வெள்ளி, 1 அக்டோபர், 2010

புலமைப் பரீட்சையின் மற்றும் சில முடிவுகள்

கம்பஹா வலய தமிழ் மொழிப் பாடசாலைகளில், திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலை மாணவர் ஒருவர் 181 புள்ளிகள் பெற்று மாவட்டத்திலேயே முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதே வேளை, மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஒன்பதாம் இடங்களும் அதே பாடசாலை மாணவர்களுக்கே கிடைத்துள்ளன. மொத்தத்தில், அல் அஸ்ஹரிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய சுமார் 190 மாணவர்களுள் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவப் படுத்த அவர்களது பெற்றோரால் பெறப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அனால், மாணவர்களை பரீட்சைக்குத் தயார் படுத்திய ஆசிரியர்கள் எந்த விதத்திலும் கௌரவிக்கப் படவில்லை என்பது கவலை தரும் ஒரு செய்தியாகும்.

இந்த செய்தியை வழங்கிய திஹாரிய அன்பருக்கு நன்றிகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக