சனி, 21 ஜனவரி, 2012

பாலிகாவில் இல்ல விளையாட்டுப் போட்டி

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வீத்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் வியாழக்கிழமை (26.01.2012), பாடசாலை மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதிபர் M.R.F. பர்ஸானா அவர்களின் தலைமையில், ஸபா, மர்வா, மினா ஆகிய இல்லங்களுக்கிடையில்  நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளுக்கு பிரதம அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினர் சந்தியா சிரிவர்தன அவர்களும்  கம்பஹா- மினுவாங்கொட வலய தமிழ் மொழி மூல பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாபா அரூபா அஸ்ஹர் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வரலாற்றில் முதல் தடவையாக, பாலிகா மாணவிகள், இந்த வருடம் டிசம்பரில் O/L பரீட்சை எழுதவுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக