கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி ஸர்கல் மூன்றாவது முறையாக நடாத்திய இலவச கத்னா வைபவம் நேற்று மாலை ஸர்கல் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, திஹாரிய, பூகொட மற்றும் நாம்புலுவ ஆகிய ஊர்களைச் சேர்ந்த சுமார் 25 வறிய சிறார்கள் பயன்பெற்றார்கள். இவர்களுக்கான கத்னா இலவசமாக செய்யப்பட்டதுடன், பண அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான பூரண அனுசரணையை, கனடாவில் வசிக்கும் நம் நாட்டு பரோபகாரி ஒருவர் ஏற்றிருந்தார்.
வறியோருக்கு உதவும் இந்த நல்ல நிகழ்வை சிறப்பாக நடாத்துவதில் தொடர்புற்ற அனைவருக்கும் அவரவர்களின் பங்குக்கு ஏற்ப இறைவன் கூலியை வழங்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம். தொடரட்டும் இந்த நற்பணி!
வறியோருக்கு உதவும் இந்த நல்ல நிகழ்வை சிறப்பாக நடாத்துவதில் தொடர்புற்ற அனைவருக்கும் அவரவர்களின் பங்குக்கு ஏற்ப இறைவன் கூலியை வழங்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம். தொடரட்டும் இந்த நற்பணி!