ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி?!

கொழும்பு: பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுவதாக புனே குண்டுவெடிப்பு  வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி கூறியுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுதவறானது, இலங்கையில் யாருக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை என்று இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரான கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.

புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் 29 வயதான மிர்ஸா ஹிமாயத் பேக். இவர்தான் இந்த சதித் திட்டத்தின் முக்கிய காரண கர்த்தா. இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், லஷ்கர் போராளிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை கோத்தபயா மறுத்துள்ளார். இதுகுறித்து கோத்தபயா கூறுகையில், இலங்கையில் தற்போது எந்த தீவரவாத இயக்கமும் இல்லை, தீவிரவாதிகளும் இல்லை. யாருக்கும் இங்கு எந்தப் பயிற்சியும் கொடுக்கப்படவும் இல்லை. பயிற்சி முகாம்களும் நடத்தப்படவில்லை.

இலங்கை தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு விட்டது. இங்கு தீவிரவாதிகள்  நடமாட இடமே இல்லை, வாய்ப்பும் இல்லை என்றார் கோத்தபயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக