ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நல்வழிகாட்டி அல்குர்ஆன்


இறைவனின் உன்னதப் படைப்பினமாகிய மனித வாழ்வின் சகல துறைகளுக்குமான நல்வழிகாட்டல்களை, வழங்கி நிற்கும் தூய அல்லாஹ்வின் வாக்கும் தீர்ப்புமான புனித அல்-குர்ஆனை மக்கள் சமுதாயத்தினருக்கு அருட்கொடையாக அருளினான்.
11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு நோற்கும் இந்து

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், லேத் பட்டறை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன், 11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு இருந்து வருகிறார். கீழக்கரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவர், போஸ்ட் ஆபீஸ் தெருவில் லேத் பட்டறை வைத்து நடத்துகிறார்.இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்க செயலர்.

நோன்பு


நோன்பு (Sawm, அரபு மொழி: صوم‎) என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அநுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமைல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்[1].இது இஸ்லாத்தின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

ராஜபக்சவைத் திருப்பி அடித்த தமிழர்கள்..



 
  
ராகுல் காந்தி குடிசைகளில் நுழைந்து கூழ் குடித்துவிட்டு போஸ் கொடுத்த போதிலும், காங்கிரஸூக்கு தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு மரண அடி கிடைத்தது.
1அதே மரண அடி இலங்கையில் ராஜபக்சேவுக்கு கிடைத்திருக்கிறது.
லட்சக்கணக்கான தமிழச்ச்சிகளின் தாலிகளைப் பறித்தெடுத்து, பொட்டுகளை அழித்தெடுத்த சுவடை மறைக்க பேரம் பேசி சில தமிழச்சிகள் தனக்கு பொட்டு வைப்பதாய் விளம்பரப்படுத்தினார் ராஜபக்சே. தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீதெல்லாம் மினி போர் தொடுத்து மிரட்டிப் பார்த்தார்.  ஆனால் எதற்கும் மசியாமல்இது எங்கள் ஈழம்.. இங்கே உனக்கு வேலையில்லைஎன்று ராஜபக்சேவை உள்ளாட்சித் தேர்தலில் விரட்டி அடித்திருக்கின்றனர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள்.
1976-ம் ஆண்டு நிறைவேற்றிய வட்டுக் கோட்டை தீர்மானத்தை இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் மீண்டும் வழிமொழிந்திருக்கிறார்கள் ஈழத்து மக்கள்.ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் ஈழப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.இந்தத் தேர்தலின் முடிவுகளை அளறி மாளிகையில் உடற்பயிற்சி செய்தபடி கேட்டுக்கொண்டிருந்த ராஜபக்சே, சிங்களர்கள் நிறைந்த தெற்கில் தன் கட்சி வெற்றி பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, ஈழப் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரேயடியாக வென்றத்தில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இந்து - இஸ்லாமிய கலாச்சாரத் தொடர்புகள்



வரலாற்றுக் கண்ணோட்டத்தில்பல்வேறு நாகரிகங்கள், பண்பாடுகளின் வளர்ச்சியைநோக்கும் எவரும் ஒவ்வொரு பண்பாடும், நாகரிகமும் ஏனைய பண்பாடுகளால், நாகரிகங்களால் பாதிக்கப்பட்டுவந்துள்ளனது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வர். பல்வேறு நாகரிகங்களும் பண்பாடுகளும் மோதிமுட்டிக் கலக்கும் நிலையிற்றான்