ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

பொறுத்திருப்போம் இன்னொரு பைசல் பிறக்கும் வரை ...

"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும், பாலைக் குடித்தும் வாழ்ந்தவர்கள். மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"

 மன்னர் பைசல் (ரஹீமஹுல்லாஹ் ) அவர்கள் "இஸ்ரேலுக்கு" எதிரான ஒக்டோபர் யுத்தத்தின் போது, மேற்கு நாடுகளுக்கு "பெட்ரோல்" விநியோகிப்பதை "நிறுத்திய" போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.

 இந்த வார்த்தையை மன்னர் சொல்லியது மட்டுமல்லாமல் நிகழ்த்தியும் காட்டினார்.

இதை கேள்விப்பட்ட அமெரிக்க அரசாங்கம் அன்றைய வெளிவிவகார செயலாளரான கேஸ்பர் வேயன்பேர்கரை உடனே சவூதிக்கு விளக்கம் கேட்க அனுப்பியது. அப்போது மன்னர் இருந்தது கொதிக்கும் பாலைவனத்தில்...., எந்தவித வசதிகளுமற்ற பந்தலில் (Tent).

 மன்னரை சந்திக்க சென்ற வேயன்பேர்கேர் தனது குளிரூட்டப்பட்ட வாகனத்தில், காலை வெளியே வைத்த மறுகணமே உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார்.அவ்வளவு கொதிக்கும் வெப்பம். மன்னரை காருக்குள் வரச் சொல்லியும் மறுத்து விட்டார்.

மன்னர் பைசலுக்கு தேவைப்பட்டதெல்லாம் எந்த சொகுசுமில்லாமல் எங்களால் எவர் தயவுமின்றி வாழ முடியும் என்று அமெரிக்கர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே..... ஆனால் நடந்தது வேறு!

வேயன்பேர்கேர் அமெரிக்கா திரும்பும் முன்னர் ஒரு வார்த்தையை மன்னரிடம் சொல்லி விட்டு சென்றான். அந்த மந்திர வார்த்தை YOU WILL HAVE TO PAY FOR THIS என்பதுதான்.

மன்னர் கொடுத்த விலை.......  அவரது உயிர்!

இந்த வார்த்தைகள் தான் இன்று வரை அரபு நாட்டு தலைவர்களை அமெரிக்க அடிமைகளாக்கி வைத்திருக்கின்றன.

இன்ஷா அல்லாஹ் பொறுத்திருப்போம். இன்னொரு பைசல் பிறக்கும் வரை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக