வெள்ளி, 7 ஜனவரி, 2011

ஊழிய உயர்வுக்கான ஐந்து வழிகள்

1. சம்பள உயர்வு பற்றி உங்கள் தொழில் தருனரிடமோ உயர் அதிகாரியிடமோ கேட்பதற்கு முன் அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா? எந்த வகையில் நீங்கள் உங்கள் தொழிலகத்துக்கு முக்கியமான நபர்? என்பதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். "இப்ப நாம இருக்கிற லெவல்ல சம்பளம் கொடுக்கறதே பெருசு.  உயர்வெல்லாம் டூ மச்..." என்று உங்களுக்கே தோன்றினால் சம்பள உயர்வுக் கோரிக்கையை விட்டு விடுங்கள். இல்ல....வாங்கும் சம்பளம் குறைவு என்று தோன்றினால் மட்டும் கேளுங்கள்.

2. நீங்கள் செய்யும் வேலைக்கு மற்ற ஆபீஸ்களில் எந்த அளவு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். சம்பள உயர்வு பற்றிய விவாதத்துக்கு இதுவும் உதவும்.

3. ஆபீஸின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அது லாபமாக இயங்குகிறது, முதலாளியும் உயரதிகாரிகளும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே இதுபற்றிப் பேசுங்கள்.

4. எனக்குச் சம்பள உயர்வு வேண்டும் என்று முதலாளியிடமோ உயரதிகாரியிடமோ முதலிலேயே கேட்காதீர்கள். அதற்கு முன்பாக உங்கள் வேலைத்தரம், அதை உயர்த்த மேற்கொண்டும் நீங்கள் செய்ய வேண்டியவை  ஆகியவற்றைப் பற்றி விவாதியுங்கள். அதன் பிறகே சம்பள உயர்வு பற்றப் பேசுங்கள். இது அவர்களைக் கவரும்.

5. எல்லாம் செய்தும் நினைத்தபடி சம்பள உயர்வு  கிடைக்காவிட்டாலும் கவலைப்படாதீர்கள். வேலை செய்வதையும் குறைத்துக் கொள்ளாதீர்கள். முன்பைவிட கடுமையாக வேலை செய்யுங்கள்.   "சே...இவனுக்குப் போய் குறைந்த சம்பளம் கொடுக்கிறோமே" என்ற உணர்வு உங்கள் உயர் அதிகாரிக்கு நிச்சயம் வரும். பிறகென்ன...  சம்பள உயர்வுதான்.

நன்றி: குமுதம் (h.4.20rs.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக