வியாழன், 29 மார்ச், 2012

ஆப்கானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடிகள் கைது!



   பெண்களைப் போல் உடை உடுத்திக் கொண்டு வாழ்ந்து வந்த இரண்டு தலிபான் தீவிரவாதிகள் பிடிபட்டனராம்.
ஆப்கானிஸ்தான் லக்மான் மாநிலத்தில்
உள்ள கர்காயி மாவட்டத்தில் உளவுப்படை ஏழு தீவிரவாதிகளைப் பிடித்தது. அதில் இருவர் பெண்களைப் போல உடைகள் உடுத்தியிருந்தனர். கருந்தாடி உடைய இளைஞன் ஒருவன் பளிச்சென்று கிளிப் பச்சை நிறத்தில் மேல் முக்காடிட்டு வாடாமல்லி நிறத்தில் உடுப்பு அணிந்திருந்தார். மற்றொருவர் சிவப்பு நிறத்தில் உடுப்பும் அதே நிறத்தில் மேல் முக்காடும் அணிந்திருந்தார். இவர்களை உளவுப்பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

இவர்களை பிரிட்டன் ஊடகம் ஒன்று, “ஒசாமா பின்லேடி” என வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக