சனி, 31 டிசம்பர், 2011

பாலிகா அதிபருக்கு மாற்றம்.

கஹட்டோவிட்ட பாலிகா பாடசாலையின் அதிபர் ஜனாப் புஹாரி உடயார் அவர்கள் உடனடியாக மாற்றம் பெற்றுச் செல்வதாக நேற்று (30.12.2011) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


'ஆயிரம் பாடசாலைகள்' திட்டத்தின், தமிழ் பிரிவின் ஓர் அதிகாரியாக கடமை புரிவதற்காகவே அவர் இவ்வாறு மாற்றம் பெற்றுச் செல்கிறார். அவரது புதிய சேவை, 02.01.2012 திங்கள் முதல், 'இசுறுபாய'வில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக 'பாலிகா'வின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அவருக்காக 'பளிச்' பிரார்த்திப்பதுடன், புதிய பதவியின் மூலமும், இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கும், பொதுவாக எல்லா முஸ்லிம் பாடசாலைகளின் வளர்ச்சிக்காகவும் உதவ முன்வர வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

வெற்றிடமாகும் பாலிகா பாடசாலையின் அதிபர் இடத்துக்கு, பிராந்திய முஸ்லிம் பாடசாலையொன்றின் உதவி அதிபராகக் கடமையாற்றும் ஒருவர் வர இருப்பதாக ஊர்ஜிதமற்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

எப்படியோ, 2012 இல் முதன் முறையாக O/L பரீட்சைக்கு முகம் கொடுக்கவுள்ள பாலிகா பாடசாலைக்கு, ஒரு அதிபர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமாகும்.

3 கருத்துகள்:

  1. பொருத்தமான செய்தி, ஆனால், பொருத்தமற்ற நேரத்தில்.

    பதிலளிநீக்கு
  2. வல்லவனுக்கு வல்லவன் வையத்திலுண்டடா என்று சும்மா வாய்க்கொழுப்புக்கா சொல்லி வைத்தார்கள்?

    பதிலளிநீக்கு
  3. முர்சித் முஸ்தபா1 ஜனவரி, 2012 அன்று PM 12:28

    என்ன அநியாயமுங்கோ இது? ரெண்டு தலகளும் போனா (ரிஷான்+உடயார்) ரெண்டு ஸ்கூலுமே "லெப்ப இல்லாத பள்ளிக்கொடம்தான்" போங்கோ. என்ன காரணத்துக்குத்தான் இவங்க இப்படி திரீர்னு விட்டுட்டு போறாங்களோ???

    அதிபராக வருபவர் 45 வயது தாண்டியவராக இருந்தாத்தான் நல்லம் என்பது எமதூர் மக்களின் பெரும்பாலோர் கருத்து. அப்பத்தான், மனிஷனுக்கிட்ட வார மிருகக் கொணம் இல்லாமப் போகும். சிலாபம் பகுதியில் ஓர் அதிபர் ஒரு மாணவனோடு 'லிவாத்தில்' ஈடுபட்டாதாகக் கூறி அவரை போலீஸ் வரை அழைத்துச் சென்றார்கள். கேகாலை மாவட்டப் பாடசாலை ஒன்றில் உயர் வகுப்பு மாணவிகளோடு அதிபர் சிலறைத்தனமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தி ஈற்றில் பாடசாலையில் இருந்தே மகள் அவரை வெளியேற்றிவிட்டனர். ஏன் நம்ம ஊர்ப் பாடசாலை ஒன்றிலும் இப்படி ஓர் அசிங்கமாக சம்பவம் அதிபரால் திரை மறைவில் அரங்கேற்றப்பட்டதாக மக்கள் காதோடு காது வைத்தாற்போல் பேசிக்கொள்கிறார்கள்.

    அல்லாவுக்கே வெளிச்சம்!

    பதிலளிநீக்கு