வெள்ளி, 20 ஜூலை, 2012

முஸ்லிம் சமூகம் / ஜாஹிலிய்யா சமூகம் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு


- ஜா, சமூகம் கோத்திர உணர்வை முதன்மைப்படுத்த முஸ்லிம் சமூகம் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை முதன்மைப் படுத்தியமை
- ஜா, சமூகம் பாவங்கள் செய்வதை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை; முஸ்லிம் சமூகம் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளமை
- ஜா. சமூகம் அஸபிய்யா எனும் கோத்திர வெறி உணர்வுக்கு மதிப்பளித்து கோத்திரத் தலைமைக்கு மட்டும் கட்டுப்பட்டு வாழந்தமை; முஸ்லிம் சமூகம் பொதுத் தலைமைத்துவம் ஒன்றுக்குக் கட்டுப்படுகின்றமை
- சீரான குடும்ப அமைப்பு ஜா. சமூகத்தில் இல்லாதிருக்க முஸ்லிம் சமூகத்தில் இவை சீராகக் காணப்படுகின்றமை
- ஜா. சமூகத்தில் சுய நலமும் சுரண்டலும் தாண்டவமாடியபோது முஸ்லிம் சமூகத்தில் சமூக நலனை மையப்படுத்தி ஹலால்-ஹராம் சட்ட விதிகள் பேணப்பட்டமை
- ஜா. சமூகத்தில் பெண் எத்தகைய ஒரு பெறுமாணத்தையும் பெறவில்லை. முஸ்லிம் சமூகத்தில் அவர்களது சமூக அந்தஸ்து, சொத்துரிமை, திருமண-விவாகரத்து உரிமை என அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
- மனிதனின் விருப்பு வெறுப்பே செல்வாக்குப் பெற்றிருந்த ஜா. சமூகத்தில் கல்வி, ஒழுக்கவிழுமங்கள், வணக்க வழிபாடுகள் உரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை, முக்கியத்துவம் பெற்றும் இருக்கவில்லை; ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இவையனைத்துக்கும் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதோடு அவற்றுக்கு உரிய அந்தஸ்தும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டுள்ளன.
- கலை என்ற பெயரிலுள்ள சகலதுமே ஜா. சமூகத்தில் அசிங்கங்களையும் கீழ்த்தரமான ஆபாசங்களையும் வெளிக்கொணர்வனவாய் அமைந்திருந்தன. முஸ்லிம் சமூகத்தில் இவை அனைத்தும் மானுட சமூகத்தின் மேம்பாட்டை மையப்படுத்தியதாகவே அமைதிருக்கும்; அல்லாதபோது அவற்றுக்கு அங்கீகாரமோ பெறுமாணமோ கிடையாது.
- ஜா. சமூகத்தில் தக்வாவையோ ஆன்மீகப் பெறுமாணங்களையோ செயற்பாடுகளில் காண முடியாதிருந்தது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இவைதாம் உரைகற்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக