இடம் பெற்ற ஜி.சி.ஈ. (சா/த) பரீட்சையில் எமது ஊரைச் சேர்ந்த பல மாணவ மாணவிகள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. ஒரு மாணவி 9 பாடங்களிலும் A பெறுபேறும், மற்றொரு மாணவி 8 பாடங்களில் A யும் ஒரு பாடத்தில் C யும் பெற்றுள்ளதாக இதுவரை எமக்கு அறியக் கிடைத்துள்ளது. ஏனைய பெறுபேறுகள் பற்றிய விபரங்கள் பின்னர் இந்த வலை தளத்தில் பின்னர் வெளி வரும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம். 

புதன், 7 ஏப்ரல், 2010

University of Vocational Technology
UNIVERSITY ADMISSION FOR ACADEMIC YEAR 2010/2011

Applications are called for Bachelor of Technology (B.Tech) and Bachelor of Education in Technology (B.Ed.Tech) degrees from those possessing National Vocational Qualifications or equivalent.

Bachelor of Technology is meant for those who are interested in career advancement in the fields of specializations given below having the following entry qualifications:.

Entry Qualifications for B.Tech Degree Programme

Applicants should possess

1. NVQ Level 5 qualifications in the technology area, or
2. Any other diploma of at least one year full time or equivalent part time, in the relevant technology area, with two (2) years of post diploma industry experience in the relevant field applicable to the academic council of UNIVOTEC.

Bachelor of Technology Degree is offered in the following technology fields
 Multimedia & Web Technology
 Network Technology
 Software Technology
 Building Services Technology
 Manufacturing Technology
 Mechatronics Technology

Bachelor of Education in Technology Degree is meant specially for those who are in the teaching profession in the technology fields indicated below having the following entry qualifications:

Entry Qualifications for B.Ed.Tech Degree Programme

Applicants should possess
1 NVQ Level 5 qualifications in the technology area, or
2 Any other diploma of at least one year full time or equivalent part time, in the relevant technology area, with two (2) years of post diploma industry/teaching experience in the relevant field applicable to the academic council of UNIVOTEC.

NVQ level 6 or higher level diplomas/degrees may be granted credit excemptions

Bachelor of Education in Technology Degree is offered in the following technology fields
 Information & Communication Technology
 Building Services Technology
 Manufacturing Technology
 Mechatronics Technology

The general degree of both degree programmes are of three (3) years duration with the option of continuing for a special degree with duration of additional one (1) year. The medium of instructions of the degree programme is English. Please note that the applicants will have to face an aptitude test and an interview to get selected for a limited intake of best qualified individuals on part time (Friday, Saturday & Sunday or Saturday, Sunday and Monday) or full time study (Monday to Friday) programmes. Application form and instructions can be obtained either by sending a self addressed stamped envelope indicating the degree programme applied or can be down loaded from www.univotech.ac.lk. Closing date of applications will be 07th May 2010.

Please send the completed applications to the address given below indicating clearly the degree programme applied for on the top left hand corner of the envelope enclosed with a deposit slip with a deposit code number 3001-BT/BEDTAP-1 for the applications processing fee of Rs. 150/= which may be obtained from any Bank o Ceylon branch to credit University of Vocational Technology Account Number 0070308457, Bank of Ceylon, Ratmalana Branch.

Vice Chancellor
University of Vocational Technology
No. 100, Kandawela Road, Ratmalana

07 April 2010 – Daily News

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பலஸ்தீன் - தொடரும் இஸ்லாமிய வரலாறு

கலீபா உமர் (ரலி) யிடம் ஜெரூஸலம் வீழ்தல்

அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் ஜெரூஸலம் நகரை சுற்றி வளைத்து, ஆக்கிரமிப்புக்குத் தயாராக இருந்தார்கள். அவருடன் அபூ உபைதா மற்றும் காலித் போன்ற முஸ்லிம் தளபதிகளும் வந்து இனைந்து கொண்டனர். பைஸாந்திய அரசின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை பலஸ்தீனிய கிறிஸ்தவர்களுக்கு இருக்கவில்லை. எனவே, பலஸ்தீனை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க அவர்கள் தீர்மானித்தனர். என்றாலும், அவர்களிடம் தங்களது பாதுகாப்பு சம்பந்தமான பல விதமான சந்தேகங்களும் இருந்தன.

ஏனைய நகரங்களும் முஸ்லிம்களிடம் வீழ்ந்தது பற்றி அவர்கள் அறிந்திருந்தனர். வீழ்ந்த எல்லா நகரங்களிலும் தோல்வியடைந்தோரின் உயிரும் உடமையும் கௌரவத்துடன் பாதுகாக்கப்பட்டன. வணக்கத் தலங்கள் பாதுகாக்கப்பட்டன. சமய வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனாலும், ஜெரூஸலம் நகர வாசிகளுக்கும் இதே கௌரவம் வழங்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில், ஜெரூஸலம், அவர்களைப் போன்றே முஸ்லிம்களுக்கும் மிகவும் புன்னிய தலமாக இருந்தது. எனவே, நகரத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க முன், "நாங்கள் நன்றாக நடாத்தப் படுவோம்" என்ற வாக்குறுதியை முஸ்லிம்களிடம் பெற முடிவு செய்தனர்.

எனவே, அபூ உபைதா (ரலி) அவர்களிடம் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். " ஜெரூஸலம் நகரை உங்களிடம் ஒப்படைக்க நாம் தயார்;" கிறிஸ்தவர்கள் கூறினார்கள், " ஆனால், உங்கள் கலீபாவே நேரடியக வந்து எங்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்."

முஸ்லிம் தளபதிகள் தங்களுக்கிடையில் இந்தக் கோரிக்கையை ஆலோசனை செய்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. "ஏன் இரத்தம் சிந்த வேண்டும்?" அவர்கள் கூறினார்கள், " போரின்றியே வெற்றி கிடைக்கும் போது!"

இதன் படி, இரத்தம் சிந்தாமலேயே ஜெரூஸலத்தைக் கைப்பற்ற முடியும் என்ற செய்தியும், இதற்காக சமாதான ஒப்பந்தம் ஒன்றுக்காக கலீபா அவர்கள் மதீனாவிலிருந்து நேரடியாக வருகை தர வேண்டும் என்ற கிறிஸ்தவர்களின் கோரிக்கையும் உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பப் பட்டது. எவ்விதமான தயக்கமுமின்றி கலீபா அவர்கள் இதற்கு உடன்பட்டார்கள்.

ஜெரூஸலத்தில் உமர் (ரலி)

அலி (ரலி) அவர்களை தனக்குப் பதிலாக மதீனாவின் பொறுப்பாளராக நியமித்துவிட்டு, கலீபா உமர் (ரலி) அவர்கள் ஜெரூசலம் நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரே ஒட்டகத்தில் தனது உதவியாளருடன் புறப்பட்ட அவர்கள், கலீபாவும் உதவியாளருமாக, மாறி மாறி, ஒருவர் ஒட்டகத்தின் மீதும் மற்றவர் நடந்தும், ஜெரூசலம் வரை சென்றனர். ஜெரூசலத்தை அடையும் போது, ஒட்டகத்தில் சவாரி செய்யும் முறை, கலீபாவின் உதவியாளருடையதாக இருந்தது. "அமீருல் மூமினீன் அவர்களே!", உதவியாளர் அழைத்தார்; " நான் ஒட்டகத்தின் மீதும் நீங்கள் கடிவாளத்தை பிடித்த வண்ணம் நடந்தும் வருவது உங்களது கௌரவத்துக்கு இழுக்காகும். நான் எனது முறையை விட்டுத் தருகிறேன். நீங்களே ஒட்டகத்தில் சவாரி செய்து வாருங்கள்" என்று மிகவும் பணிவுடன் கூறினார். " இல்லை, இல்லை, நான் நேர்மை தவறி விடக்கூடாது", கலீபா கூறினார்கள், " இஸ்லாத்தின் மூலம் எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் கௌரவம் அனைத்தையும் விட மேலானது."

கலீபாவை வரவேற்பதற்காக, படைத் தளபதிகளான அபூ உபைதா, காலித், யசீத் மற்றும் அதிகாரிகள், சிறிது தூரம் சென்றார்கள். அவர்கள் அனைவரும் பட்டுத் துணியினாலான மேலங்கி அணிந்திருந்தனர். இதனைக் கண்ட உமர் (ரலி) க்கு கோபம் வந்து விட்டது.
சிறு கற்களைப் பொறுக்கி தனது தளபதிகள் மீது எறிந்த அவர்கள், " இரண்டே வருடத்துக்குள் எவ்வளவு மாற்றம்? என்ன உடை இது? இன்னும் இரு நூறு வருடம் கழித்து இவ்வாறு செய்திருந்தாலும் உங்களை நான் விலக்கியிருப்பேன்" என்று கடும் கோபத்துடன் கூறினார்கள்."

படை அதிகாரிகள் கூறினார்கள், "அமீருல் மூமினீன் அவர்களே, அணிந்திருக்கும் ஆடையின் தரத்தைக் கொண்டு மனிதர்களின் நிலையை மதிக்கும் ஒரு பிரதேசத்தில் நாங்கள் இருக்கிறோம். சாதாரண உடைகளை நாம் அணிந்திருக்கும் போது எம்மை இங்குள்ள மக்கள் குறைவாகவே மதிப்பிடுவார்கள். மேலால் இந்த அங்கியை அணிந்த போதிலும், எமது வழமையான உடைகளை அணிந்த நிலையிலேயே இதனையும் அணிந்திருக்கிறோம்." இந்தப் பதில் கலீபாவை நிதானப் படுத்தியது. இதன் பின்னர் சமாதான ஒப்பந்தத்தில் அவர்கள் கைச்சாத்திட்டார்கள். அதன் வாசகங்கள் வருமாறு:

" அல்லாஹ்வின் அடிமையும் மூமீன்களின் கலீபாவுமாகிய உமரிடமிருந்து: ஜெரூஸலம் நகரவாசிகளின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இந்த ஒப்பந்தம் பாதுகாப்பளிக்கிறது. அவர்களுடைய தேவாலயங்களும் சிலுவைகளும் பாதுகாக்கப்படும். இந்த ஒப்பந்தம் நகரின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும். அவர்களின் வணக்கத் தலங்களில் வழிபாடுகள் செய்ய எந்த தடையும் இல்லை. அவை முஸ்லிம்களின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்படவோ உடைக்கப் படவோ மாட்டாது. மக்கள் அனைவரும் தங்களது மார்க்கத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த விதமான பிரச்சினைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்......"

நகரின் வாசல்கள் திறக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்கள் நேராக Temple of David (மஸ்ஜிதுல் அக்ஸா) ஐ நோக்கிச் சென்றார்கள். அங்கு David's Arch இன் கீழ் தொழுதார்கள். பின்னர் நகரின் மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கிருந்த வேளை ழுஹர் தொழுகைக்கான நேரம் வந்தது. "நீங்கள் இங்கேயே தொழுது கொள்ளலாம்" என்று தேவாலயத்தின் பிஷப் கூறினார். " இல்லை, இல்லை", உமர் (ரலி) சொன்னார்கள், " நான் இவ்விடத்தில் தொழுதால், இந்த இடத்தை உங்களிடமிருந்து கைப்பற்றுவதற்குக் காரணமாக ஒரு காலத்தில் இதை முன் வைக்க முடியும்".

பின்னர் தேவாலயத்தின் படிக்கட்டுகளில் நின்று தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர் பிஷப்பிடம் ஒரு கடிதத்தையும் கையளித்தார்கள். அதன் வாசகங்கள் பின்வருமாறு இருந்தன. "இந்தப் படிக்கட்டுகள் அதான் சொல்லும் இடமாகவோ கூட்டுத் தொழுகை நடாத்தப்படும் இடமாகவோ எச்சந்தர்ப்பத்திலும் இருக்கக் கூடாது."

உமர் (ரலி) அவர்களின் பள்ளிவாசல்

ஜெரூஸலத்தில் ஒரு பள்ளிவசலை நிறுவும் எண்ணம் உமர் (ரலி) அவர்களுக்கு இருந்தது. இதற்குப் பொருத்தமான ஒரு இடத்தைக் காட்டும் படி கலீபா உமர்(ரலி) அவர்கள் கிறிஸ்தவ பிஷப்பிடம் விசாரித்தார்கள். யாகூப் நபியுடன் அல்லாஹ் பேசிய இடமான "Sakhra" எனும் கற்பாறை இருந்த இடத்தைக் காட்டினார் பிஷப். யூதர்களை இழிவு படுத்தும் நோக்கில், கிறிஸ்தவர்கள் அந்த இடத்தை குப்பை மேடாக ஆக்கியிருந்தார்கள். "Sakhra" உடனடியாக துப்பரவு செய்யப்பட்டது. ஏனையவர்களுடன் ஒரு பணியாளரைப் போன்று உமர் (ரலி) அவர்களும் இந்த வேலையில் ஈடுபட்டனர். தாவீதினதும் யேசு கிறிஸ்துவினதும் நகரமான ஜெரூஸலம் இஸ்லாத்தின் சமத்துவத்தைக் கண்டு கொண்டது.


திங்கள், 5 ஏப்ரல், 2010

கஹட்டோவிட்ட - வெயாங்கொட
பஸ் சேவை விஸ்தரிப்பு


புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திஹாரியினூடான கஹட்டோவிட்ட - வெயாங்கொட பஸ் சேவை விஸ்தரிக்கப்பட உள்ளதாக குறித்த வீதியில் பணி புரியும் பஸ் நடத்துனர் ஒருவர் கூறினார். பஸ் சொந்தக்காரர்களின் வருவாய் திருப்தி அளிப்பதாக இருப்பதனால், அவர்களாலேயே இந்த விஸ்தரிப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நிட்டம்புவையிலிருந்து மாலை 6.45 க்கு, கஹட்டோவிட்டைக்கான கடைசி பஸ் புறப்பட்டு, இரவு 7.30 க்கு ஊரை வந்தடைகிறது. அனால், புதிய முன்மொழிவின் படி, நிட்டம்புவையிலிருந்து இரவு 7.45 க்கு புறப்படும் பஸ் வண்டி, எமதூரை இரவு 8.30 க்கு வந்தடையும். இன்னும் ஓரிரு வாரங்களில் திருத்த வேலைகள் முடிவடைய இருக்கின்ற பஸ் வண்டி தயாரானதும் இந்த சேவை விஸ்தரிப்பு ஆரம்பிக்கப்படும் என அந்த நடத்துனர் மேலும் குறிப்பிட்டார்.

கஹட்டோவிட்ட 'ஜயவேவா'

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

பாலிகா வித்தியாலய மாணவிகளின் கலை விழா
மூன்று மாடிக் கட்டிடம் பெற்றுத் தருவேன் - முதலமைச்சர்

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய மாணவிகளின் கலை விழா இன்று (03.04.2010) இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண சபையின் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் வருகை தந்தார்கள்.

காலை 10.00 மணிக்கு வருவதாக இருந்த பிரதம அதிதி, கௌரவ முதலமைச்சர் அவர்கள், மிகவும் தாமதித்து, பி.ப. 1.00 மணி நெருங்கிய வேளையிலேயே வருகை தந்தார். காலையில் வர இருந்த இவரை எமது ஊரைச் சேர்ந்த சில சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் தடுக்க முயற்சி செய்ததாகவும் இதை அறிந்து கொண்ட பாலிகா SDS உறுப்பினர்கள் மிகவும் சிரமப்பட்டு மீண்டும் முதலமைச்சருடன் கதைத்த பின்னரே தாமதமாக வருகை தந்ததாகவும் SDS வட்டாரத்தை ஆதாரம் காட்டி நம்பத்தகுந்த சிலர் தெரிவித்தனர். இதற்கு முன்னர் ஒரு தடவை மாகாண சபை உறுப்பினரான கோகிலா குணவர்தன அவர்களது வருகையையும் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் இதன் போது சுட்டிக் காட்டப்பட்டது.

எது எவ்வாறாயினும், பாடசாலையின் வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் இவ்வருடத்துக்குள் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் முதல் மாடியைக் கட்டுவதற்கான நிதியை ஒதுக்குவதாகவும் முதலமைச்சர் வாக்களித்தார்.

அத்துடன், அமைச்சரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்களினால் பாடசாலையின் நூலகத்துக்காக ரூ. 100,000.00 நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அதிபர் புஹாரி உடயார் மேற்கொண்ட தனி முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும்.

மௌலவி M.S. அப்துல் முஜீப் (கபூரி) அவர்களின் முயற்சியால், சவூதி அரேபிய தனவந்தர் ஒருவரின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் இரண்டு மாடிக் கட்டடத்தின் வேலைகளும் நடைபெற்று வரும் இவ்வேளயில், இந்த அபிவிருத்தி உதவிகளும் கிடைத்திருப்பது பாலிகா வித்தியாலயத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எனவே, எல்லாம் வல்ல இறைவனின் அருளினால், கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையான பாலிகாவை சிறந்ததொரு கல்லூரியாக அபிவிருத்தி செய்வதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக இதனை நாம் கொள்ளலாம் என பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.

பாடசாலையை அபிவிருத்தி அடையச் செய்வதில் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கின்ற ஆசிரியர் குழாமை இத்தால் பாராட்டுகிறோம்.

சனி, 3 ஏப்ரல், 2010

முஸ்லிம் பாலிகா வித்தியாலய கலை விழா

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய மாணவிகளின் கலை விழா இன்று (03.04.2010) இடம்பெற இருக்கிறது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேல் மாகாண சபையின் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் வருகை தர இருப்பதாக பாடசாலையின் அதிபர் உடயார் அறிவித்துள்ளார். இதன் போது மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெற இருப்பதாக அதிபர் மேலும் கூறினார்.

அத்துடன், அமைச்சரும் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான கௌரவ பண்டு பண்டாரனாயக அவர்களினால் பாடசாலை அபிவிருத்திக்காக ரூ. 100,000.00 நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சவூதி அரபி ஒருவரின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் இரண்டு மாடிக் கட்டடத்தின் வேலைகளும் நடைபெற்று வரும் இவ்வேளயில், இந்த அபிவிருத்தி உதவிகளும் கிடைத்திருப்பது பாலிகா நிருவாகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். எனவே, எல்லாம் வல்ல இறைவனின் அருளினால், பாலிகா பாடசாலையை கம்பஹா மாவட்டத்தின் ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் கல்லூரியாக அபிவிருத்தி செய்வதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக இதனை நாம் கொள்ளலாம் என பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.