சனி, 18 செப்டம்பர், 2010

டெங்கு நோய்: பாதுகாத்தல் நம் ஈமானியக் கடமை!

இலங்கையில் இவ்வருடத்தில் இன்றைய தினம் வரை 218 பேர் டெங்கு நோயினால் மரணமடைந்தும் மேலும் 30712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் உள்ளதாக டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எமது ஊர் மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்த 369/A கஹட்டோவிட்ட பிரிவைச் சேர்ந்த கிராம சேவை அதிகாரி கூறினார்.

கடந்த சில தினங்களாக,  டெங்கு தடுப்பு பிரிவின் சுற்றுப்புறச் சூழலை அவதானிக்கும் குழுவினர், எமது ஊரில் தேடுதல் நடத்தியது பற்றிய செய்திகள் ஏற்கனவே எமது சகோதர தளங்களில் வெளியாகியிருந்தன. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே இந்த தகவலை குறித்த அதிகாரி தெரிவித்திருந்தார். சுற்றாடலை சுத்தமாக பேணத்தவறும் நபர்களுக்கு எதிராக, பொது சுகாதார சேவை அதிகாரி(PHI)யுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுத்தம் ஈமானில் பாதி என்கிறது நமது மார்க்கம். எனவே, சுத்தம் பேணாதோர் ஈமானில் பாதியை இழந்தோராவர். சுத்தம் பேணி, ஈமானையும் பலப்படுத்துவோம்.

1 கருத்து: