புதன், 2 மே, 2012

தம்புள்ள பள்ளி விவகாரம் - நாம் என்ன செய்தோம்?

தம்புள்ள  ஹைரியா பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முஸ்லிம்கள், கண்டனப் பேரணிகளும் ஹர்த்தால் நடவடிக்கைகளும் மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்; இன்னும் வெளியிட்ட வண்ணமுள்ளனர்.


ஆனால், அது என்ன துரதிஷ்டமோ தெரியவில்லை, நூறு வீத முஸ்லிம்கள் வாழும் எமது ஊரான கஹட்டோவிட்டாவில் அப்படியான எந்த சலசலப்பையும் காண முடியவில்லை. ஆகக் குறைந்தது, கண்டனத்தை வெளிப்படுத்த ஒரு சுவரொட்டியையேனும் காணக் கிடைக்கவில்லை. 

அஷ்ஷெய்க் யூஸுப் கர்ளாவி அவர்கள், "நீங்கள் சிறுபான்மை இனம் என்று எண்ணாதீர்கள்; நாங்களும் உங்களுடன் இருக்கிறோம்" என்று எமது மக்களுடன் இணைந்து கட்டார் நாட்டிலிருந்து குரல் கொடுக்கும் போது, ஒரே நாட்டில் வாழும் சகோதரர்களுக்காக எமது கவலையை நாம் வெளிப்படுத்தாதது மிகவும் கவலை தருகிறது. 

ஏன்? நாம் அந்த பரந்த முஸ்லிம் சமுதாயத்தின் ஓரங்கமாக இல்லாமல், தனியொரு பிரிவா?? சந்தேகம் வருகிறது!

நாம் இப்படி வாளாவிருக்கும் நிலையில், குவைத்தில் பணி புரியும் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சகோதரர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட ஒரு கண்டனக் கூட்டம் பற்றி அறிந்து கொண்ட போது, எமக்கு ஒரு வெட்க உணர்வு ஏற்பட்டது.

அந்த நிகழ்வை, இந்தியாவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் அறிக்கையிட்ட விதத்தை, ஓர் உதாரணத்துக்காக கீழே தருகிறோம். உங்களுக்கும் ஏதாவது உணர்வு ஏற்படுகிறதா என்று பாருங்கள்.


இலங்கை தம்புள பகுதியில் உள்ள பள்ளியை புத்த பிக்குகள் சேதப்படுத்தியதை கண்டித்து .குவைத் மண்டலம் நடத்திய விழிப்புணர்வு கூட்டம்
அல்லாஹ்வின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் இலங்கை தம்புள பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த இறை இல்லத்தில் மத வெறிக்கொண்ட புத்த பிக்குகள் வெறியாட்டத்தில் இறங்கி அப்பள்ளியை சேதப்படுத்தியதை கண்டிக்கும் விதமாகவும் இக்கண்டனத்தை இலங்கை அரசுக்கு எடுத்து செல்லும் விதமாகவும் ஒரு விழிப்புணர்வு கூட்டத்திற...்கு குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 27-4-2012 அன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முர்காப் பகுதியில் உள்ள மனோ சல்வா உணவகத்தில் ஏற்ப்பாடு செய்திருந்தது.மண்டல செயலாளர் சகோ கூத்தாநல்லூர் ஜின்னா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆரம்பமாக சகோதரர் இலங்கை ஒட்டுமாவடி ஃபாஹிர் அவர்களின் துவக்க உரை நிகழ்த்தினார்.அதை தொடர்ந்து மண்டல தலைவர் சகோதரர் கூனிமேடு ராஜா உணர்ச்சிமிகு சிறப்புரையாற்றினார்.காவி உடையணிந்த புத்த பிக்குகளின் அட்டகாசங்களை பட்டியலிட்டு இலங்கை முஸ்லீம்களின் இன்றைய நிலையை விளக்கினார்.சகோதரர் ராஜா அவர்களின் உரை வந்திருந்த மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.பின்னர் சகோதரர் இலங்கை பைரோஸ் அவர்கள் "காக்க வேண்டிய பள்ளிகளும் கற்க வேண்டிய பாடமும்" என்ற தலைப்பில் எழுச்சி உரை நிகழ்த்தினார்.சகோதரர் பைரோஸ் தனது உரையில் தம்புள பள்ளிவாசலின் வரலாறை எடுத்து விளக்கியோதோடு இதுவரை இலங்கையில் முஸ்லீம்கள் பட்ட அவலங்களையும்,பறிகொடுத்த பள்ளிகளையும் பற்றி விவரித்து இனிமேலாவது நாம் பாடம் படிக்க வேண்டும் இல்லையெனில் இலங்கையில் ஒரு காலத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்தார்கள் என்ற நிலை வந்துவிடும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.அதை தொடர்ந்து குவைத்தில் உள்ள இலங்கையை சார்ந்த முஸ்லீம்கள்,பவ்த்தர்கள்,கிருஸ்துவர்கள்,மற்றும் இந்து மக்கள் அனைவரிடமும் அதாவது குறைந்த பட்சம் இரண்டாயிரம் பேரிடம் இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக வாசகம் அடங்கிய பேபரில் கையெழுத்து வாங்கி அதை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தை பதிவு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.மேலும் இலங்கையில் நமது SLTJ இந்த விசயத்தில் வீரியமாக இறங்கி போராடி வருகிறது.அதன் முதல் கட்டமாக 27-4-2012 அன்று ஒரு கண்டன பேரணியை நடத்தியிருக்கிறது.இதில் இலங்கை அரசு தக்க நடவடிக்கை எடுக்கவில்லையானால்.இனி வரும் காலங்களில் SLTJ நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் தாயகத்தில் உள்ள நமது சொந்தங்களை அனுப்பி கலந்து கொள்ள சொல்லி அநீதிக்கு திராண இது போன்ற கலப்போராட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பதேன முடிவு செய்யப்பட்டது.மேலும் குவைத்தில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் விதமாகவும் இலங்கையில் சகோதரர்களாக வாழ்ந்து வரும் முஸ்லீம் மற்றும் பவத்த மத மக்களுக்கிடையில் மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும் ஒருசில மத வெறி பிடித்த புத்த பிக்குகளை அடையாளம் காட்டும் விதமாக சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பிரசுரம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டது.இரண்டு நாளில் முடிவு செய்யப்பட்டு ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.வந்த்ருந்த சகோதரர்களுக்கு மண்டலம் சார்பாக சிற்றுண்டி வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாட்டை சகோதரர் நாசர்,ரியாஸ்,அப்துல் வாஹித் மற்றும் சித்திக் ஆகியோர் குறுகிய நாட்களில் சிறப்பாக செய்திருந்தனர்.
 
 
அவர்கள் எங்கே?..... நாம் எங்கே??.......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக