வெள்ளி, 17 செப்டம்பர், 2010

எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம்! கடவுளுக்கு.....................?........!!

அமெரிக்க மற்றும் சர்வதேச மனித உரிமை சாசனத்தின் படியும் கருத்துச் சுதந்திரத்தின் படியும், குர்ஆன் எரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என ஒபாமா உட்பட அதிகாரிகள்  கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், குர்ஆனும் இறைவனுடைய வார்த்தைதான். அந்தக் கருத்துக்கும் அதே நியதிகளின்படி சுதந்திரம் இருக்கத்தானே வேண்டும். எனவே, குர் ஆனை எரிப்பதும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதும் உரிமை மீறலும் அல்லவா? அப்படியிருக்க, குர் ஆன் எரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வைக்குள் அமெரிக்கா தன்னை மறைக்க முயல்வது கபடத்தனமானது. அத்துடன், 'இந்த சாசனகளின் மூலம் வழங்கப்படுகின்ற சுதந்திரம், வேறு ஒரு நபருக்கோ குழுவுக்கோ எதிராக செயல்பட அனுமதிக்காது' என்ற மனித உரிமையையும் அமெரிக்கா தனக்கு சார்பாக மறைக்க முயல்கிறது. எனவே, 'கருத்துச் சுதந்திரத்தை மதித்தல்' என்ற அமெரிக்க உளரல் போலியானது! நியாயமற்றது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக