திங்கள், 7 மே, 2012

பாலியல் அத்துமீறல் விவகாரம! பிரித்தானிய நீதிமன்றத்தில் சிங்கள பௌத்த பிக்கு

பாலியல் அத்துமீறல்களில் குற்றஞ்சாட்டப்படிருந்த சிங்கள பௌத்த பிக்குவொருவர் குற்றவாளியென பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்பளித்துள்ளது. இது தொடர்பில் பிபிசி தமிழோசை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் : பிரிட்டனில் உள்ள பிரபல பௌத்த பிக்குகளில் ஒருவரான பகலகம சோமரட்ண பிக்கு பெண்களிடம் கண்ணியத்தை மீறி நடந்தார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை ஜூன் முதலாம் திகதியில் வழங்கப்படும். அதேவேளை வயதுக்கு வராத பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக