சனி, 11 பிப்ரவரி, 2012

ஒபாமாவை கொல்ல மாணவன் ஒருவன் சதி !

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைக் கொல்ல சதி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மாணவன் ஒருவன் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணமாகி உள்ளது.


அமெரிக்காவில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், பெருமளவிலான வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் வைத்திருந்த உஸ்பெகிஸ்தான் மாணவர் உலக்பெக் கோடிரோவ் என்பவர், ஒபாமாவைக் கொல்ல சதிதிட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உலக்பெக் கோடிரோவ் கைது செய்யப்பட்டு, அவர் மீதான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில்,இந்த வழக்கில் மாணவன் உலக்பெக் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாகவும்,இந்த வழக்கில் அவர் குற்றவாளிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக