செவ்வாய், 7 செப்டம்பர், 2010

துர்ப்பாக்கியம் அடைவோர் யார்?

யாருடைய தௌபா அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப் படவில்லையோ, அவர்களே மனிதர்களுள் மிகவும் துர்ப்பாக்கியசாலிகள். இந்த துர்ப்பாக்கியம் நீங்குவதற்காகவே இறைவனால் வழங்கப்பட்டதுதான் ரமழான். அதிலும் மிக உன்னதமான சந்தர்ப்பம்தான் புனித லைலதுல் கத்ர். மனிதனைப் புனிதனாக்குவதற்காகவே வருகின்ற இந்தப் புனித இரவிலும் மன்னிப்புப் பெறாதவனின் நிலையை என்னவென்று சொல்வது?

எத்தனையோ கோடானுகோடி மக்களின் தௌபா ஏற்றுக்கொள்ளப்படும் இந்த இரவில், நான்கு பிரிவினரின் தௌபாவை இறைவன் ஏற்பதில்லை.
  • 1. மது அருந்துபவன்
  • 2. பெற்றோருக்கு நோவினை செய்பவன்
  • 3. இனபந்துக்களை துண்டித்து வாழ்பவன்
  • 4. பொறாமை கொண்டு சச்சரவு செய்பவன்
இந்த நான்கு பிரிவினரிலும் ,அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றில் அடங்குபவர்களா நாம்? அவ்வாறெனின், நம்மைப்போல் துர்ப்பாக்கியசாலிகள் யாருமே இல்லை!

நஊதுபில்லாஹி மின்ஹா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக