திங்கள், 30 ஜூலை, 2012

கெஸ்கின் இலவசசக் கருத்தரங்கு

கத்ர் நாட்டில் தொழில் புரியும் எமதூர் மக்களின் கல்வி நிறுவனமான கெஸ்க், தனது கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சாதாரண தர மாணவிகளுக்கு இலவசக் கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டக் கருத்தரங்கு கடந்த 29. 07. 2012 ஞாயிறு காலை 8.45 மணியளவில் பாலிகாவில் ஆரம்பமாகியது. குறித்த கருத்தரங்கில் இடம் பெற்ற விஞ்ஞஆன பாடத்துக்கான விரிவுரையை, திஹாரிய அல்-அஸ்ஹர் ம. கல்லூரியின் பிரபல விஞ். ஆசிரியர் ஜனாப் ஹாஜா மொஹிடீன்  நிகழ்த்திச் சென்றார்.

இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த வாரங்களில் ஏனைய பாடங்களுக்கான கருத்தரங்குகளும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இக்கருத்தரங்குகளில் ஏனைய சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் மாத்திரம் கலந்துகொள்ள முடியும்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை கணிதக் கருத்தரங்கு நடைபெறும். ஜனாப் ரிஸ்வான் ஆசிரியர் விரிவுரை நிகழ்த்துவார்.

ஏற்பாட்டுக் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக