செவ்வாய், 5 அக்டோபர், 2010

இதற்குப் பெயர்தான் வம்பு

விவாதம் என்பது இப்போது சாதாரணமாகி விட்டது.

எதற்காக விவாதிக்க வேண்டும்? எப்போது? எப்படி? யார்? என்று எந்த தேவையுமில்லை.

தலைப்பு, பொருள் எதுவுமில்லை.

வாதப் பிரதி வாதங்களை வைப்பதில் நன்மை விளைகிறதா? தீமை
விளைகிறதா? என்று கூட யோசிப்பதில்லை.

அதற்கும் ஒரு படி மேலே சென்று, சரியான கொள்கைகளுக்காக/ கூற்றுகளுக்காக தர்க்கம் புரியும் அதே நாவுகள், தமது கொள்கை தவறாக இருந்த போதிலும், அந்தத் தவறுகளுக்காகவும் வாதாடுகின்றன.

மார்க்கம், பொது விடயங்கள், அறிவியல்...... என்று, எல்லாவற்றிலும் அப்படித்தான்.

வேறும் சிலர், மற்றவர்களை குழப்புவதற்கென்றே வாதப் பிரதிவாதங்களை முன் வைப்பார்கள்.

இவற்றால் எங்கும், எதிலும், எப்போதும் வம்பு! வம்பு!! வம்பு!!!

கீழ்வரும் கதை அதற்கு நல்லதொரு உதாரணம்.

ஒரு முறை ஒரு கடைக்குள் நுழைந்தார் முல்லா.
கடைக்காரர் முல்லாவிடம்: "உங்களுக்கு என்ன வேண்டும்?"
முல்லா: "நான் உங்கள் கடைக்குள் நுழைந்ததை நீங்கள் பார்த்தீர்களா?"
கடைக்காரர்: "ஆமாம், பார்த்தேன்."
முல்லா: "ஏற்கனவே என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" 
கடைக்காரர்: "இல்லை." 
முல்லா: "அப்படியென்றால், கடைக்குள் நுழைந்தது நான்தான் என்று எப்படித் தெரியும்?"
கடைக்காரர்: "????!!!!"
நீங்களே சொல்லுங்கள். இது வடி கட்டிய வம்புதானே?! 

1 கருத்து:

  1. இன்னும் வம்பளந்துகொண்டிருக்கிறீர்களே..? புதிய ஆட்டிகல அப்டேட் பண்ணுங்க....!

    பதிலளிநீக்கு