ஞாயிறு, 9 மே, 2010

Dr. ஸாகிர் நாயக் இலங்கை விஜயம்

பிரபல இஸ்லாமியப் பேச்சாளரான டாக்டர் ஸாகிர் நாயக், விசேட சொற்பொழிவொன்றுக்காக இலங்கை வரவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து "பளிச்"சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்துள்ள தகவலின் படி, அந்த விசேட சொற்பொழிவு, எதிர்வரும் 23.05.2010, ஞாயிற்றுக் கிழமை, சுகததாச உள்ளரங்கில் நடைபெற இருக்கிறது.  இதற்கான ஏற்பாடுகளை, இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்கள் சிலர் பொறுப்பேற்றுள்ளதாகவும், எமது நாட்டிலுள்ள இஸ்லாமிய இயக்கங்கள் இந்த ஏற்பாட்டுக்கான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதாகவும் மேலும் தெரிய வருகிறது. சுமார் 10 000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுவதாகவும் இந்த ஏற்பாடுகளுக்கான உத்தேச மொத்தச் செலவு சுமார் 2 மில்லியன் ரூபா எனவும் அந்தத் தகவல் மேலும் கூறுகிறது.

Dr. ஸாகிர் நாயக் அவர்களின் இலங்கை விஜயம் தொடர்பில் "வீஸா" பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஏற்பாட்டாளர்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக