புதன், 22 செப்டம்பர், 2010

பாபரி மஸ்ஜித் உடைப்பு மீதான வழக்குத் தீர்ப்பு வெள்ளிக்கிழமை. இந்தியாவெங்கும் ஒரே பதற்றம்.

பல வருடங்களுக்கு முன் இந்துத் தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் மீதான வழக்குத் தீர்ப்பு நாளை மறுநாள் (24.09.2010) அலஹாபாத் உயர் நீதி மன்றத்தில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமானதா? இந்துக்களுக்கு சாதகமானதா? என்ற விபரங்கள் இதுவரை தெரியவில்லை. எனவே, இரு சாராரும் தங்களுக்கு சார்பாக தீர்ப்பு அமைய வேண்டுமென பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே வேளை, தீர்ப்பு எப்படி அமைந்தாலும் கலகம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்திய மத்திய அரசு பாதுகாப்பை உசார் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தீர்ப்பு வெளி வருவதற்கு முன்னரே "செப்டம்பர் 24 க்குப் பின் ராம ஜென்ம பூமியில் ராமர் கோயிலை அமைத்தே தீருவோம்" என, பாபரி மஸ்ஜித் உடைப்பில் முக்கிய பங்கு வகித்த  RSS அமைப்பு சூளுரைத்துள்ளது.

இந்தியாவின் மிக நீண்ட வழக்கான 'பாபரி மஸ்ஜித் - ராம ஜன்ம பூமி' வழக்கைக் கையாண்ட மூன்று நீதிபதிகளை கொண்ட குழு, தீர்ப்பு வழங்க முன்னரும் தீர்ப்பின் பின்னரும் தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக