திங்கள், 1 அக்டோபர், 2012

உலக சிறுவர் , முதியோர் தினம் இன்று


அக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகவும் , உலக முதியோர் தினமாகவும் உலகெலாம் கொண்டாடப்படுகிறது . இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் . நாளைய தலைவர்கள் எதிர்கால முதியவர்கள் ஆகிறார்கள் .

எல்லோரும் சிறுவராக நீண்டகாலம் இருக்க முடியாது . அவர்களும் முதிய நிலையை அடையும் போது முதியவர்கள் ஆகின்றனர் . இது இயற்கை . இப்படி சொல்வார்கள் இதையும் கேளுங்கள் . பனை மரத்தில் இருந்து காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது என்பார்கள் . அதன் அர்த்தம் என்ன தெரியுமா ? காய்ந்த ஓலை தனது பருவம் முடிந்ததும் மரத்தில் இருந்து கீழே விழும் . அதனை பார்த்து குருத்து ஓலையின் நினைப்பு தான் எப்போதும் அப்படியே மரத்தில் இருப்பேன் என்ற நினைப்பு . தானும் ஒருநாள் இதே ஒலைபோல் காய்ந்தவுடன் மரத்தில் இருந்து கீழே விழுவேன் என்று அதுக்கு அப்போது புரியாது . ம்ம்ம்ம் இப்படித்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள் .


இன்று எத்தனை சிறுவர்கள் புத்தகம் ஏந்த வேண்டிய கைகளில் பிச்சை பாத்திரமும் , கல்லுகள் , வண்டில்கள் என்று இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் . பள்ளி செல்ல வேண்டிய நேரத்தில் படிப்பை தொலைத்துவிட்டு பிச்சை ஏந்தி சாப்பிட்டு பிழைக்க வேண்டிய நிலைமை . இன்று உலகளவில் சிறுவர்கள் பலர் சொல்லொணா துன்ப , துயரங்களை சந்திக்கிறார்கள் .

பலர் பெற்றோரை இழந்தும் , உண்ண உணவின்றி பட்டினியால் உருக்குலைந்தும் , அனாதைகளாக வேறொருவருக்கு அடிமையாக எல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் . என்ன கொடுமையப்பா ? . பசிக்கிறது . என்ன செய்வது . குப்பை தொட்டிகளுக்குள் கொட்டும் உணவை எடுத்து சாப்பிட்டு பசியை போக்கி கொள்கிறார்கள் .

ஏன் இந்த கொடுமை ? வசதி படைத்தவர்கள் இப்படியான சிறுவர்களுக்கு உதவலாம் . அவர்களையும் தம் பிள்ளைகள் போல எல்லா வசதி, வாய்ப்புகளை செய்து கொடுக்கலாம் தானே . ஏன் இந்த அவலம் . அதே கொடுமை நிலைமை தான் வயது போனவர்களுக்கும் . தமது தாய் , தந்தை என்று பாராமல் பராமரிப்பு நிலையங்களில் பெற்றோரை கொண்டு போய் சேர்க்கிறார்கள் .

ஒருவர் , இருவர் நல்லவர்களாக இருந்தால் பயன் இல்லை . எல்லோரும் திருந்த வேண்டும் . எல்லோரும் தமது பெற்றோர்களை அவர்களது இறுதிக்காலம் வரைக்கும் கவனமாக பார்க்க வேண்டும் . நீங்கள் ஒரு திறமையான உத்தியோகத்தில் இருக்கிறீர்கள் என்றால் அதற்க்கு காரணம் உங்கள் பெற்றோர் தான் . அவர்கள் உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து , படிக்க வைத்து உங்களுக்காக உழைத்து இருப்பார்கள் . அதனை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் . நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை வரலாம் . உங்களது பிள்ளைகள் உங்களையும் இந்த நிலைமைக்கு இட வேண்டுமா ?

காலம் பதில்  சொல்லும் . பொறுத்திரு மகனே என்று சில பெரியோர்கள் சொல்லும் போது தான் அதன் அர்த்தம் உங்களுக்கு சிறிது காலத்துக்கு பிறகு விளங்கும் . ஊருக்கு உபதேசம் செய்து விட்டு நாம் நமது பெற்றோரை ஆச்சிரமங்களில் விடலாமா ? அப்படியும் செய்கிறார்கள் . தனக்கு ஒரு நியாயம் . ஊருக்கு ஒரு நியாயம் . என்ன வாழ்க்கைடா ?

சிறுவர்களாக இருக்கும் போது கவலைகள் இல்லாமல் , பெற்றோர் அரவணைப்பில் சந்தோசமாக பொழுதைக் கழிக்க வேண்டிய தருணம் . அது ஒரு வசந்த காலம் . முதியவர்கள் ஆனதும் தமது பிள்ளைகளை , பேரப்பிள்ளைகளை பார்த்து சந்தோசமாக , கவலைகள் எல்லாவற்றையும் மறந்து , பழைய ஞாபக அலைகளை மீட்டி பார்த்து இருக்கும் பொற்காலம் .

சிறுவர்கள் , முதியவர்களை அன்பாக , சந்தோசத்துடன் , இன்முகத்துடன் நாம் எல்லோரும் கவனிக்க வேண்டும் . அவர்களிடம் அன்பாக பேச வேண்டும் . சந்தோசமாக எல்லோரும் இருக்க வேண்டும் . நல்லா இருப்போம் . நல்லா இருப்போம் . எல்லோரும் சந்தோசமா இருப்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக