ஞாயிறு, 23 ஜனவரி, 2011

மாவீரன் நெப்போலியன் இஸ்லாத்தில் !?

அன்பான வாசகர்களே! இதில் நீங்கள் வாசிக்கப் போகும் நெப்போலியன் தொடர்பான - அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்ற - விடயம் உண்மயில்  வெறுமனே ஒரு கதையல்ல; மாற்றமாக ஒரு நிஜம்; இதுகாலவரை வெளியிடப்படாத ஒரு நிஜமான நிஜம். 2000ம் ஆண்டு இந்திய சஞ்சிகையான "சமரசத்தில்" வெளி வந்தது. இந்த வரலாற்று உண்மையை இதோ உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.


 கி.பி. 1787 இலும்  கி.பி. 1792 இலும் France  நாட்டில் புரட்சி வெடித்து மன்னன் 16ம் லூயி ஆட்சி துறந்து கி.பி. 1796க்குள் மாவீரன் நெப்போலியன் பிரென்சுப் படைகளின் தலைமைத் தளபதியாக உயர்வு பெற்றான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கோசங்கள் பிரெஞ்சு மன்னில் எழுப்பப்பட்டன. அதன் எதிரொலி உலகின் பல பாகங்களிலும் கேட்க ஆரம்பித்தது.

இந்தப் புரட்சிக் கோசத்தை வரவேற்ற முதல் இந்திய மன்னன் திப்பு சுல்தான் மட்டுமே. அன்றே ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளில் புரட்சி முழக்கங்களைக் கூறிக்கொண்டு மக்களூர்வலத்தை நடாத்திக் காட்டினார் திப்பு சுல்தான். பிரான்ஸில் ஜனநாயகக் குடியரசு ஏற்பட்டதும் மைசூரின் தலை நகரில் 108 பீரங்கிக் குண்டுகள் முழங்க அதனை வரவேற்றார். "புரட்சிக் கழகம்" என்றதோர் அமைப்பை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்பு சுல்தான் ஆரம்பித்தார். பிரெஞ்சுக் கடற்படை அதிகாரி "ரிப்பாடு" அக்கழகத்தின் தலைவராகக் கடமையாற்றினார்.

திப்பு  அக்கழகத்தில் தன்னை ஓர் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டார். "குடியரசின் குடிமகன்" என்ற பட்டத்தை அப்புரட்சிக் கழகம் மன்னன் திப்புவுக்கு வழங்கியது. 1797ல் பிரெஞ்சுக் குடியரசின் தேசியக் கொடி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பொது மக்கள் முன்னிலையில் ஏற்றி வைக்கப்பட்டது. இதனை 1985ல் பிரான்ஸின் தலை நகர் பரிஸில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி உரை நிகழ்த்திய போது  " 1792ல் பிரான்ஸின் தலை நகரம் பாரிஸில் மக்கள் புரட்சி ஆரம்பமாகிச் சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை என்ற சங்கநாதம்  எழுந்தது. இது இந்தியாவிலும்  எதிரொலித்தது. திப்பு சுல்தானின் தலை நகர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அன்றைய தினமே இப்புரட்சிக்கு குரல் எதிரொலித்திருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு விடயமாகும்" என்று கூறினார்.

மக்களாட்சி மலர்ந்ததன் சிறப்பை அங்கு கூடியிருந்த மக்களுக்கு திப்பு எடுத்து விளக்கினார்.  முற்போக்குச் சிந்தனைகளை மனமுவந்து ஏற்று மக்கள் முன்பு அதைச் செய்து காட்டிய இந்திய மன்னர் திப்புசுல்தான் ஒருவர் மட்டுமே!

நெப்போலியனின் வெற்றிகள்
நெப்போலியன் ஜெர்மனி, ஆஸ்திரியா இவற்றை வென்று ரஷ்யாவில் மாஸ்கோ வரை வென்றுவிட்டார். பல போர்களில் ஆங்கிலேயர் நெப்போலியனிடம் தோல்வி கண்டனர். இந்தியாவின் தென்னகத்தில் பரவலான பல இடங்களில் திப்பு சுல்தானிடம் தோல்வி கண்டனர். இதனை அல்லாமா இக்பால் அவர்கள் திப்புவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது "அன்று கிழக்கு தூங்கிக் கொண்டிருந்த வேளை அவன் மட்டும் தான் விழித்திருந்தான்" என சிறப்பித்தார். நெப்போலியனின் வெற்றிகள் தொடர்ந்த வேளை இந்தியாவில் நெப்போலியனுக்கும் திப்புவுக்கும் கடிதத் தொடர்புகள் ஆரம்பித்தன.

மாவீரன் நெப்போலியன் நைல் நதிப் பகுதியை வென்ற பின் இந்தியா மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். இதனையே திப்புசுல்தான் ஆவலோடு எதிர்பார்த்தார். கி.பி.1798 ஜனவரியில் பெரும்படையுடன் மத்திய தரைக்கடலைக் கடந்து அரபிக்கடலைக் கடந்து கி.பி.1798 மத்தியில் இந்தியக் கரையை அடைவதே மாவீரன் நெப்போலியனின் திட்டம். இத்திட்டம் திப்புசுல்தானிடம் தெரிவிக்கப்பட்டதும் ஆங்கிலேயரின் எதிர்ப்பை மீற் பாண்டிச்சேரியில்  உள்ள பிரெஞ்சு கவர்னரிடம் 1798ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி மாவீரன் நெப்போலியன் அதேயாண்டு ஜூனில் அலக்ஸாந்திரியா துறைமுகத்தில் படையிறங்கினர். இருபதே நாட்களில் கெய்ரோ நகர்  வீழ்ந்தது. எகிப்தை ஆண்ட துருக்கிய உஸ்மானிய சுல்தானின்  பிரதி-நிதி மாவீரன் நெப்போலியனிடம் சரணடைந்தார்.

திப்புவின் தூதுவரும் நெப்போலியனும்
நெப்போலியன் கெய்ரோவில் முகாமிட்டிருக்கும் வேளையில் திப்புவின் பிரதி-நிதி மீர் அலி கான் அவரைச் சந்த்தித்தார். திப்புவின் கருத்துக்களை நெப்போலியன் நங்கு கேட்டறிந்தார். ஆங்கிலேயரை விரட்டியடிக்க இது நல்ல தருணம் என்றும் அப்போதுதான் ஐரோப்பவிற்கே பாதுகாப்பு என்றும் இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் உலக சரித்திரமே மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்ட திப்புவின் சீரிய கருத்தைச் சரியென நெப்போலியன் ஏற்றுக் கொண்டார்.

திப்புவிற்கு நெப்போலியன் கடிதம் ஒன்றை மீர் அலி கானிடம் தருகிறார். கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அவர் வரும் வழியில் "ஹஜ்" கடமையை நிறைவேற்றும் பொருட்டு மக்காவில் தங்கிய சமயம் பிரிட்டஷ் அரசாங்கத்திட சிக்கிக் கொண்டார். நெப்போலியனின் கடிதம் பறிக்கப்படுகிறது. இக்கடிதத்தால் நெப்போலியன் - திப்பு ஆகிய இருவருக்குமான உறவு ஆதாதாரத்துடன் ஆங்கிலேயருக்குத் தெரிந்தவுடன், முதலில் திப்புவை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்து  1798 ஏப்ரில் 26ல் வெல்லெஸ்லி பிரபுவை பிரிட்டிஷ் அரசு இந்தியக் கரையில் இறக்கியது.

போப்பாண்டவருடன் நெப்போலியன் மோதல்
ஜோஸப்பைன் என்ற மனைவி மூலம் நெப்போலியனுக்கு குழந்தைகள் இல்லை. ஆதலால் மறுமணம் செய்ய எண்ணிப் போப்பாண்டவரிடம் அனுமதி வேண்டினார். போப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பது சட்டம். அரசர் கூட அவரது கட்டளையை மீறக்கூடாது. ரோமிலுள்ள போப்பின் அதிகாரத்தை மீறினால் மார்க்கப் பிரஷ்டம் (நீக்குதல்) செய்யவும் போப்புக்கு அதிகாரம் உண்டு. இரண்டாம் திருமணத்திற்கு நெப்போலியனுக்கு அனுமது மறுக்கப்பட்டதோடு அவரை மார்க்கத்தில் இருந்தும் விலக்கி விடுவேன் என்றும் போப் பயம் காட்டியதால் 1798 ல் போப்பின் மேலாதிக்கத்தை நெப்போலியன் பிரான்ஸிலிருந்து நீக்கிவிட்டார்.  இந்த மோதலின் உச்சக் கட்டத்தில்தான் எகிப்தின் மீது படையோடு வந்தார் வீரர் நெப்போலியன்.

நெப்போலியனும் இஸ்லாமும்
கெய்ரோ நகரில் முஸ்லிம் மார்க்க அறிஞர்களை அழைத்து அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறியும் வாய்ப்பைப் பெற்றார் நெப்போலியன். ஏற்கனவே பிரெஞ்சு மொழியில் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இஸ்லாம் பற்றிய வேறு நூல்களும் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டிருந்தன. இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் கெய்ரோவில் அடிக்கடி உரையாடல்கள் நடத்தி இஸ்லாம் பற்றி நன்கு தெளிவானார் நெப்போலியன்.

இஸ்லாமியக் கோட்பாட்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நெப்போலியன்
இஸ்லாமியத் திருமணம், தலாக், பலதாரமணம் போன்றவை குறித்தும், நடைமுறையில் இவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் நெப்போலியன் தெரிந்து கொண்டபின் நிஜமான நடைமுறை வாழ்க்கைக்கு இஸ்லாமியக் கருத்துக்கள் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்றும் மனதார மிகவும் பாராட்டியதோடு கெய்ரோவிலுள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய தமது கருத்தை வெளியிட்டார் நெப்போலியன்.

திப்புவின் தூதர் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்ற நெப்போலியன்
இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம் என்று பகிரங்கமாகக் கூறியதோடு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் முன்னிலையில் திப்புசுல்தானின் தூதர் மீர் அலிகான் (எகிப்தில்) அங்கிருந்த போதே கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டார் அம்மாவீரன் நெப்போலியன். இறைவனுக்கே புகழனைத்தும்! இவ்விபரங்களை மீர் அலிகான் திப்புசுல்தானிடம் தெரிவித்த பொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினார் திப்புசுல்தான். நெப்போலியன் தமக்கு எழுதிய கடிதம் பறிபோனதைக் கூட மறந்து மீர் அலிகானிடம் இவ்விபரம் பற்றியே அதிகம் விசாரித்தாராம் திப்புசுல்தான்.

எதிர்பாராத ஏமாற்றம்
எகிப்தில் பிரெஞ்சுப்படைகள் நைல் நதியில் நடைபெற்ற போரில் எதிர்பாராத விதமாகத் தோல்வி முகம் காண ஆரம்பித்ததும், மாவீரன் நெப்போலியன் இந்தியா வரும் எண்ணத்தைக் கைவிட்டு சிரியாவின் பக்கம் திரும்பி, பின் ஐரோப்பாவுக்குத் திரும்பி விட்டார். இந்நிகழ்வு திப்புசுல்தானுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

நெப்போலியனின் தோல்வி
கி.பி.1810ல் தம் 2ம் திருமணத்தை முடித்தார். கி.பி.1811ல் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்பி கி.பி.1815ல் 'வாட்டர்லூ' எனுமிடத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் ஆங்கிலேயர் வென்றனர். மாவீரன் நெப்போலியன் செயிண்ட் ஹெலீனா தீவில் சிறை வைக்கப்பட்டார்.

இஸ்லாத்தில் நெப்போலியனின் முழு ஈடுபாடும் இறையடி சேர்தலும்
சிறையிலிருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் மாவீரன் நெப்போலியன் இஸ்லாம் பற்றி ஆராய்ந்து அறிந்து எப்பொழுதும் குர்-ஆனின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பைப் படித்தபடியே இருந்தாராம். அவர் தவறாமல் தொழுகையை நிறைவேற்றி நோன்பும் நோற்றார். வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி கெய்ரோவில் நெப்போலியன் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தது உண்மை என்பதும் முழுமையான முஸ்லிமாகவே அவர் இறுதி வரை வாழ்ந்தார் என்பதும் புலனாகிறது. இறுதியாக சிறைச்சாலையில் நெப்போலியன் தங்கியிருந்த அறையில் தொழுகை விரிப்புடன் திருக்குர்-ஆன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு மட்டுமே இருந்தது என்ற உண்மையை அவரது மறைவிற்குப்பின் அங்கு சென்று குறிப்பெடுத்த சிறையதிகாரியின் ரிபோர்ட் கூறுகிறது.

ஹிந்து பத்திரிகையில் 19.12.1982 ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த ஒரு பெட்டிச் செய்தி விபரம்:
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என்ற பெட்டிச் செய்தியில் 1932ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அன்றைய ஹைதராபாத் நிஜாமின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள 'காலித்ஷெல் டிரேக்' என்ற ஆங்கில முஸ்லிம் இந்தியா வந்திருந்தார். அக்கூட்டத்தில் அவர் நெப்போலியன் தம் இறுதிக்காலத்தில் முழு முஸ்லிமாகவே வாழ்ந்தார் என்றும் நெப்போலியன் வாழ்ந்த சிறை அறையில் திருக்குர்-ஆனின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு மட்டுமே இருந்தது என்பது பல நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அந்த ஆதாரத்தை மேற்கோள்காட்டியும் விளக்கம் தந்துள்ளார். முக்கியமாக கி.பி.1815ல் நெப்போலியனை செயிண்ட் ஹெலீனா தீவுக்கு அழைத்துச் சென்ற அட்மிரல் காக்பர்ன் (COCK BURN) என்ற ஆங்கிலத் தளபதியின் செயலாளர் ஆர். குளோவர் என்பவர் எழுதி வெளியிட்ட டயரியில் இது பற்றிய உண்மைகள் புலனாகின்றன.

இறுதியாக மாவீரன் திப்புசுல்தான் கி.பி.1799 மே 4ம் திகதி தம் இன்னுயிர் நீத்தது போல், உள்ளத்தால் திடத்தால் ஆங்கிலேயரை விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தால் ஒன்றுபட்ட மாவீரன் நெப்போலியனும் கி.பி.1821ல் மே மாதம் 5ம் திகதி இறையடி எய்தினார், முஸ்லிமாக! (2011.10.20ம் திகதி திப்புசுல்தானின் 262வது பிறந்த நாள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக