வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஸார லங்கா பள்ளிவாசலின் புதிய கட்டடம் திறந்து வைப்பு.

ஸார லங்கா பள்ளிவாசலின், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. இன்று பெருநாள் தொழுகைக்கு முன் திறந்து வைக்கப்பட்ட இந்தக் கட்டடத்தைப் பார்வையிடுவதற்கு, இதற்கான பண உதவிகளை வழங்கிய அரேபியாவைச் சேர்ந்த கொடை வள்ளல் வருகை தந்திருந்தார். கட்டட திறப்பு வைபவத்தின் பின்னர், பள்ளிவாசல் இமாம் மௌலவி ரிபாய் அவர்களின் தலைமையில் பெருநாள் தொழுகையும் குத்பாவும் நடாத்தப் பட்டன.

கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தில் சில குறைபாடுகளை, வருகை தந்த பரோபகாரி சுட்டிக் காட்டியதுடன், பள்ளிவாசலுக்கு அருகில் பாலர் பாடசாலை ஒன்றை நிர்மாணிக்க உதவுதாகவும் வாக்களித்துள்ளார்.

இந்த பரோபகாரிக்கு அல்லாஹ் மென்மேலும் நிஃமத்துக்களை அள்ளி வழங்குவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக