செவ்வாய், 7 செப்டம்பர், 2010

இலங்கை கிரிக்கெட் - ஆட்ட நிர்ணய சூதாட்ட சர்ச்சை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதும், ஆட்ட நிர்ணய சூதாட்ட சர்ச்சை திரும்பியுள்ளது. அண்மையில் பாகிஸ்த்தானில் மூவர் ஸ்பார்ட் பிக்சிங் சூதாட்டம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் ஐசிசி அவர்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மும்பையின் சூதாட்டக்காரர்கள் சிலர் எம்மை மேட்ச் பிக்ஸிங்கிற்காக அழைத்தது வங்கதேசம், அஸ்திரேலியா என்பனவும் பரபரப்பு புகார் கொடுத்தன.

இந்நிலையில் கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற டுவெண்டி20 உலக கிண்ண போட்டிகளின் போது, இலங்கை அணி வீரர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரிவு கூர்ந்து கவனித்திருக்கிறது.

சட்டவிரோத சூதாட்ட முகவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருடன் இரவு நேரத்தில் அதிக நேரம் பழகிவந்ததை அடுத்து தமக்கு சந்தேகம் ஏற்பட்டதாக அப்பிரிவு முறையிட்டுள்ளதென த கார்டியன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கிரிக்கெட் சபை ஊழலுக்கு எதிரான பிரிவினரால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்ககாரவிடம் தெரிவிக்கப்பட்டது. குறித்த வீரர் மீது உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளும் படி உத்தரவும் இட்டது.

எனினும், இவ்விசாரணையில் முன்னேற்றமில்லை என ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹாருன் லோகார்ட் இவ்விடயத்தில் தனது பொதுவான ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக