இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 செப்டம்பர், 2012

ஹிஜ்ரத்: மனித வரலாற்றையே மாற்றியமைத்த மகத்தான நிகழ்வு


இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “மனிதா! நீ சில நாட்களின் தொகுதி என்பதை அறிந்து கொள். உனக்கென்று சில நாட்கள் இருக்கின்றன. அவற்றின் தொகுதியாகவே நீ இருக்கின்றாய். ஒவ்வொரு நாளும் முடிவடைய நீயும் முடிந்து உனக்குரிய நாட்களின் தொகுதியும் முடிவடைந்து உனது வாழ்க்கை நிறைவு பெற்று இவ்வுலகை விட்டுப் பிரிகின்றாய்.” 
அல்லாஹ் எமக்கருளிய நாட்தொகுதியில் எத்தனை நாட்கள் முடிவடைந்து விட்டன என்பது எமக்குத் தெரியாது. எனினும், எஞ்சியிருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்த காலத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டும்.

இந்தவேளையிலே முஹர்ரம் புத்தாண்டிற்கு அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத் நினைவுகூரத்தக்கது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. நபியவர்களின் பிறப்பு, அவரின் மரணம், பத்ர் யுத்தம் மக்கா வெற்றி முதலான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நபியவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றபோது, மனித சமுதாயத்தின் தலைவிதியை தீர்மானித்த நிகழ்வுகள் அவரின் வாழ்க்கையில் இருக்கின்றபோது, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுடைய ஆண்டு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது தீர்மானத்தின் பின்னணியில் ஏராளமான நியாயங்கள் உள்ளன.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

இஸ்லாம் - மாதிரி வினாத்தாள் (சா/த) - 2012


                                                                  2012 December                                                         
                                      கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதரண) தரப் பரீட்சை                               
                                     General Certificate of Education (Ord. Level) Examination

1. ஒரு முஸ்லிம் சுபஹ் தொழுகையில் கட்டாயமாக ஓத வேண்டிய ஸூra
    1. ஸூரா இக்லாஸ்             2. ஸூரா அல்காஷியா            3. ஸூரா அல்ஃபாத்திஹா            4. ஸூரா அஸ்ஸஜ்தா
2. உமது ஆடையில் தோய்ந்த நஜீஸை அகற்றுவதற்கோ, உமது தாகத்தை தீர்ப்பதற்கோ சாதாரணமாகப் பயன்படுத்த
    முடியாத நீர்?
   1. மாஉன் முத்லக்                     2. மாஉன் தாஹிர்                     3. மாஉன் தஹூர்                4. மாஉன் முதனஜ்ஜிஸ்
3. அல்லாஹ்வால் மனிதர்களுக்கு ஆகுமாக்கப்பட்ட எனினும் அவனால் மகவும் வெறுக்கப்படுகின்ற ஒரு செயல்?
    1. ஷிர்க்                                  2. கொலை                              3. கபாஇர்                            4. தலாக்
4. ஒரு நற்செயலை மக்களின் பாராட்டு, புகழ் என்பவற்றை எதிர்பார்த்து நிறைவேற்றுவது
1. நன்மை தரவல்லது                                                                          2. இணைவைப்புக்கு சமனானது
3. அல்லாஹ்வின் புகழுக்குரியது                                                          4. மதம் மாறுவதற்கு சமனானது

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

அல் அஷ்அரிய்யா

முஃதஸிலாக்கள் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தத்துவ விசாரணையில் ஈடுபட்டதனால் மார்க்க விடயங்களில் பல தவறான விடயங்கள் இடம் பெறலாயின. அவர்களது கருத்துக்கள் மக்களது சிந்தனையைக் குழப்பக் கூடியதாக அமைந்திருந்தன. இதனால் மார்க்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என சில அறிஞர்கள் கருதினர். முஃதஸிலாக்கள் அரச ஆதரவுடன் பலாத்கார முறையில் தமது கருத்துக்களை பரப்பி வந்ததனால் பொது மக்களும் அவர்களை வெறுத்தனர். இச்சந்தர்ப்பத்தில் முஃதஸிலாக்களின் சிந்தனைப் போக்கை புகஹாக்கள் தீவிரமாக எதிர்க்க முற்பட்டனர். இவ்விருசாராரும் தமது போக்கில் தீவிரமாக நடந்து கொண்டதனால் மற்றொரு கொள்கை உருவாகலாயிற்று. இதை உணர்ந்த மற்றொரு பிரிவினர் இவ்விரு சாராருக்குமிடையில் சமரசம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களே இஹ்வானுஸ் ஸபா என அழைக்கப்பட்டனர். இவர்களது முயற்சி சில அறிஞர்களை சிந்திக்கத் தூண்டியது. இவ்வாறான சமூகப் பணியில் தான் அஷ்அரிய்யா இயக்கம் தோன்றியது.

சனி, 18 ஆகஸ்ட், 2012

லாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு


வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள்.

 "ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் "வரலாற்று வரைவியல்"(Historiagraphy). வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய பெருமைக்குரிய முஸ்லிம் வரலாற்று அறிஞர்களில் சிலரை இந்தக் கட்டுரையில் காண்போம். எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

சனி, 28 ஜூலை, 2012

நோன்பு



அனைத்து மத கோட்பாடுகளும் கூறும் அறிவுரைதான் நோன்பு என்று சொல்லப்படும் விரதம். மதங்கள் மனிதனை ஆரோக்கியப் படுத்தவும், நல்வழிப் படுத்தவும் தோன்றியவைதான். இவை மனித ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளன. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப மனிதன் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவன் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியும்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

ரமழான் முபாரக்

இன்று ஆரம்பமாகும் ரமழான், அனைவரது உள்ளங்களிலும் தக்வாவை ஏற்படுத்தி இறை நெருக்கமுள்ளவர்களாக ஆக்கி அருள வேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.

சனி, 28 ஜனவரி, 2012

முஸ்லிம்களும் கிரேக்கப் பண்பாடும்

ரோம அரசன் அலெக்சாண்டர் ஆசிய, ஆபிரிக்க நாடுகளைக் கைப்பற்றியமை கிரேக்க கலாசாரம் கீழைத்தேய நாடுகளில் பரவ வழிவகுத்தது. மூன்று கண்டங்களையும் உள்ளடக்கி வியாபித்துப் பரவிய அலெக்சாண்டரின் சாம்ராஜ்யமானது ஐரோப்பாவில் கிறீஸ், மஸிடோனியா ஆகிய நாடுகளையும், ஆபிரிக்காவில் எகிப்து, லிபியா ஆகிய பிரதேசங்களையும் ஆசியாவில், சிரியா, பலஸ்தீனம், ஈராக், பாரசீகம், துருக்கிஸ் தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவின் சில பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தது.

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ரமழான் 27ம் நாள் இரவுதானா லைலதுல் கத்ர்?


கேள்வி:
சில மக்கள் ரமளானின் மற்றைய இரவுகளை விடவும் ஒரு குறிப்பிட்ட இரவை லைலதுல் கத்ர் என,பல வகையான வணக்க வழிபாடுகளில் மூலம் கழிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இது சரியான வழிமுறையை சேர்ந்தது தானா ?

வியாழன், 14 ஜூலை, 2011

கலப்புக் கல்வி தொடர்பிலான ஒரு பத்வா

ஆண், பெண் கலந்து கல்வி கற்பது தொடர்பில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஷெய்க் பின் பாஸ் அவர்கள் வழங்கிய பதிலை, முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி இங்கு பிரசுரிக்கிறோம். தமிழில் மொழியாக்கம் செய்ய நேரம் இடம் கொடுக்காததால் ஆங்கிலத்திலேயே வெளியிடுகிறோம். தமிழ் பிரசுரம் விரைவில் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

உளம் தொடும் ஒரு கதை

(எனது உள்ளத்தைத் தொட்ட இக்கதை உங்களது உள்ளத்தையும் தொடுகிறதா என வாசகர்களாகிய நீங்களும்தான் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன். நன்றி.)

 இஷாவின் அதானுக்கு 15 நிமிடங்களே எஞ்சியிருந்தன.
நான் அவசர அவசரமாக வுழூ செய்து

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நோன்பும் சுக வாழ்வும்

நோன்பு முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு புனித அமல். இறைவனின் கட்டளை என்பதற்காக அதன் நன்மைகளைப் பற்றி அறியாமலேயே நாம் நோன்பு வைக்கிறோம். ஆனால், வல்ல நாயன் நோன்பின் மூலம் நமக்கு தரும் நன்மைகள், ஏராளம், ஏராளம்! அவற்றுள் சில இதோ... 

 நோன்பு என்றவுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும், சத்து குறைந்து போகும், உடல் மெலிவு உண்டாகும் என்று பல வகைகளில் கருதுபவர்கள் உண்டு. இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் நோன்பை சீராக கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

படி, போராடு, சேவை செய்!

இன்று, உற்பத்திக் காரணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திக் காரணியாக அறிவு (நொலேஜ்) மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் நிதி மூலதனம், உழைப்பு, ஊதியம் முதலான உற்பத்திக் காரணிகள் பெற்ற முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் உள்ளதாக அறிவு மாறியுள்ளது. அதனால்தான் இன்றைய உலகில் முதன்மை பெறுபவர்களாக, ஜாம்பவான்களாக இருப்பவர்கள் 'நோலேஜ் வேர்க்கர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற அறிவுத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்தாம் என்பதை நாம் அறிவோம். இன்றைய உலகில் செல்வந்த நாடுகளைப் பார்க்கிறபோது அந்த நாடுகளின் வருமானத்திலே 85 விழுக்காடு அறிவின் மூலம் பெறப்படுகிறது. ஒரு 15 விழுக்காடு வருமானம்தான் ஏனைய பாரம்பரிய உற்பத்திக் காரணிகளின் ஊடாகப் பெறப்படுவதை நாம் பார்க்கிறோம். எனவே ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா, ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை சீராக வேண்டுமா, தார்மிக, ஆன்மிக, ஒழுக்கப் பண்பாட்டு நிலை சீராக வேண்டுமா அதற்கு வழி அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் படித்தவர்களாய் உருவாவதுதான். அது தவிர மாற்றுவழி கிடையாது.

'படி, போராடு, சேவை செய்' என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ...........

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நவீன காலணித்துவத்தின் சுவடுகள் - 2

சிந்தனா ரீதியான படையெடுப்பு!
இன்றைய முஸ்லிம் சமூகம், ஏக காலத்தில், பல்வேறுபட்ட படையெடுப்புகளுக்கு ஆளாகியுள்ளது. எமது முஸ்லிம் நாடுகள் பல, இராணுவ ரீதியான படையெடுப்புகளுக்கு முகம் கொடுத்த வண்ணமுள்ளன. இந்தப் படையெடுப்பின் அவலங்களை, அவற்றின் மோசமான விளைவுகளை நாம் பார்த்தும் கேட்டும் வருகிறோம்.

திங்கள், 17 ஜனவரி, 2011

நவீன காலணித்துவத்தின் சுவடுகள் - 1

குர்ஆன் மத்ரஸாக்களும் நமது இளம் தலைமுறையும்
அல்லாஹ்வின் அருளால், வருடாந்தம், 200க்கும் அதிகமான மத்ரஸாக்களிலிருந்து மௌலவிமார்கள் பட்டம் பெற்று சமூகத்துக்குள் வருகிறார்கள். இவர்களது குர்ஆனிய அறிவு திருப்திகரமானதாக இருந்தாலும், இவர்களுடைய தொகை மிகச் சொற்பமானதாகும்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்

இஸ்லாம் அறிவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். அது அறிவு, ஆராய்ச்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும், அதனைக் கற்பதனதும் சிறப்புக்களைப் பற்றி இஸ்லாம் மிக விரிவாக விளக்குகிறது. அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

சனி, 30 அக்டோபர், 2010

விஞ்ஞானப் பேராசிரியரும் ஒரு மாணவனும்

அல்லாஹ் பற்றிய ஓர் உரையாடல்

ஒரு நாத்திக விஞ்ஞானத்துறைப் பேராசிரியர், தமது வகுப்பில் புதிதாக சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவனுடன் உரையாட விரும்பி, அந்த மாணவனை எழுப்பினார்.

Professor : நீங்கள் ஒரு முஸ்லிம், இல்லையா ?   
Student : ஆம், ஸேர்.
Professor : அப்படியென்றால், உங்களுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருக்கிறது ?

செவ்வாய், 12 அக்டோபர், 2010

நவீன கால சீர்திருத்த முன்னோடிகளும் அவர்களது அமைப்புக்களும்

1. முஉறம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்)

20ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் இயக்கங்களுக்கும் முன்னோடியாக அமைந்தது இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபின் தஃவாப் பணியே

இஸ்லாத்துக்குப் புத்துயிரூட்டிய சீர்திருத்த முன்னோடிகள்

உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் அனைத்து வகையான ஜாஹிலிய்யத்துக்களையும் ஒழித்து இறைவனது தீனை நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அடிப்படையில்

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

தொழுகையில் 200 க்கு மேற்பட்ட கருத்து வேறுபடும் மஸ்அலாக்கள்

தொழுகையில், தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையுள்ள அசைவுகளின் போது, சுமார் 200 க்கு மேற்பட்ட, கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கக்கூடிய மஸ்அலாக்கள் இருப்பதாக மௌலவி முர்ஷித் முப்தி கூறினார். இன்று, 10.09.2010, நூர் பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் குத்பாவிலேயே இந்த கருத்து முன் வைக்கப்பட்டது.
மௌலவி முர்ஷித் தமது உரையில், மூன்று முக்கியமான கருத்துக்களை மக்கள் முன் வைத்தார்.
  1. ஒவ்வொரு முஸ்லிமாலும், நோன்பு காலத்தில் முக்கியத்துவம் கொடுத்து செய்யப்பட்ட அமல்கள், நோன்பு முடிந்த பின்பும் அவ்வாறே தொடர வேண்டும். இதனைத்தான் அல்லாஹ் விரும்புகிறான். ஒருவனது நோன்புடைய கிரியைகள் கபூல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்கு இது பிரதான அடையாளமாகும். யாருடைய அமல்கள் நோன்பு காலத்துடன் நின்று விடுகிறதோ, அவரது நோன்பு கால அமல்கள் அல்லாஹ்விடத்தில் மதிப்புப் பெறவில்லை என்பதை இதிலிருந்து புரியலாம்.
  2.  வெள்ளிக் கிழமை நாட்களில் பெருநாள் வந்தால், பெருநாள் குத்பாவும் ஜும்ஆ குத்பாவும் பள்ளிவாசலில் கட்டாயம் நடத்தப் படவேண்டும். ஆனால், ஏதாவது  ஒரு குத்பாவில் கலந்து கொள்ளாமலிருக்க சிலர் அனுமதிக்கப்பட முடியும். பெருநாளுடைய தினத்தின் முக்கிய அமல்களுல் ஒன்றுதான் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்வது. பள்ளிவாசலுக்கு அதிக தூரத்தின் காரணமாக, இரண்டு குத்பாக்களிலும் கலந்து கொள்வதால், யாருக்கு மேற்சொன்ன அமல் விடுபடுகிறதோ, அவருக்கே இந்த அனுமதி வழங்கப்பட முடியும்.
  3. ஒரு யுத்தத்தை விட பித்னா கொடுமையானது. இந்த பித்னாவுக்கு வழி வகுப்பதுதான் கருத்து வேறுபாடுகளின் போது விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வது. தொழுகையில், தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையுள்ள அசைவுகளின் போது, சுமார் 200 க்கு மேற்பட்ட, கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கக்கூடிய மஸ்அலாக்கள் இருக்கின்றன. இமாம்கள் யாரும் இவற்றை வைத்து சண்டையிட்டுக் கொள்ளவில்லை. மாறாக, இது இஸ்லாத்தின் நெகிழ்வுத் தன்மையைக் காட்டுவதாகவே எடுத்துக் கொண்டார்கள்.
 காலை 8:25 மணியளவில் ஆரம்பித்த குத்பா 9:00 மணியளவில் நிறைவு பெற்றது.