வெள்ளி, 1 அக்டோபர், 2010

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு ..! ..?

தீர்ப்பா அது?.....

மூன்று நீதிபதிகளாலும் மூன்று விதமான தீர்ப்புகள்..?!

இது அயோத்தியின் பூர்வீகத்தை தெளிவு படுத்துவதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பாகப் படவில்லை. மாறாக, கலவரம் தவிர்க்கப் படவேண்டும் என்பதற்காக ஏலவே திட்டமிடப்பட்ட தீர்ப்பாகவே படுகிறது. இல்லாவிட்டால், 60 வருட கால நீண்ட வழக்கைக் கூட, திருப்தி தரும் உறுதியான முடிவுகளுடன் வெளியிட முடியாதா?

பாபர் பள்ளிவாசலைக் கட்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லையாம்! ஆனால் அதற்கு முன் இராமருக்குக் கட்டிய கோயில் என்பதற்கு ஆதாரம் உண்டாம். இங்கேதான் இடிக்கிறது இந்த தீர்ப்பு. காப்பியத்தில் வந்த இராமரை உண்மையாக்கி, வரலாற்று நாயகனான பாபரை இல்லாமலாக்கும், முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியல்லவா இது?

அத்துடன், இரண்டு நீதிபதிகள் 'ராமர் ஜன்ம பூமி'க்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பதுடன் யாருக்கோ பயந்திருக்கிறார்கள் என்பதும் புலப்படுகிறது.

மத சார்பற்ற ஒரு நாட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பாக இது படவில்லை.......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக