புதன், 20 அக்டோபர், 2010

பொன்சேகாவின் மந்திரி பதவிக்கு வேட்டு.

முன்னாள் ஜெனரல் ஸரத் பொன்சேகாவின் மந்திரி பதவி தொடர்பாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் எடுத்துள்ள நடவடிக்கை அரசியல் யாப்பின் படி மிகச் சரியானது" என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று (19.10.2010 கூறியுள்ளார். உயர் நீதிமன்ற்ததில் இந்த விடயம் தொடர்பான வழக்கு இது வரை தீர்வு வழங்கப்படாமல் இருப்பதால், பொன்சேகாவின் மந்திரி பதவி தொடர்வில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது என அவர் மேலும் கூறினார்.

ஸரத் பொன்சேகாவின் பாராளுமன்ற அங்கத்துவத்தை ரத்து செய்து, அவருக்குப் பதிலாக லக்ஷ்மன் நிபுனஆரச்சி என்பவரை பதவியேற்க செயலாளரால் விடுக்கப்பட்டிருந்த அழப்பு தொடர்பாகவே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இதே வேளை, இந்த நடவடிக்கை அனைத்து சட்டங்களுக்கும் முரமணானது என்றும் எனவே தமது கட்சியின் சார்பில் திரு. லக்ஷ்மன் இந்தப் பதவியை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை எனவும் டில்வின் சில்வா கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பில் நியாயம் பெறுவதற்காக நீதிமன்றத்தின் துணையை நாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக