புதன், 1 செப்டம்பர், 2010

முல்லா கதை - 02

பெரியாவர் ஒருவர் முல்லாவை சந்தித்தார். " முல்லா, யாராக இருந்தாலும், நீ திறமையாகப் பொய் பேசி, அவர்களை ஏமற்றி விடுவாயாமே, இது உண்மையா?" என்று கேட்டார் அந்தப் பெரியவர்.

"ஆமாம், அது உண்மைதான்" என்று பதில் கூறினார் முல்லா.

அதற்கு அந்த முதியவர், " உன் திறமை என்னிடம் செல்லாது. எப்படி வேண்டுமானாலும் முயற்சி செய்து என்னை ஏமாற்று பார்ப்போம்" என்று சவால் விட்டார்.

உடனே முல்லா,"பெரியவரே! உங்களிடம் பேசிக் கொண்டிருக்க இப்போது எனக்கு நேரமில்லை. நம் ஊர் ஏரியில் உள்ள மொத்த நீரையும் வடித்து விட்டார்களாம். பெரிய, பெரிய மீன்கள் ஏராளமாகத் துள்ளுகிறதாம். அவற்றைப் பிடிக்க ஊர் மக்கள் எல்லாம் அங்கே சென்று விட்டார்கள். அவரவர் பிடிக்கின்ற மீன்களை அவரவரே எடுத்துக் கொள்ளலாம் என்று முரசு வேறு அறிவித்து விட்டார்கள். எனவே, நானும் அங்கேதான் போய்க்கொண்டிருக்கிறேன்" என்று பரபரப்புடன் கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் அந்தப் பெரியவர், "ஐயோ! இந்தச் செய்தி எனக்கு முன்னரே தெரியாமல் போய் விட்டதே. உன்னோடு வெட்டிப் பேச்சுப் பேசி நேரத்தை வீணாக்கி விட்டேனே" என்று அலரி அடித்துக் கொண்டு ஏரியை நோக்கி ஓடினார். ஏரியில் நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. யாரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கவுமில்லை.

'தாம் முல்லாவால் ஜோராக ஏமற்றப் பட்டுவிட்டோமே' என்பதை பெரியவர் அப்போதுதான் உணர்ந்தார்.

முல்லா கதை - 01

ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் முல்லாவின் வீட்டுக்குள் நுழைந்தான். இதனைக் கண்ட முல்லா வீட்டின் பின் புறமாகச் சென்று மறைந்து கொண்டார். தனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லாததைக் கண்ட திருடன் முல்லாவின் வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் திரட்டி மூட்டையாகக் கட்டிக் கொண்டு வெளியேறினான். முல்லாவும் அவனுக்குத் தெரியாமல் இரகசியமாகப் பின் தொடர்ந்து சென்றார்.

தன் வீட்டுக்குச் சென்ற திருடன் திருடிய பொருட்கள் அனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு,முகம், கை, கால்களைக் கழுவுவதற்காக வீட்டின் பின் பக்கம் சென்றான். அங்கே முல்லா, தமது அங்கவஸ்திரத்தை விரித்துப் போட்டு, படுத்துக் கொண்டு, தூங்குவதைப் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தார். தனது வீட்டில் புதிய ஒரு மனிதர் உறங்குவதைப் பார்த்த திருடன், திடுக்கிட்டு, அவரை எழுப்பி, "நீ யார்?" என்று அதட்டிக் கேட்டான்.

முல்லா மெதுவாக எழுந்து உட்கார்ந்து கொண்டார். "என் பெயர் முல்லா. என் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் நீ எடுத்துக் கொண்டு இங்கே வந்து விட்டாய். இனி நான் என் வீட்டில் குடியிருந்து என்ன பயன்? எனவே உன் வீட்டுக்கே குடி வந்து விட்டேன்" என்று அமைதியாகக் கூறினார். திருடனுக்கு மறு பேச்சுப் பேச நா எழவில்லை. தான் கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்டு, முல்லாவின் வீட்டுக்குப் போய், வைத்து விட்டு வந்து விட்டான்.

பாகிஸ்தானுகு இலங்கையிலிருந்து வெள்ள நிவாரணக்குழு

இருபது மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை அகதிகளாக்கிய பகிஸ்தான் வெள்ளத்தை மறந்திருக்க மாட்டீர்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று 03.09.2010 இல் பாகிஸ்தான் பயணமாகவுள்ளது. அரச அங்கீகாரத்துடன் செல்லவுள்ள இக்குழுவில், எமது ஊரைச் சேர்ந்த யூனானி வைத்தியரான M.S.M. பாயிக் (BUMS) அவர்களும் அங்கம் வகிக்கிறார்.

அல்லலுறும் எமது சகோதரர்களின் துயர் துடைப்பதில் எமது ஊரை பிரதிநிதிப்படுத்தும் அவருக்கு எமது வாழ்த்துக்கள்!

திங்கள், 7 ஜூன், 2010

'கழா கத்ர்' என்பது என்ன?

 
ஈமானின் ஆறாவது அம்சம், ' வல் கத்ரி கைரிஹீ வஷர்ரிஹீ மினல்லாஹி தஆலா'. 'நன்மை தீமைகளின் கத்ர் (நியதி) இறைவனிடமிருந்து உள்ளதாகும்' என இதனை நாம் மொழி பெயர்ப்போம். அதாவது, இந்த அகிலத்தில் நடைபெறுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் - தனி மனிதனுடையதாக இருக்கலாம் அல்லது அதற்கு அப்பாற்பட்ட ஏனைய நடவடிக்கைகளாக இருக்கலாம் - இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன என்பதுவே இதன் விளக்கம். இதனை பல வேளைகளில் நாம் விதி என்றும் சொல்வோம்.

இந்த விளக்கத்தை நாம் எளிதாக சொல்லி விட்டாலும், இதனை சரியாக விளங்கிக் கொள்வதில் பலருக்கு குழப்பமான ஒரு நிலை இருப்பதை அவதானிக்க முடிகிறது. உதாரணத்துக்கு இந்த சம்பாசனையை நோக்குவோம். இது நிஜமொன்றின் நிழல்!

A, B என இரண்டு படித்த நண்பர்கள். A என்பவர் சிறந்த ஒரு முஸ்லிம் சூழலில் வாழ்வதுடன் இஸ்லாம் பற்றி ஒரு சாதாரண முஸ்லிம் கொண்டிருக்க வேண்டிய விடயங்களை தெரிந்து வைத்திருப்பவர். ஆனால், அமல் விடயங்களில் நிறையவே பொடுபோக்குடன் நடந்து கொள்பவர். சினிமாப் படம், பாடல்கள் மற்றும் கேளிக்கை விடயங்களில் மோகம் கொண்டவர். அதே நேரம் B என்பவர், ஒரு படி மேலே சென்று, ஒரு தஃவா இயக்கத்துடன் ஓரளவு தொடர்புகளை வைத்திருப்பவர். அடிப்படையான அமல்களை முடிந்தளவு அமுல்படுத்த முயற்சிப்பவர்.

B:
நண்பனே, நீ படம், பாட்டு, கேளிக்கை என்று அலைந்து திரிகிறாயே; உனது மறுமை பற்றி சிந்தித்து அதற்கான அமல்களில் ஏன் ஈடுபடக்கூடாது?

A:
அதுதான் விதி. இதனை மாற்ற முடியாது.

B:
ஏன் முடியாது? நீயாக நினைத்து, முயற்சியும் செய்தால் மாற்றலாமே?

A:
அது எப்படி முடியும்? எனது செயற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை, அதன் படியே அனைத்தும் நடக்கிறது என்பதுதானே எமது ஈமான்? பிறகு எப்படி நானே புதிதாக ஒன்றை நினைக்கலாம்? நான் இப்படி நடக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தால் அதுதானே நடக்கும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

'கழா கத்ர்' பற்றிய உங்களது எண்ணங்களும் இவ்வாறு இருக்கலாம். இது முற்றிலும் பிழையானது; அவ்வாறாயின் சரியானது என்ன? நாம் இதனை கணனி எண்ணக்கருவுடன் இணைத்து எளிதாக விளங்கப்படுத்த இருக்கிறோம்.
 
 
தொடரும்..........

செவ்வாய், 1 ஜூன், 2010

படைப்புகளில் இறை அத்தாட்சி


மாவனல்லை Tharbiya Centre இல் மாதாந்தம் நடைபெறும் Akeeda வகுப்பில் DR. MSM Faique அவர்கள் "படைப்புகளில் இறை அத்தாட்சி"  எனும் தலைப்பில்  நிகழ்த்திய விளக்க வகுப்பிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறோம்.

இதன் தொடர்சியை முழுமையாக பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.....


நன்றி: அன்வர் ஸதாத்