செவ்வாய், 15 மே, 2012

ஆசிரியர்களை விரட்டியடிப்பதில் அல் பத்ரியா ஹட்ரிக் சாதனை

நம் நாட்டுச் சூழலில் ஓர் அரசாங்கப் பாடசாலையில் ஆண் ஆசிரியர்கள் இருப்பதென்பது அருமையிலும் அருமையான ஒரு விடயமாகும். கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான ஆண் ஆசிரியர்களைக் கொண்ட ஒரேயொரு முஸ்லிம் பாடசாலை திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி மாத்திரமே. இந்த நிலையில் கடந்த ஆறு வருட காலப்பகுதிக்குள் முக்கிய பாடங்கள் பலவற்றைப் போதித்து வந்த பல ஆண் ஆசிரியர்களை எமது மதிப்பிற்குரிய பத்ரியா நிர்வாகம் அதன் சொந்தக்  காரணங்களுக்காக  விரட்டியடித்ததை எல்லோரும் அறிவர். இவ்வாறு செய்வதொன்றும் பத்ரியா நிர்வாகத்துக்குப் புதிதான விடயமல்ல. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஒரு காலத்தில் மும்மூர்த்திக்களாக இருந்து, பாடசாலையின் முன்னேற்றத்துக்காக  உழைத்த மூன்று முக்கிய ஆசிரியர்களுள் இருவர் ஏலவே நிர்வாகத்தின் வீம்புத்தனம் காரணமாக விரட்டியடிக்கப்பட்டனர். இன்று எஞ்சியிருந்த மூன்றாவது விக்கட்டும் கழற்றப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட மூவரும் மீண்டும் ஒரே பாடசாலையிலேயே ஒன்று சேர்ந்துள்ளனர் என்பது அந்த மும்மூர்த்திகளைப் பொருத்தவரை மகிழ்ச்சிப்படத்தக்க விடயமாகும். ஆறு வருடங்களின் பின்னர் அவர்கள் மூவரும் ஒன்றிணைந்த அந்த மகிழ்வான நிகழ்வை இன்று அல் அஸ்ஹர் கண்டீன் சாலையில் வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிந்ததாக செய்திகள் கூறுகின்றன.

வாழ்க அல்-பத்ரியா!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக