இஸ்லாம்/சர்வதேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம்/சர்வதேசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜூலை, 2012

கூடா நட்பு கேடாய் முடியும்



imagesCA1IB1FJஇஸ்ரேல் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லாத நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொலை செய்வதில் வல்லவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வரும் நிவாரண குழுக்களை சர்வதேச எல்லையில் வைத்து தாக்குபவர்கள் என பல விரும்பத்தகாத சிறப்புகளை கொண்ட நாடு. இந்த நாடு உருவாகிய விதமும் அதனை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்து வருகின்றன.

வெள்ளி, 11 மே, 2012

இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது இலங்கைக்கு ஆரோக்கியமானதல்ல, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

ஊடக அறிக்கை
 
இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை,இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

புதன், 2 மே, 2012

தம்புள்ள பள்ளி விவகாரம் - நாம் என்ன செய்தோம்?

தம்புள்ள  ஹைரியா பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம்கள், கண்டனப் பேரணிகளும் ஹர்த்தால் நடவடிக்கைகளும் மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்; இன்னும் வெளியிட்ட வண்ணமுள்ளனர்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தம்புள்ள பள்ளிவாசல் தகர்ப்பு - ஒரு பின் குறிப்பு

'புனித பூமி' என்ற பெயரில் முஸ்லிம்கள் வாழும் இடங்களையும் அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களையும் அழித்தொழிக்கும் சதி நாடகத்தின் மற்றொரு காட்சிதான் கடந்த வெள்ளிக்கிழமை, 20.04.2012 - தம்புள்ளையில் இடம் பெற்றது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

Dr. Abu Ameenah Philips

 சமீபத்தில் நம் நாட்டுக்கு வருகை தந்த புகழ் பெற்ற கனேடிய இஸ்லாமிய அறிஞர் பற்றிய ஒரு சுருக்க அறிமுகம்

Dr Abu Ameenah Bilal Philips is a Jamaican Canadian Islamic Scholar who converted to Islam in the early seventies after journeying politically and intellectually from Christianity to Communism. Shortly after his reversion to Islam, he embarked on a spiritual academic journey to the other side of the world seeking Islamic knowledge. This journey took him to Saudi Arabia where he completed a BA in Islamic studies in Madeenah, and an MA in Islamic Theology in Riyadh, then to the University of Wales, UK, where he completed a PhD in Islamic Theology in the early nineties.

சனி, 24 டிசம்பர், 2011

அல் அக்ஸா தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள்

* கி.பி. 636   இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களால் ஜெரூஸலம் கைப்பற்றப்படுதல் மற்றும் அவர்களுடைய மஸ்ஜித் கட்டப்படுதல்

* கி.பி. 685 உமையா கலீபா

புதன், 4 மே, 2011

பின் லாடனின் கொலையில் துலங்கும் மர்மம்


கொல்லப்பட்ட பின் லாடனின் படம் அமெரிக்காவால் வெளிவிடப்பட்டதல்ல. அது பாக்கிஸ்தானிய தொலைக்காட்சியால் வெளிவிடப்பட்டது.
அது போலியானது என்று

திங்கள், 2 மே, 2011

ஒரு தியாகியை இழக்கிறோம்!

உஸாமா பின் லாதின் மரணமான செய்தி உலகெங்குமுள்ள அமெரிக்க அபிமானிகளுக்கு அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி யதார்த்தமானதும் கூட. ஏனெனில், உஸாமாவை தங்களது எமனாகவே இவர்களில் பலர் கருதி வந்தனர்.

உலகின் பார்வையில் உஸாமா ஒரு பயங்கரவாதி.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

Dr. Zakir Naik Set to Address Oxford Union in Historic Debate

Islamic preacher Dr Zakir Naik, barred from the UK by Home Secretary Theresa May, is set to address the Oxford Union in historic debate next week. Following the address on peace and religious tolerance, Dr Naik will hold a Q&A session with undergraduates and academics via satellite link

புதன், 2 பிப்ரவரி, 2011

ஜோர்தானிலும் புரட்சி! மந்திரி சபை கலைப்பு!!

டியூனீசியா மற்றும் எகிப்தைத் தொடர்ந்து ஜோர்டானிலும் புரட்சி வெடித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலை வாசி உயர்வு போன்றவற்றை எதிர்த்தே இந்த மக்கள் புரட்சி வெடித்தது. 'பிரதமர் பதவி விலக வேண்டும், புதிய பிரதமர் மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு ஏற்றதாக யாப்பு மறுசீரமைக்கப்படவேண்டும்' போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

போலியான வீடியோ பதிவுகளை உருவாக்கும் முயற்சியில் CIA உளவு பிரிவு!

இஸ்லாம்  சார்த்த அமைப்புகளையும் நபர்களையும்   மிகவும் கேவலமாகவும் பயங்கரமாகவும்  சித்தரிக்க  போலியான நாடகங்களை அரங்கேற்றி வருவது CIA உளவு அமைப்பில் கடமையாற்றிய உறுப்பினர்கலாலேயே அவ்வப்போது  வெளிப்படுத்தப்  பட்டுவருகின்றது. முன்னால் CIA உளவுத்துறை நிபுணர்கள் தமது அனுபவங்களை  வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட   தகவல்களை  நீண்டகால புலனாய்வு ஊடக அனுபவம் கொண்டவரான ஜெப்  ஸ்டீன்    Jeff Stein- மேலும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

எகிப்து சர்வாதிகாரத்துக்கு எதிராக இஸ்லாமியவாதிகள் பேரணி. இது இஸ்லாமிய எழுச்சியின் ஆரம்பமா?

சர்வாதிகாரி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து எகிப்தின் பல இடங்களில் இன்று பேரணி இடம்பெற்றுள்ளது. இது முபாரக் ஆட்சியின் முடிவுக்கான ஆரம்பம் என யூஸுப் கர்ளாவி கூறியுள்ளார். இவை தொடர்பான தகவல்களை ourummah.org இனூடாக வழங்குகிறோம். கீழே க்ளிக் செய்யுங்கள்.

ourummah.org

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

அமெரிக்கா இன்றி நமது இருப்பு இல்லை-பெரஸ்

பலஸ்தீனுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து தற்போது உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிப்பதன் மூலம் ஈரான் மீதான போர் முன்னெடுப்பில் அமெரிக்கவுக்கு இஸ்ரேல் உதவ முடியும்

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அல் ஜஸீரா தொலைக்காட்சி நிருபர் மீது தாக்குதல்

அல் ஜஸீரா தொலைக்காட்சி நிருபரான நிஸாம் மஹ்தவி என்பவரும் அவரது உதவியாளர்களும் அமெரிக்காவில் வசிக்கும் ஈராக்கியர்களால் தாக்கப்பட்டுள்ளனர். சதாம் ஹுஸைன் அரசின் வீழ்ச்சி

வெள்ளி, 1 அக்டோபர், 2010

ஆத் சமுதாய மக்களா இவர்கள்?! ஸுப்ஹானல்லாஹ்.


அரேபியப் பாலைவனத்தின் கிழக்குப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இயற்கை வாயு ஆய்வொன்றின் போது, நிலத்துக்கடியிலிருந்த அசாதாரண பருமனுடைய ஒரு எலும்புக் கூடு

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு ஒத்திவைப்பு. அடுத்த அமர்வு செப். 28

பாபரி மஸ்ஜிதை மீள் நிர்மாணிப்பதா? அல்லது ராமர் கோயிலைக் கட்டுவதா? என்பது சம்பந்தமாக இன்று வழங்கப்படவிருந்த தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் இனக்கலவரம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கும் திகதி பிற்போடப் பட்டதாக அலஹாபாத் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

"தீர்ப்பைப் பிற்போடுவதால் ஏரளமான நன்மைகள் உண்டு. கலவரம் ஏற்படும் சூழல் தடுக்கப்படுகிறது; தீர்ப்பின் வாசகங்களை மீளாய்வு செய்ய அது வழிகோலுகிறது; ........." என வழக்கை விசாரித்த நீதிபதிகளுள் ஒருவர் கூறியுள்ளார்.

வழக்கின் அடுத்த அமர்வு செப்டம்பர் 28 இல் நடைபெறவுள்ளது.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி?!

கொழும்பு: பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுவதாக புனே குண்டுவெடிப்பு  வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி கூறியுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுதவறானது, இலங்கையில் யாருக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை என்று இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரான கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.

புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் 29 வயதான மிர்ஸா ஹிமாயத் பேக். இவர்தான் இந்த சதித் திட்டத்தின் முக்கிய காரண கர்த்தா. இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், லஷ்கர் போராளிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை கோத்தபயா மறுத்துள்ளார். இதுகுறித்து கோத்தபயா கூறுகையில், இலங்கையில் தற்போது எந்த தீவரவாத இயக்கமும் இல்லை, தீவிரவாதிகளும் இல்லை. யாருக்கும் இங்கு எந்தப் பயிற்சியும் கொடுக்கப்படவும் இல்லை. பயிற்சி முகாம்களும் நடத்தப்படவில்லை.

இலங்கை தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு விட்டது. இங்கு தீவிரவாதிகள்  நடமாட இடமே இல்லை, வாய்ப்பும் இல்லை என்றார் கோத்தபயா.

வியாழன், 9 செப்டம்பர், 2010

குர்ஆன் எரிப்பு போராட்டம்: வத்திக்கான் எதிர்ப்பு

அமெரிக்க தேவாலயம் அறிவித்துள்ள குர்ஆன் எரிப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வத்திக்கான், இது இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துகிற செயல் என்று கூறியுள்ளது.

நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடத்தப்போவதாக அறிவித்த குர்ஆன் எரிப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று அமெரிக்காவின் புளோரிடா தேவாலயம் அறிவித்துள்ளது.

இத்தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதமே வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி நெருங்கி வருவதால், குர்ஆன் எரிப்பு போராட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க அரசு தரப்பிலிருந்து அத்தேவாலயத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  புளோரிடா மாகாண அரசின் அமைச்சராகவும் இருக்கும் பாஸ்டர் ஜோன்ஸ், திட்டமிட்டபடி குர்ஆன் எரிப்பு போராட்டம் நடந்தே தீரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தேவாலயத்தின் இந்த அறிவிப்புக்கு வத்திக்கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வத்திக்கான் விடுத்துள்ள அறிக்கையில், குர்ஆன் எரிப்பு இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை மூட்டிவிடும் என்றும், இஸ்லாமியர்களுடனான சுமூக உறவை பேணுவதில் வத்திக்கானுக்கும் பொறுப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு மதத்திற்கும் அதன் புனித நூல்களையும், இடங்களையும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சின்னங்களையும் மதிக்கும் உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சனி, 29 மே, 2010

ஈரானிலும் ஒரு கஅபா?! இரண்டாம் அப்ரஹா? அன்று யமனில்! இன்று ஈரானில்?!!

ஈரானியர் தமக்கென ஒரு கஅபாவை நிர்மாணித்துள்ளதாக இணையங்கள் மூலம் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட ஒரு பாரிய உள்ளரங்கில் இந்த கஅபா மற்றும் மகாமு IBRAHIM என்பன நிருமாணிக்கப்பட்டு, ஈரானியர் இவற்றில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன. மக்காவுக்குள் நுழைவதற்கு ஸவூதி அரசினால் ஈரானியருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் கூறுகின்றன. அத்துடன் அது சம்பந்தமான படங்களும் இணையத்தில் தாராளமாகவே உலவுகின்றன. இதோ அவற்றுள் சில!






வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டுமென இலங்கை கோரிக்கை

‘மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமானால், கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறிவிட வேண்டும்’ என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. 1967 ஆம் ஆண்டில் இருந்த எல்லைகளுக்கு இஸ்ரேல் துருப்புக்கள் பின்வாங்கி, பலஸ்தீனத்துக்கு எதிரான தடைகளையும், சட்ட விரோத குடியேற்றத் திட்ட விஸ்தரிப்புகளையும், பிரிவினைச் சுவர் கட்டப்படுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை கோரியுள்ளது.

நியூயோர்க்கில், இலங்கையின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பிரதி நிரந்தர பிரதிநிதி பந்துல ஜயசேகர ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பலஸ்தீன பிரச்சினை பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவது அவசியம் என்று இலங்கை நம்புவதாக தெரிவித்தார். எனவே, விட்டுக் கொடுக்க முடியாத பலஸ்தீன உரிமைகள், இரு-நாட்டு தீர்வு ஆகிய இரண்டு அம்சங்கள் பற்றிய தீர்மானத்தை சகல தரப்பினரும் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென இலங்கை கோருவதாக அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தில் பொருளாதார தடைகள் தளர்த்தப்பட்டதை கவனத்தில் எடுத்துக் கொண்ட அதே வேளை, பலஸ்தீன மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பில் நாளாந்தம் படும் துன்பங்கள், அவலங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பலஸ்தீன அதிகார சபையும் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றும் அதே வேளை, இஸ்ரேலிய சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்த அதன் பிரதேசம் பயன்படுத்தப் படுவதில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஜயசேகர தெரிவித்தார். சட்ட விரோத ஆயுதங்கள் பிரதேசத்தினுள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்; சிவிலியங்களின் பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் உறுதிப்படுத்த இரு தரப்பினரும் தம்மாலானதை செய்ய வேண்டும் என்றும் ஜயசேகர கேட்டுக் கொண்டர்.

ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன அதிகார சபையையும், பேச்சுவார்த்தைகளை தாமதமின்றி ஆரம்பிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் இலங்கை ஆதரிப்பதாக தெரிவித்த ஜயசேகர, நிலையான சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள பலஸ்தீன மக்களின் ஒற்றுமை அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்ற சூழலை இரு தரப்பினரும் ஏற்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த இலங்கை பிரதிநிதி, புதிய குடியேற்றத் திட்டங்களை ஆரம்பிப்பது பற்றிய அறிவித்தலால் இதுவரை ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது குறித்தும் கவலை தெரிவித்தார்.