ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

கிலாபத் அழிக்கப்பட்டு 87 வருடங்கள்.

 சுமார் 1300 ஆண்டுகள் உலகில் ஆட்சி செய்த முஸ்லிம் சாம்ராஜ்யம் 1924 இல் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு தற்போது 87 ஆண்டுகள் ஆகிவிட்டன.   3.3.1924 இல் எமது ராஜதானி கைப்பற்றப்பட்டு, கலீபா, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

இந்த துக்ககரமான நிகழ்வு பற்றிய வரலாற்று ரீதியான தகவல்களை பின்வரும் இணைப்புகளின் மூலம் அறியலாம்.
      
                                                                     க்ளிக் செய்க. 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

படி, போராடு, சேவை செய்!

இன்று, உற்பத்திக் காரணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திக் காரணியாக அறிவு (நொலேஜ்) மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் நிதி மூலதனம், உழைப்பு, ஊதியம் முதலான உற்பத்திக் காரணிகள் பெற்ற முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் உள்ளதாக அறிவு மாறியுள்ளது. அதனால்தான் இன்றைய உலகில் முதன்மை பெறுபவர்களாக, ஜாம்பவான்களாக இருப்பவர்கள் 'நோலேஜ் வேர்க்கர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற அறிவுத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்தாம் என்பதை நாம் அறிவோம். இன்றைய உலகில் செல்வந்த நாடுகளைப் பார்க்கிறபோது அந்த நாடுகளின் வருமானத்திலே 85 விழுக்காடு அறிவின் மூலம் பெறப்படுகிறது. ஒரு 15 விழுக்காடு வருமானம்தான் ஏனைய பாரம்பரிய உற்பத்திக் காரணிகளின் ஊடாகப் பெறப்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா, ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை சீராக வேண்டுமா, தார்மிக, ஆன்மிக, ஒழுக்கப் பண்பாட்டு நிலை சீராக வேண்டுமா அதற்கு வழி அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் படித்தவர்களாய் உருவாவதுதான். அது தவிர மாற்றுவழி கிடையாது.

'படி, போராடு, சேவை செய்' என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ...........

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

கஹட்டோவிட்ட பாலிகாவில் பெண்களுக்கான 'அஹதிய்யா பாடசாலை' ஆரம்பம்

அஹதிய்யா சம்மேளனத்தின் மற்றொரு கிளையை நிறுவுவது சம்பந்தமான ஒரு கூட்டம் இன்று கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் பி.ப. 4:30 மணியளவில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் அஹதிய்யா சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் முபாரக் அவர்களும் கலந்து கொண்டார். எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மாணவிகளுக்கான இந்த அஹதிய்யா பாடசாலை பாலிகா வித்தியாலயத்தில் இயங்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நமக்கேன் தேர்தல்?

தேர்தலொன்று அண்மித்த நிலையில் எமது ஊரில் மீண்டும் பிளவுகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இவை தற்காலிகமானதாக இருந்தாலும் ஏற்கனவே இருக்கின்ற பிளவுகளுடன் இவையும் சேர்ந்து எமது மக்களை கூறு போடுகின்றன. அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்கள் மத்தியில் உருவாக்கப் படுகின்ற கருத்து மோதல்களினால் மில்லிமீட்டர் கணக்கில் உருவாகும் ஒற்றுமை கூட மீட்டர் கணக்கில் சீர் குலைந்து விடுகிறது. இவ்வாறு அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் எமது கூட்டுறவுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே இருந்து வருவதை கவலையுடனாவது சொல்லித்தான் ஆக வேண்டும்.

சனி, 19 பிப்ரவரி, 2011

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்.

உலக  கிண்ண கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. ஆரம்ப ஆட்டத்தில் பங்களாதேசம் இந்தியாவிடம் 87 ஓட்டங்களுக்குத் தோல்வி கண்டது. ஆட்டத்தின் விபரங்களை அறிய கீழுள்ள இணைப்பைக் "க்ளிக்" செய்யுங்கள்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

லூத் நபி காலத்து மனிதர்கள் இன்று தோன்றியுள்ள அதிசயம்


 நபி லூத் அவர்களின் காலத்து மனிதர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்ற செய்தி அதிசயமாக இல்லையா?

என்ன இவன், தொடங்கும் போதே புதிரைப் போடுகின்றானே, என்று நீங்கள் எண்ணுவது எனக்குக் கேட்கத்தான் செய்கிறது. இது புதிருமல்ல, புதினமுமல்ல, கதையுமல்ல. இது நிஜம், நிதர்சனமான யதார்த்தம், வாஸ்தவம்.

லூத் நபி காலத்தில்

கேட்டியலே சங்கதிய!

அந்த, காதலர் தினமெண்டு சொல்லி உலகமே கூத்தடிச்ச அந்த நாளில, நம்ம பிராந்திய ஸ்கூலொன்றிலேயும் கொஞ்சம் பெடியல்கள் அந்தக் கூத்தோடு சேத்து இன்னுமொரு கூத்தையும் நடத்தி முடிச்சதாக பஜாரில பேசிக் கவலப்பட்டுக் கொண்டாங்களாம்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

மாடறுப்புத் தடைக்கான கையெழுத்து வேட்டை! சிங்கள இனவாதத்தின் மற்றொரு நாடகம்.

2600 வது புத்த ஜயந்தியை முன்னிட்டு; மாடறுப்புத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏதுவாக; பொது மக்களின் கையொப்பத்தைத் திரட்டும் முயற்சியின் மற்றொரு அங்கம்; இன்று நிட்டம்புவையில் இடம்பெற்றது. பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த; பௌத்த கலாச்சார முறையில் அலங்கரிக்கப்பட்ட வாகனமொன்றில் இருந்த வண்ணமே இந்த கையொப்ப வேட்டை இடம்பெற்றது.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அன்பின் பெறுமதி பூச்சியம்!

எழுதியதை நிறுத்திய சிறுவன் எழுதிய தாளை தன் தாயிடம் நீட்டினான். கைகளைத் துடைத்துவிட்டு தாளை வாங்கிக் கொண்ட தாய் தனது செல்லப் புத்திரன் எழுதியிருந்ததை ஆசையுடன் படித்தாள்.

சனி, 5 பிப்ரவரி, 2011

நீ மன நோயாளியா? சின்ன மூளைக்காரனா?

எமது கிராமத்துப் பள்ளிவாசல்களில் நேற்றைய குத்பாக்கள் மிகவும் விசேடமாக இருந்ததன. எல்லா மிம்பர்களும், 'அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவினை' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முழக்கமிட்டன.

குழந்தைகளை நேசிக்காதவர்

முக்கியமான ஒரு விடயம் தொடர்பாக ஆலோசனை நடாத்த அரசப் பிரமுகர்கள் ஓரிடத்தில் கூடியிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் நுழைந்த குழந்தையொன்று அந்த நாட்டு ஜனாதிபதியின் மடியில் போய் அமர்ந்தது. தாடியைப் பிடித்து இழுத்து குறும்புச் சேஷ்டைகள் பலவும் செய்தது. குழந்தையை வாரியணைத்துக்கொண்ட  ஜனாதிபதியும் அதை அன்போடு கொஞ்சலானார்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

Dr. Zakir Naik Set to Address Oxford Union in Historic Debate

Islamic preacher Dr Zakir Naik, barred from the UK by Home Secretary Theresa May, is set to address the Oxford Union in historic debate next week. Following the address on peace and religious tolerance, Dr Naik will hold a Q&A session with undergraduates and academics via satellite link

வியாழன், 3 பிப்ரவரி, 2011

தப்பில்ல தம்பி தப்பில்ல

இது புத்தளத்து சகோதரர் ஒருவரால் எழுதப்பட்ட கவிதை. பரவலான வரவேற்பைப் பெற்ற ஒன்று. அண்மையில் திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலையில், பூஸரி ஆசிரியரால், வாசிக்கப்பட்டு, பலத்த வரவேற்பையும் பெற்றது.

கவிதையின் நோக்கம், தற்போதைய இளைஞர்களின் நிலை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, அதனை  இங்கே பிரசுரம் செய்கிறோம்.  

புதன், 2 பிப்ரவரி, 2011

ஜோர்தானிலும் புரட்சி! மந்திரி சபை கலைப்பு!!

டியூனீசியா மற்றும் எகிப்தைத் தொடர்ந்து ஜோர்டானிலும் புரட்சி வெடித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலை வாசி உயர்வு போன்றவற்றை எதிர்த்தே இந்த மக்கள் புரட்சி வெடித்தது. 'பிரதமர் பதவி விலக வேண்டும், புதிய பிரதமர் மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு ஏற்றதாக யாப்பு மறுசீரமைக்கப்படவேண்டும்' போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு!

இஸ்லாம்  சார்த்த அமைப்புகளையும் நபர்களையும்   மிகவும் கேவலமாகவும் பயங்கரமாகவும்  சித்தரிக்க  போலியான நாடகங்களை அரங்கேற்றி வருவது CIA உளவு அமைப்பில் கடமையாற்றிய உறுப்பினர்கலாலேயே அவ்வப்போது  வெளிப்படுத்தப்  பட்டுவருகின்றது. முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தமது அனுபவங்களை  வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட   தகவல்களை  நீண்டகால புலனாய்வு ஊடக அனுபவம் கொண்டவரான ஜெப்  ஸ்டீன்    Jeff Stein- மேலும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

எகிப்து சர்வாதிகாரத்துக்கு எதிராக இஸ்லாமியவாதிகள் பேரணி. இது இஸ்லாமிய எழுச்சியின் ஆரம்பமா?

சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து எகிப்தின் பல இடங்களில் இன்று பேரணி இடம்பெற்றுள்ளது. இது முபாரக் ஆட்சியின் முடிவுக்கான ஆரம்பம் என யூஸுப் கர்ளாவி கூறியுள்ளார். இவை தொடர்பான தகவல்களை ourummah.org இனூடாக வழங்குகிறோம். கீழே க்ளிக் செய்யுங்கள்.

ourummah.org