புதன், 20 அக்டோபர், 2010

கருணா அம்மான் மன்னிப்புக் கோர வேண்டும். - பிள்ளையான்

 கிழக்கு மாகாணத்தில் 1990 இல் இடம்பெற்ற 600 பொலீஸாரின் கொலைக்குக் காரணமாக இருந்த கருணா அம்மான், அதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பெற்ற பாடங்கள் மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் (LLRC) முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே முதலமைச்சர் பிள்ளையான் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார். பிள்ளையானின் குழுவே குறித்த தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது. "மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலுக்காக கருணா அம்மான் மன்னிப்புக் கோர வேண்டிய ஏதும் தேவையை நீர் காண்கிறீரா?" என்று ஆணைக்குழு கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிள்ளையான் இவ்வாறு கூறினார்.

"எனக்குப் பதினாறு வயதாக இருக்கும் போது நான் "இயக்கத்தில்" சேர்ந்தேன். குறித்த இந்தத் தாக்குதலுக்காக யாராவது மன்னிப்புக் கோர வேண்டுமென்றிருந்தால், அது கருணாதான். ஏனெனில், அப்போது எமது குழுவுக்கு தலைமை வகித்தது அவர்தான்" என பிள்ளையான் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக