வெள்ளி, 6 ஏப்ரல், 2012

ஸாவியாவுக்கு அருகில் வீதி அகலமாக்கும் பணி!

எமது ஊரின் பிரதான வீதியை அகலமாக்கி புனரமைக்கும் பணி, எதிர்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் கூட, சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 
இதற்கென அண்மையில் இருபது இலட்சம் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

இதனடிப்படையில், தற்போது, ஸாவியாவுக்கு அருகில் அகலமாக்கும் வேலை நடைபெற்று வருகிறது. அத்துடன் ஊர் சந்திக்கு அருகில் உள்ள வயல் பகுதியிலும் ஒரு மதில் எழுப்பப்பட்டு, அகலமாக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஊருக்குள் சகல விதமான வாகனங்களும் வரக்கூடியதாக வீதி புனரமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்று நாம் கருதுகிறோம்.

எனவே, இந்தப் பணியில் உழைக்கும் அனைவருக்கும்  சகல நன்மைகளும் கிட்டப் பிரார்த்திக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக