ஞாயிறு, 11 மார்ச், 2012

பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

பெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.

சவூதியில் அல் ஐஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்களை கிண்டல் கேலி செய்துகொண்டிருந்த சவூதி வாலிபர் ஒருவரை நன்னெறிக் காவலர்கள் சிலர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறை அந்த வாலிபர் மீது ஷரியா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. அந்த வாலிபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷேக் ஹசன் பின் சாத் அல்காம்தி, அந்த வாலிபர் அந்நகரின் மரித்தார்கொல்லையை (இடுகாடு) துப்புரவு செய்யவும், மேலும் இறந்த மனிதர்கள் ஐவரின் உடலைக் குளிப்பாட்டவும் உத்தரவிட்டு இதுவே தண்டனை என்றும் தீர்ப்பளித்துள்ளார்.


  நன்றி:   மத்திய கிழக்கு செய்திகள்

1 கருத்து:

  1. ஹுப்புர் ரஸூல்11 மார்ச், 2012 அன்று PM 3:18

    பெண்களைக் கேலி செய்தவருக்கே இந்த நிலையென்றால், ரஸூலுல்லாஹ்வைக் கிண்டல் ச்ய்யும் வகையில் அவர்களின் பாதம் என்று கூறி ஸ்டிகர் விற்றுப் பிழைத்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்???

    பதிலளிநீக்கு