வியாழன், 6 மே, 2010

ஒழுக்கம் பேணுவோம் அமைதி காண்போம்

மனித வாழ்வில் இன்றியமையத ஒரு தேவை அமைதி. அந்த அமைதி பெரும் ஒரே வழி வாழ்வின் அனைத்து விடயங்களிலும் ஒழுக்கம் பேணுவதுதான்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படும் என்று அறிந்திடுக்கிரோம். ஆனால் உயிரிலும் மீலான ஒழுக்கம் என்றால் என்ன என்பதை அRiயaதிருக்கிரோம்.  திருக்குறள் கூரும் ஒழுக்க விழுமியங்கள் இவை.

திருக்குறள் > இல்லறவியல்

131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்


உயிரினும் ஓம்பப் படும்.

பெருமைக்குரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பது உயிரினும் உயர்ந்ததாகக் கொள்ளப் படும்.

132. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்


தேரினும் அஃதே துணை.

எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கமே வாழ்க்கைக்கு சிறந்தது என்பதால் அதை பேணிக் காத்திடல் வேண்டும்

133. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்


இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கத்துடன் வாழ்பவர் உயர் குடியினர் எனவும் அஃதிலார் இழிந்தவர் எனவும் கொள்ளல் தகும்

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்


பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

ஒழுக்கம் தவறியவன் தான் இழிபிறப்பின் நிலை எய்தியதை காண்பான்.

135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை


ஒழுக்க மிலான்கண் உயர்வு.

மனத்தூய்மை இல்லாதவனின் செயல் பயனுடையதன்று, அது போல் ஒழுக்கமில்லாதனுக்கு உயர்வு வாய்க்காது.

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்


ஏதம் படுபாக் கறிந்து.

ஒழுக்கம் தவறியதால் நேரும் துன்பம் அறிந்தவர், ஒழுக்கத்தினின்று பிறழ மாட்டார்.

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்


எய்துவர் எய்தாப் பழி.

ஒழுக்கமுடையவர் மேன்மை அடைவர், ஒழுக்கம் தவறியவர் கொடும் பழியைப் பெறுவர்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்


என்றும் இடும்பை தரும்.

நல்ல செயல்களுக்கு நல்ல ஒழுக்கமே அடிப்படை; தீய ஒழுக்கம் தீமையையே தரும்.

139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய


வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கமுடையவர் தீயனவாயின் வாயால் கூட, தவறியும் கூற மாட்டார்கள்

140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்


கல்லார் அறிவிலா தார்.

பல கல்வி கற்றும் உலக வழக்கத்தை ஏற்று நடக்க கல்லாதவர் அறிவற்றவராகவே கருதப் படுவர்.


ஒழுக்கம் என்றால் என்ன?

"ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல" என்பதாக தந்தை பெரியார் கூறுகிறார்.அது மட்டுமன்றி;
  • ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
  • மனிதனிடம் சுலபத்தில் ஒழுக்கத்தைப் புகுத்த வேண்டுமானால், மாணவப் பருவத்தில்தான் முடியும்.
  • பிறருக்கு எந்தவிதத் தொல்லையும் தராத வாழ்வே ஒழுக்கம்.
  • இது எல்லாவித பேத நிலையும் ஒழித்த நிலையில்தான் வளர முடியும்.
  • ஒழுக்க அடிப்படையே இன்ப வாழ்வு.
  • ஒழுக்கம் என்பது தனக்கும் அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.
என்றெல்லாம் அவர் ஒழுக்கத்தை பல கோணங்களில் விளக்குகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக