வியாழன், 24 மார்ச், 2011

பாலிகா பாடசாலைக்கு பாதிப் மௌலானாவின் பெயர்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் பெயரை 'பாதிபிய்யா பெண்கள் பாடசாலை' என மாற்றுவதற்கு பாதிபிய்யா சங்கமும் பாலிகா நிருவாகமும் தயாராகி வருவதாக செய்திகள் பரவியுள்ளன. 

பாலிகா வித்தியாலயம் அமையப்பெற்றுள்ள காணி, பாதிபிய்யா சங்கத்தின் பெயருக்கே எழுதப்பட்டுள்ளதாகவும்,  இதனை மீண்டும் பாலிகா பாடசாலைக்கு எழுதி வைப்பதற்கான நிபந்தனையாக இந்தப் பெயர் மாற்றம் பாதிபிய்யா சங்கத்தினால் முன்மொழியப் பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் கல்வி விடயங்களில் அதீத அக்கறை காட்டிய பாதிப் நாயகம் அவர்களின் பெயர் கொண்டு எமது ஊர்ப் பாடசாலை  அழைக்கப்படுவது நல்லதொரு முன் மாதிரியாகவே எமக்கும் படுகிறது.

13 கருத்துகள்:

  1. ஆயிரத்தில் ஒருவன்25 மார்ச், 2011 அன்று PM 1:33

    பாலிகாவுக்கு பாதிப் மௌலானாவின் பெயர் வைப்பது மிக மிகப் பொருத்தமானதே. கடந்த நூற்றாண்டின் முதற் கூறுகளில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் பங்காற்றிய ஆரம்ப கால முன்னோடிகளான சித்தி லெப்பை, அரபி பாஷா முதலானவர்கள் வரிசையில் நமது பாதிப் மௌலானாவும் முக்கிய இடம் வகிக்கின்றார். அறிஞர் சித்திலெப்பை தாபித்த ஸாஹிராக் கல்லூரிக்கு ஸாஹிரா எனப் பெயரிட்ட மகாங்களுள் இவரும் ஒருவர். எகிப்தியப் புரட்சி வீரர் அரபி பாஷாவோடு அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் பயின்ற இவர் அறிஞர் சித்திலெப்பையின் கல்விப் பணிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவராவார். இவ்வகையில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்த பாதிப் மௌலானாவின் பெயர் ஒரு பாடசாலைக்கு இடப்படுவதில் மட்டட்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்க பாதிபிய்யா பாலிகா வித்தியாலயம்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல விடயம்தான் எனினும் தக்கியாவில் நடக்கும் அட்டகாசமான மார்க்க விரோதச் செயல்கள் பாடசாலையில் நடக்காமல் இருந்தால் சரி

    பதிலளிநீக்கு
  3. பாதிப் நாயகத்தை ஒரு மகான் என்று சொல்கிறீர்கள். அதே நேரம் நதர் கந்தூரியையும் விமர்சிக்கிறீர்கள். அத்துடன் பாதிப் நாயகத்தின் புகழ் பரப்ப, பாடசாலைக்கு அவரது பெயரை வைப்பதை வரவேற்கவும் செய்கிறீர்கள். ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்க மாட்டீர்களா...............?

    பதிலளிநீக்கு
  4. பாதிப் நாயகம் அவர்களை தெளிவாக அறிந்துள்ள படியால்தான் நழ்ர் கந்தூரியை விமர்சிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  5. ஒரு சில தெக்கியா அபிமானிகளுக்காக பாலிகாவின் பெயரை மாற்ற முயற்சித்தால் இருக்கிற பாலிகா ஆதரவில் மேலும் பாதியை இலக்கநேரிடும். ஏனெனில் பாதிப் மௌலானாவின் பெயரால் நடக்கின்ற அட்டஹாசம்கள் நாம் சொல்லி உங்களுக்கு தெரியத் தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  6. தக்கியாக்காரன்1 ஏப்ரல், 2011 அன்று PM 9:32

    அப்துலுக்கு,
    அட்டகாஷங்கள் நடப்பது தக்கியாவில் மட்டுமா? தாருல் அர்க்கத்தில் நடப்பதில்லையா? தஃவாவில்தான் நடந்து முடியவில்லையா? முஅல்லிம்கள் விலக்கப்பட்டதும், சிலர் கடிதங்க்கள் பரிமாறிக்கொண்டதும் நிகழ்ந்துபோன வரலாறு. ஒரே விடயத்தை ஒருவர் செய்தால் சரியென்றும் பிறிதொருவர் செய்தால் பிழையென்றும் எப்படிக் கூறுகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  7. தஃவ்வாவில் அட்டகாசங்கள் நடப்பதாக கூறியுள்ளீர்கள். பெரும்பாலும் தஃவாவில் தவறுகள்
    (நீங்கள் கூறவந்த அட்டகாசம்) நடந்தால் சுட்டிக்காட்டப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட்டு சிறந்த முறையில் இயங்கும் ஒரு இஸ்லாமிய நிறுவனம் தஃவாதான். ஆனால் தக்கியா அப்படியல்ல. முழு இஸ்லாமிய அகீதாவிற்கும் எதிரான நிகழ்வுகள் நடக்கும் ஒரு இடமே தக்கியா என நான் சொல்கிறேன். அப்படியான அட்டகாசங்கள் பாலிகாவில் நிகழாமல் இருந்தால் சரி.
    (கொள்கைக்குப் பின்தான் ஏனையவை.உரியவருக்கு விளங்கும் என நினைக்கிறேன் அல்லாஹ்வைப் பயந்தால்)

    பதிலளிநீக்கு
  8. sakoathararae, baalikaavilum attakaasangal illamal illai. paanaikku oru soaraaka ithanai vaiththukkollungal.

    baalikaavil 10 aam vakupputhaan periya vakuppu. intha vakuppukku kanitha paadam eduppathu oru volunteer teacher. puthithaaka anupavamulla payitrappatta oru aasiriyar irukkiraar. aanaalum antha aasiriyar keel vakuppukalukkae paadam nadaththukiraar. ithu sampanthamaaka athipar nadavadikkai eduppathaakavum theriyavillai.

    ithuvum oru thelivaana attakaasam thaanae?

    பதிலளிநீக்கு
  9. தக்கியாக்காரன்5 ஏப்ரல், 2011 அன்று PM 3:19

    மீண்டும் அப்துலுக்கு,
    என்ன சகோதரரே, தஃவாவில் உள்ளவர்கள் எல்லாம் தவறே செய்யாத மலக்குகளா? அத்தகைய தவறுகள் நடந்ததால்தானே அங்கிருந்த ஒரு முஅல்லிம் விலக்கப்பட்டார். இன்னும் என்னென்னவோ அசிங்கங்கள். வேண்டாமே அவர்களின் பெயர்கள்! பாவம் பிள்ளை குட்டிகளோடு வாழ்பவர். எனவே விடயம் தெரியாமல் உளராதீர்கள். தமக்குள்ளே அசிங்கங்களை வைத்துக்கொண்டு தாம் மட்டுமே சுத்தவாளிகள் எனப் பேசுவது மடமையிலும் மடமை.

    பதிலளிநீக்கு
  10. ஓட்டை வாய்க்குச் சீனிதான் போடவேண்டும். நீர் செப்பியது ரொம்பச் சரிய்ய்யா. ஒரு வொலண்டியரின் பெறுமதிகூட பயிற்றப்பட்ட ஆசிரியருக்கு இல்லையா? இது குறித்து அதிபருக்குச் சிந்திக்கத் தெரியாதா? பாவம் அந்த வயஸாலி மனிஷன். இதுவும் மறுமைக்கான ஓர் அடையாளம்தான்.

    பதிலளிநீக்கு
  11. evvalavo ethirppualukku maththiyil baalikaa paadasaalai valarkkappattirukkirathu. atharku aatharavaaka karuththukkalum valarnthullana. irunthaalum, ethirppu enthak kuraiyumindri baalikaavai erikka tharunam paarththirukkirathu.

    intha nilaiyil, baalikaa paadasaalayin athiparae athan nanmaikku muttukkattai poaduvathendraal............

    vaeliyae payirai maeintha kathaithaan. paalikaavukkaaka mikavum kashtappatta oariruvarin muyarchchi veenaakap poakirathu.

    பதிலளிநீக்கு
  12. யாரிந்த தக்கியாகாரன்?
    கடைந்தெடுத்த முட்டாள் போல் தெரிகிறதே..
    தஃவாவில் உள்ளவர்கள் தவறே செய்யாத மலக்குகள் என்று யாரவது சொன்னார்களா? நபிகள் நாயகம் (ஸல்) உட்பட எல்லா மனிதர்களும் (உங்கள் செய்கு நாயகம், மௌலானா, வலியுல்லா) தவறு செய்பவர்கள் தான். இதையும் சேர்த்தே தஃவாவில் போதிக்கப்படுகிறது.
    அடுத்து, 'தவறுகள் நடந்ததால் முஅல்லிம் நீக்கப்பட்டாராம்' இதைத்தானே சகோ. அப்துலும் தெளிவாக சொன்னார். தக்கியாகாரன் என்னமோ மயிரிழை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது போல் பீத்திக்கொள்கிறார். ஒருவர் தவறு செய்கிறார். அவரை அதற்காகவே நீக்கிவிடுகிறோம். இது நமக்கு பெருமையே. அல்லாமல் உங்கள் தக்கியா வகையராக்கள் போல் மீண்டும், மீண்டும் தவறு செய்பவர்களை வைத்துக்கொண்டு இயக்கம் வளர்க்கும் கேடுகெட்டவர்களல்ல நாங்கள்.
    கடைசியாக, பாதையோரங்களில் அமர்ந்துகொண்டு அடுத்தவன் பலாய் கழுவி, அவதூறு பரப்பும் ஈனப்பிறவிகள் பேச்சுக்கெல்லாம் நாம் எப்போதும் பயப்படமாட்டோம் இன்ஷா அல்லாஹ். தெளிவான ஆதாரங்கள் மூலம் யாருடைய தவறு நிரூபிக்கப்பட்டாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்போம்.
    இதுவொன்றே தஃவா அப்பழுக்கற்றவர்கள் என்பதற்கு போதிய சான்று. சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்வர். நாடி நரம்புகளிலெல்லாம் ரப்பி ஸல்லி கோப்பி ஓடுகின்றவர்களுக்கு கொஞ்சம் சந்தேகமே..

    பதிலளிநீக்கு
  13. ஷபாஷ் மிஸ்டர் விரலாட்டி! தக்கியாக்காரனின் தொடரான அட்டகாஷங்களுக்கு ஒரு முடிவு கட்டத்தான் வேண்டும். குற்றத்தை நிறுவித் தண்டனை வழங்குபவர்களை விமர்சிக்கும் தக்கியாக்காரன், குற்றங்களின் மொத்த உருவங்களாய் இருந்து வருகின்ற பெரிய (இழிந்த) மனிதர்களை பூஜை செய்து வருவதன் நியாயம்தான் என்ன? ஏய் தக்கியாக்காரா! சத்தியத்தை நிலை நிறுத்து; அதர்மத்துக்கு எதிராகப் போராடு; அநியாங்களத் தட்டிக் கேள்; அக்கிரமத்துக்கு விலை போகாதே. இனியவது உமது காமண்ட்ஸ் ஆரோக்கியமானதாய் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு