ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

"பாகிஸ்தான் வெள்ளம்: சொல்லி முடியாத துயரம்!" நிவாரணக்குழு கவலை.

பாகிஸ்தான் வெள்ள நிவாரண உதவிக்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய மருத்துவ சங்கத்தின் அழைப்பை ஏற்று, கடந்த 05.09.2010 இல் பாகிஸ்தான் பயணமான ஐந்து பேர்களடங்கிய வைத்தியக் குழு நேற்று முன் தினம் நாடு திரும்பியது. இரவு சுமார் 10:30 மணியளவில் கட்டுனாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்தக் குழுவில், எமது மண்ணின் மைந்தர்களுள் ஒருவரான டொக்டர் பாயிக்கும் ஒருவர். விமான நிலையத்தில் வந்து இறங்கியவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அழைத்துச் சென்றனர்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் துயர்மிகு நிலைமைகளை நேரடியாகக் கண்டவர்கள் இவர்கள். பாகிஸ்தான் மக்களின் நிலவரம் பற்றி இவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் அனைவரும் ஏகோபித்து சொன்ன விடயம், "சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடின்றி பசியாலும் நோய்களாலும் கண் முன்னாலேயே மக்கள் இறக்கிறார்கள். நாம் அங்கு போய் அவர்களுக்கு செய்த சேவை மிக மிகச் சொற்பமே. அவர்களுக்காக நம் நாட்டு முஸ்லிமகள் அனைவருமே உதவ முன்வர வேண்டும். எமது உலகளாவிய சகோதரத்துவத்தைக் காட்ட இதைத் தவிர வேறு சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கும்" என்பதுதான்.

இந்த ஐவர் அடங்கிய குழுவின் சேவைகள் பற்றி, பொதுவாக பாகிஸ்தானின் எல்லா மீடியா சேவைகளும் சிலாகித்துக் கூறியுள்ள அதே வேளை, அல் ஜஸீரா உலக சேவையும், அவர்களது சேவைகளப் பாராட்டி, தமது செய்தியில் அறிக்கை இட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக